குவைத் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கே.பி.டி.சி (குவைத் பொது போக்குவரத்துநிறுவனம்)பேருந்து கட்டண உயர்வை உயர்த்தி அதில் பயணம் மேற்கொள்வோருக்கு அதிர்ச்சியில் ஆழ்த்திய உள்ளது.
செழித்து,கொழுத்து வளர்ந்துக்கொண்டிருக்கும் எண்ணைவளம் கொண்ட நாடு எனப் பெயர் புகழ் கொண்டிருக்கும் வளைகுடா மன்னார் குவைத்தில் அதிரடி மாற்றங்கள் வந்துக்கொண்டே உள்ளது .சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்துத்துறையில் புதிய போக்குவரத்து சட்ட விதிகள் அபராதம் விகிதத்தை மாற்றம் செய்தது .குறைந்த சம்பளம் தொடர்பாக வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக எடுத்துக்கொண்ட முடிவில் குவைத் மத்திய அரசாங்கம் இவர்களுக்கு சம்பளம் உயர்வுப்படுத்தி கட்டணத்தை உயர்த்த செய்தார்கள் மீண்டும் உயர்த்த செய்திருப்பது வருந்தக்கூடியதாகும் .இந்த பேருந்து கட்டண உயர்வால் சாமானிய மக்களான வெளிநாட்டவருக்கே இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது .

இன்று பேருந்து பயணம் மேற்கொள்பவர்களில் பெரும்பாலும் ஆசிய நாட்டைச் சார்ந்தவர்கள் ஆவார்.இந்தியா, இலங்கை ,வங்காளம் ,பிலிபைன்ஸ்,போன்றவர்களுக்கு இதுப்போன்ற கட்டண உயர்வால் பாதிப்பிற்குள்ளாக்கும் . ஏற்கனவே கட்டண விகிதம் 150 குவைத்ததி பில்சிலிருந்து 200 பில்சாக மாற்றியமைத்து தற்போது 200 பில்சிலிருந்து 250 பில்சாக மாற்றம் செய்திருக்கிறது .
மேலும் தொடர்ந்து இந்த நாட்டில் எல்லாப் பொருட்களின் விலைகள் ஏறுமுகமாக உள்ளதால் நாமனைவரும் தாயகத்தில் இறங்கும் நிலை வந்துள்ளது.