2.காக்கை கத்தினால் தபால் வரும்
3.மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம்
4.கல்லாப் பட்டறை மேற்குத் திசையில் தான் இருக்க வேண்டும்
5.சமையல் அடுப்பு கிழக்குத் திசையில் தான் இருக்க வேண்டும்
6.வீட்டு வாசல் மையப் பகுதியில் இருப்பது கூடாது.
7.குழந்தை தொட்டிலில் மஞ்சளைக் கட்டித் தொங்க விடுவது
8.வீடுகளில் தாவீஸ் தகடுகளைத் தொங்க விடுவது
9.பூனை குறுக்கே சென்றால் அபசகுணம்
10.விதவைப் பெண் குறுக்கே சென்றால் அபசகுணம்
11.திருமணத்தில் வாழைக் குலைகளை மரத்துடன் கட்டி வைப்பது
12.ஆரத்தி எடுப்பது
13.தாய் தந்தைய திருமணத்தில் ர்கள் காலில் ஸஜ்தாச் செய்வது
14.தாயத்து, தாவீஸ் அணிவது
15.தகடுகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பது
16.வீடுகள் கட்டும் போது கண் திருஷ்டிக்காக மனிதவுருவில் திருஷ்டி
பொம்மைகளை மாட்டுவது
17.பூசணிக்காயைத் தொங்க விடுவது
18.பானைகளில் புள்ளி வைத்து வீட்டு மாடிகளில் வைப்பது
19.வீட்டில் முற்றத்தில் அல்லது வீட்டுக்குள் வெள்ளை நிற கற்களை
தொங்க விடுவது
20.மிளகாய், வெற்றிலை, மஞ்சள் இன்னும் சில பொருட்களை வைத்துக் கழித்து வைத்தல் என்ற பெயரில் தலையைச் சுற்றி எச்சிலைத் துப்பி வீதியில் எறிவது
21.கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக மை போடுதல்
22.தாய், தந்தையர் மீது சத்தியம் செய்தல்; குர்ஆன் மீது சத்தியம் செய்தல்
23.உள்ளங்காலில் ஊறல் எடுத்தால் தபால் வரும் என்ற நம்பிக்கை
24.தாலி கட்டுதல், கோதுமை, பவளம், கருகமணிபோன்றவற்றைக்
கோர்த்து தாலி கட்டுதல்
25. திருமணத்தில் மாலை மாட்டுதல்
26. மணமகள், மணமகன் வீட்டிற்குள் நுழையும் போது படியரிசி போடுதல்
27. மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சள் பையில் வைத்து அதில் மஞ்சள்,
வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து அனுப்புதல்
இது போன்ற செயல்கள் அனைத்தும் பித்அத்களாகும். இவைஅனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.
அன்புடன்
கூனிமேடுகுரல்
M.Sharfudeen