கூனிமேட்டில் இன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை துவக்கம் .


அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அறிமுகம் செய்து துவக்கி உள்ளது.

இந்தியாவில் வங்கி தரப்பட்டியலில் முதன்மை வகிக்கும் ஐ .ஒ .பி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நேற்று கூனிமேடு பாரத ஸ்டேட் வங்கி கிளை அருகில் புதிய கிளையை தொடக்கி உள்ளது . வங்கிகளின் பார்வை கூனிமேட்டின் பக்கம் வந்துள்ளது ஊருக்கு பெருமைதான் .மேலும் நீண்டு நெடு வரிசையில் நின்று காலதாமதம் ஆக்கிக் கொள்ளாமல் புதுவையைப்போன்று உடனடி சேவை செய்ய இதுப்போன்ற வங்கிகளின் வரவு நெருக்கடியை ஏற்படுத்தும்.இதனால் {கணக்குதாரர்} வாடிக்கையாளர்களிடம் வங்கி ஒத்துழைப்புத் தர இலகுவாகும்.மேலும் ஐ சி சி .வங்கியின் கிளை மிக விரைவில் வர உள்ளதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் .

பல்லாயிரம் கணக்கு தாரர்களைக் கொண்ட ஸ்.பி ஐ வங்கியின் உறுப்பினர்கள் திரிய {பிரிய }வாய்ப்புள்ளது .எந்த வங்கி வந்து அமைந்தாலும் அந்த வங்கி விரைவு சேவை செய்து முடிக்கும் வங்கிகளுக்கே கணக்கு தாரரின் முன்னுரிமை வழங்குவார்கள் இதனால் வரும் மக்கள் குறையை தீர்த்து வங்கி இலாபகர கண்ணோட்டத்தில் பார்க்காமல் எந்த வேலைபாடுகள் இருந்தாலூம் மக்களுக்கு இடையூறு தராமல் காலம் தாழ்த்தி சேவை உயர்நோக்கம் கொண்டு இயங்கும் எந்த வங்கிக்கும்இந்த கூனிமேட்டின் ஆதரவு உண்டு .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்