மின்சார மின் வெட்டுக்கு காரணம் என்ன ?

தொகுப்பு சகோதரர் .ஷர்புதீன்
 மனிதாபிமானி
என் மனதில் உதித்தவைகளும், சொல்ல நினைத்தவைகளும்....


தடையில்லா மின்சாரம் சாத்தியமே...எப்படி?

**********
தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?.... இம்மாதிரியான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றது இந்த கட்டுரை....

இதற்கு தீர்வென்று நீங்கள் கருதும் கருத்துகளையும் பின்னூட்டங்களாக வையுங்கள். இறைவன் நாடினால், அவை அனைத்தும் முதல்வருக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்..
**********

எட்டு மணிநேர மின் வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே கூட்டுப் பொறுப்பாளிகளாவார்கள்.

மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது விளக்குகள் எரிவதற்கும், மின் விசிறி சுழல்வதற்கும் மற்றும் நிலத்தடி நீரை மேலேற்றுவதற்குமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உபரியான மின்சாரம் இருந்தது. தனியார்களால் மின் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அந்தக்கால கட்டத்தில் வீடு வீடாக வந்து மின்சாரம் வேண்டுமா என்று மின்துறை ஊழியர்கள் கெஞ்சிக் கேட்டு மின் இணைப்புக் கொடுத்தனர்.

மேலும் மின்சாரக் கட்டணத்தைக்கூட தவணை முறை வியாபாரிகளைப் போல் வீடுகளுக்கு வந்து அலைந்து வசூலித்துச் சென்றனர். மின் உற்பத்தியை விட மின் உபயோகம் குறைவாக இருந்ததால் இந்த நிலை இருந்தது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில் மின்சாரத்தில் இயங்கும் நவீனசாதனங்களும், சொகுசான சாதனங்களும் பயன்பாட்டுக்கு வந்தன. விளக்குகளும், விசிறிகளும் சாப்பிடும் மின்சாரத்தை விட நூறு மடங்கு ஐநூறு மடங்கு என மின்சாரத்தை அதிகம் சாப்பிடக் கூடியவைகளாக இவை இருந்தன.

ஏசி, ஹீட்டர், ஃபிரிட்ஜ், ஃபிரீஸர், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோ ஓவன், டீவி, கம்ப்யூட்டர், மின் அடுப்பு, எலக்ட்ரிக் குக்கர், வேக்கம் கிளீனர், ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ், ஸ்டிரியோ சிஸ்டம், டோஸ்டர், டீ மேக்கர், காப்பி மேக்கர் மற்றும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் போன்ற அனைத்துமே மிக அதிக அளவில் மின்சாரத்தைச் சாப்பிடக்கூடியவையாகும். பயன்பாடுகளுக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வந்த ஆள்வோர் மின்சாரத்தை மட்டும் பயன்பாட்டுக்கு ஏற்ப உற்பத்தி செய்வதில் மிக மிக மந்தமாக செயல்பட்டதன் விளைவைத்தான் கடந்த சில ஆண்டுகளாக நாம் அனுபவித்து வருகிறோம்.

இதுவரையில்லாத அளவுக்கு திடீரென்று அதிகப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு மற்றொரு சிறப்பான காரணமும் உள்ளது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு விளக்கை விட அதிக மின்சாரம் தேவை. அதிகமான வீடுகளில் விளக்குகளுடனும், மின் விசிறியுடனும், வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர். மின் உற்பத்தி போதுமானதாக இல்லாத நம் மாநிலத்தில் அனைவருக்கும் இலவச கலர் டிவி கொடுக்கும் திட்டத்தினால் தான் பற்றாக்குறை தாறுமாறாக ஏறியது.

ஒரு கோடி குடும்ப அட்டைகளில் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்காவது தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுக்கப்பட்டன. தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் தினமும் 16 மணிநேரம் புதிதாக பெற்ற தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினால், எவ்வளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒரு டிவி வைத்திருந்த குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட டிவியை இயக்கும் போதும் கூடுதல் மின்சாரம் செலவாகும். இதன் பின்னர்தான் தட்டுப்பாடு தாறுமாறாக ஏறியது.

தற்போது முதல்வர் ஜெயலலிதாவும் ஏதோ ஆடுமாடுகளையோ வீடுகளையோ கொடுக்காமல் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் என்று கொடுத்து வருகிறார். இதன் மூலமும் மின் பயன்பாடு அதிகரிப்பதால் மின் வெட்டு எட்டு மணி நேரமாகும் நிலை ஏற்பட்டது. மேற்கண்ட சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருந்த மக்கள் மீது இவைகள் திணிக்கப்படுவதால் போகப்போக மின் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டுதான் வரும்.

பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலைகளை விசாலமாகவும், தரமாகவும் போடுவதற்கு அரசாங்கத்துக்கு திட்டமிடத் தெரிகிறது. மித மிஞ்சி சேமிக்கும் அளவுக்கு அரிசி உற்பத்தியைப் பெருக்கும் திட்டங்கள் மூலம் வெற்றி காணத் தெரிகிறது. ஆனால் நவீன சாதனங்களால் தாறுமாறாக உறிஞ்சப்படும் மின்சாரத்தை மட்டும் தேவைக்கு ஏற்ப அதிகரிக்க அரசாங்கத்துக்கு மனமில்லை. இதற்கு அரசியல் ரீதியான காரணங்களும் உள்ளன. சாலை போடுவது என்றால் ஓரிரு வருடங்களில் போட்டு முடித்து விடலாம். அதைச் சொல்லி ஓட்டு வாங்க முடியும். ஆனால் மின் உற்பத்தி நிலையங்களை ஓரிரு வருடங்களில் முடிக்க இயலாது.

ராஜிவ் காந்தி காலத்தில் கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையமே இப்போதுதான் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இப்போது நாம் மின் உற்பத்தித் திட்டங்களுக்குச் செலவிட்டால் உடனடிப் பலன் கிடைக்காது. நாம் தோற்றுவிட்டால் அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்குப் பெயர் கிடைத்துவிடும். நமக்கு இதில் அரசியல் ஆதாயம்  அடைய முடியாது என்று ஆட்சியில் இருந்தவர்கள் நினைக்கின்றனர்.

இதனால்தான் எத்தனையோ திட்டங்களைத் தீட்டி அதில் முன்னேற்றம் கண்டவர்கள் மின்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர். இப்போதைய ஆட்சி எவ்வளவுதான் நினைத்தாலும் ஓரிரு வருடங்களில் மின்சாரம் கிடைக்கும் வகையில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க முடியாது.

கருணாநிதி ஆரம்பித்து வைத்த சில திட்டங்கள் முழுமையடைந்தால் ஜெயலலிதா அறுவடை செய்வார். இப்போது ஜெயலலிதா ஏதேனும் திட்டத்தைத் துவக்கி வைத்தால், அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கு நற்பெயரை எடுத்துத் தர அது உதவும். நினைத்தவுடன் சரி செய்யும் அளவிற்கு மின்சார நிலைமை இல்லை என்பதுதான் யதார்த்தமான நிலையாகும். தமிழகம் எந்த அளவுக்கு மின் பற்றாக்குறையில் உள்ளது என்பதை அறிந்து கொண்டால் தான் இது உடனடியாக சரி செய்யக்கூடியதல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

மின்சாரத்தை வாட் கணக்கில் அளவிடுகிறார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்துத் தேவைகளுக்கும் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டுமானால், இப்போதைய நிலையில் 11 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும். (இந்த நிலையை நாம் எட்டும்போது மேலும் பல புதிய சாதனங்கள் வந்து கூடுதலாக 1000 மெகாவாட் தேவைப்படும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பது தனி விஷயம்)

ஆனால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 8000 மெகாவாட் மட்டுமே.  அதாவது அவசியம் ரூ.100 தேவையுள்ளவனுக்கு ரூ.65 மட்டுமே கிடைப்பது போல் மின்சாரம் மூன்றில் ஒருபங்கு பற்றாக்குறையாக உள்ளது. அதனால்தான் 24 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் எட்டு மணி நேரம் மின் வெட்டு செய்கிறார்கள். இப்போதைய நிலையில் என்னதான் தலைகீழாக நின்றாலும் 11 ஆயிரம் மெகாவாட் என்ற நிலையை எட்ட முடியாது. கூடங்குளம் மின் உலை செயல்பாட்டுக்கு வந்தால் 1000 மெகாவாட் தமிழகத்திற்குக் கிடைக்கும். இதனால் இரண்டு அல்லது மூன்று மணிநேர மின்வெட்டை சமாளிக்கலாம்.

இப்போது கிடைத்து வரும் எட்டாயிரம் மெகாவாட்  இப்படியே தொடர்ந்து கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மழை குறைந்து நீர் வீழ்ச்சி நின்று விட்டாலோ அணைகளில் தண்ணீர் குறைந்து விட்டாலோ நீர் மின்சாரம் மூலம் இப்போது கிடைத்து வரும் மின்சாரமும் குறைந்து போக வாய்ப்புள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் காரணமாகவும் அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் குறைந்து போகலாம். காற்றாலை மின்சாரத்தையும் நம்ப முடியாது. இது அடிக்கடி காலை வாரிவிடக்கூடியதாகும். புதிய புதிய திட்டங்களை இப்போதே தீட்டினால்தான் எதிர்காலத் தமிழகத்தை இருளில் இருந்து காப்பாற்ற முடியும். எவ்விதத் தட்டுப்பாடும் இல்லாமல் சூரிய ஒளியிலும் மின்சாரம் தயாரிக்கலாம். பரவலாக இதற்கான தகடுகளை அதிகமாகப் பொருத்த வேண்டும். பெரிய அளவில் இது போன்ற மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்லாயிரம் ஏக்கர் என்ற அளவில் பிரம்மாண்டமான தகடுகளை அமைத்தால் பகல் முழுவதும் மின் உற்பத்தி செய்ய முடியும்.

நிலக்கரிக்கும், நீருக்கும் அண்டை மாநிலங்களை நம்பி இருப்பது போல் சூரிய ஒளிக்காக யாரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை. ஆரம்பத்தில் இதற்கு அதிகபட்சமான செலவு பிடித்தாலும், அத்தியாவசியத் தேவைகளில் செலவு கணக்கைப் பார்க்க முடியாது. இதைப்பற்றி அரசிடம் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் இரவு பகல் என எல்லா நேரத்திலும் குறைந்த செலவில் கடல் அலைகளினால் கரையில் ஏற்படும் அழுத்தம் மூலமும் மின் உற்பத்தி செய்யலாம். தொடர்ந்து நிரந்தரமாக இதை உற்பத்தி செய்ய இயலும். இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டும் விஞ்ஞானி ஒருவரை அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களிடம் நாம் அழைத்துச் சென்று இத்திட்டத்தை விளக்கச் சொன்னோம். அவரோ "அந்த அதிகாரிகளைப் பாருங்கள்'' என்று வேறொரு அதிகாரியைக் கைகாட்டி விட்டார். அந்த அதிகாரிக்கு மின்சாரம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாததால் அவர்களால் அதைப் புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை.  இதெல்லாம் எங்களுக்கு முன்னரே தெரியும் எனவும் கூறிவிட்டார்.

மின் உற்பத்தியைப் பெருக்க இன்னும் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் அரசாங்கம் தன் கவனத்தைத் திருப்பினாலும் உடனடியாக மின்சாரம் கிடைக்கப்போவது இல்லை. போராட்டம் நடத்தினாலும் புரட்சியே வெடித்தாலும் இல்லாத ஒன்றை எந்த அரசாலும் தரமுடியாது என்பதுதான் யதார்த்தமான நிலை. இப்போதைய உற்பத்தியை வைத்துக் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.

மின் பற்றாக்குறையைச் சமாளிக்க இப்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கை முழுமையாகப் பயன்தராது. எட்டு மணிநேரம் மின்வெட்டு செய்வதால் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் மீதமாகும் என்று அரசாங்கம் தப்புக் கணக்கு போடுகிறது. இவர்கள் விடாக்கண்டர்களாக  இருந்தால் மக்கள் கொடாக்கண்டர்களாக இருப்பார்கள் என்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டது.

எட்டு மணிநேரம் மின்வெட்டால் விளக்கு, விசிறி, ஏசி ஆகிய மூன்றுதான் செயல்படாது. வாஷிங் மெஷின், ஓவன், கிரைண்டர், மோட்டார் பம்ப் உள்ளிட்ட எல்லா மின் சாதனங்களையும் மின்சாரம் வந்தபின் பயன்படுத்துவார்கள். ஓரளவு வசதி இருந்தால் ஒரு இன்வெர்ட்டர் மூலம் மின்சாரத்தை உறிஞ்சி மின்வெட்டின் போது விளக்கையும் விசிறியையும் இயக்கிக் கொள்வார்கள். எட்டு மணிநேர மின்வெட்டால் ஒரு மணிநேர மின்வெட்டின் பயன்தான் அரசுக்குக் கிடைக்கும்.

மண்டையைப் பிய்த்துக் கொண்டு பின்னர் பத்து மணி, 12 மணி என்று நீடித்துக் கொண்டே போவார்கள். இது பயனற்றதாகும். மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். நாம் முன்னரே சொன்னபடி அவசியத் தேவைக்கான மின்சாரம், சொகுசுத் தேவைக்கான மின்சாரம் எனற இரு வகைகளில் நமக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. இதை மட்டும் அதிகார வர்க்கம் சரியாகப் புரிந்து கொண்டால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க இயலும்.

விளக்கோ விசிறியோ இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. ஏசியோ ஃபிரிட்ஜோ இல்லாமல் வாழ முடியும். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு பின் வரும் யோசனைகளை அரசு செயல்படுத்தலாம். சில மணிநேர மின் வெட்டு இருந்த காலத்தில் அல்லது மின்வெட்டே இல்லாத காலங்களில் ஒரு வீட்டில் எவ்வளவு யூனிட் செலவானதோ அதில் முப்பது முதல் நாற்பது யூனிட் வரை குறைத்து இதுதான் உங்களுக்கான அளவு என்று ரேஷன் முறையைக் கொண்டு வரவேண்டும். அதாவது மின் வெட்டு இல்லாத நேரங்களில் 200 யூனிட் பயன்படுத்தி இருந்தால், அவர்களின் மின்சார ரேஷன் 140 யூனிட்டுகள்தான் என்று நிர்ணயிக்க வேண்டும்.

மின் ஊழியர்கள் 10 நாள்களுக்கு ஓரு முறை வீடு வீடாகச் சென்று உங்கள் ரேஷனில் இவ்வளவுதான் மீதம் உள்ளது என்று சொல்ல வேண்டும். அவர்கள் உபயோகிக்க வேண்டிய அளவை அடைந்துவிட்டால் அந்த மாதத்தில் எஞ்சிய நாட்களுக்கு அவர்களுக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்தலாம். ஊருக்கே நிறுத்த வேண்டியதில்லை. 

இதை கம்ப்யூட்டர் புராக்ராம் மூலமும் (gsm, micro-controller அல்லது வேறு எந்த யுக்திகளை கொண்டும்) செய்ய முடியும். அல்லது ஊழியர்களின் கண்காணிப்பு மூலமும் செய்யலாம். இப்படி ரேஷன் முறையை அமுல்படுத்தினால் குடும்பத்தவர்கள் இரவில் நிம்மதியாகத் தூங்கவும், பிள்ளைகள் படிக்கவும் தேவையான அளவுக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி சொகுசு சாதனங்களை தாங்களாகவே இயக்காமல் நிறுத்திக் கொள்வார்கள், அல்லது குறைத்துக் கொள்வார்கள்.

சொகுசு வாழ்க்கைக்கு மின்சாரம் இல்லை என்பதால் யாரும் புரட்சி செய்ய மாட்டார்கள். அடிப்படைத் தேவைக்கே இல்லாவிட்டால்தான் புரட்சி வெடிக்கும். எனவே மின்சாரம் 24 மணிநேரமும் வந்து கொண்டே இருக்கும். பயன்படுத்துவோர் சுயக்கட்டுப்பாடு செய்து கொள்வார்கள். இதன் மூலம் இருக்கும் மின்சாரத்தை வைத்தே மின்வெட்டு இல்லாமல் சமாளிக்கலாம்.

வர்த்தக நிறுவனங்கள் பொருள்களைக் கவர்ச்சியாகக் காட்டவும், விளம்பரத்துக்காகவும், தாறுமாறாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். அவர்களையும் இந்த ரேஷனில் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால், அதிக மின்சாரத்தை இழுத்துக் கொள்ளும் நியான், மெர்குரி போன்ற விளக்குகளைத் தவிர்த்துக் கொண்டு தங்களுக்கான ரேஷன் அளவுக்குள் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தொழிற்சாலைகள், உற்பத்தி சார்ந்தவை மற்றும் மேலதிகச் செலவுவகை என இரு வகைகளில் மின்சாரத்தைச் செலவிடுகின்றன. தொழிற்சாலைகள் இயங்காவிட்டால் பலரது வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் தொழிற்சாலைகளுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு குறைத்து ரேஷன் நிர்ணயிக்கலாம். இதனால் உற்பத்திக்கு மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துவார்கள். தொழிலாளிகள் வேலை இழக்கும் நிலை இதனால் ஏற்படாது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது அவசியமானதுதான். ஆனால் இரண்டு மணி நேரம் மோட்டார் இயங்கினால் போதும் என்ற நிலையில் 24 மணிநேரமும் மின் மோட்டார் இயங்கி தண்ணீரும்,  மின்சாரமும் வீணாவதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு ஏக்கருக்கு எத்தனை யூனிட் என்று நிபுணர்களைக் கொண்டு மதிப்பிட்டு ஒவ்வொரு இணைப்பிற்கும் எத்தனை யூனிட்டுகள் என்பதை நிர்ணயித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தலாம். அதுபோல் அரிசி கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்திக்கு மட்டும் இலவச மின்சாரத்தை வழங்கிவிட்டு மற்ற பணப் பயிர்களுக்கு கட்டணத்தை நிர்ணயிப்பதுடன் அவற்றிற்கும் உரிய ரேஷனை நிர்ணயிக்கலாம்.

பொதுக்கூட்டமோ மாநாடுகளோ எந்தக் கட்சி நடத்தினாலும், கொக்கி போட்டோ அல்லது இணைப்புப் பெற்றவரிடம் அனுமதி பெற்றோ மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஜெனரேட்டர் வழியாகத் தவிர வேறு வகையில் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கட் அவுட்டுகள் மற்றும் சீரியல் விளக்குகளுக்கும் இதையே சட்டமாக்க வேண்டும். ஏனென்றால் இது பலரிடம் வசூல் செய்யப்படுவதால் இதற்கு ஆகும் அதிக செலவு பொதுமக்களைப் பாதிக்காது.

மின் நிலைமை சீராகும் வரை, திருமண மண்டபங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மட்டுமே மின்சாரம் பயன்படுத்த உத்தரவிடலாம். கல்யாண மண்டபத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோர், மின்சாரத்துக்காக சில ஆயிரங்களைச் செலவு செய்ய தயங்கமாட்டார்கள். சாப்பிடவும், படிக்கவும், தூங்கவும் தடையில்லாத மின்சாரம் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்தால் மக்கள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள்.

முட்டை பல்பு எரிக்க வேண்டாம் என்றும், எல்.இ.டி. விளக்குகளையும் எல்.இ.டி. டிவிக்களையும் பயன்படுத்துங்கள் என்றும் நாம் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ரேஷன் முறையைக் கொண்டுவந்தால் பொதுமக்களே தாமாக முன் வந்து குறைந்த மின்சாரம் செலவாகும் சாதனங்களை வாங்கும் நிலை ஏற்படும்.

இதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தில் சேமிப்பு ஏற்படுவதால் சிலர் வாழ்த்தினாலும் ஆச்சரியமில்லை. தமிழக அரசும் மின்வாரியமும் இதைக் கவனத்தில் கொள்ளுமா?
உறவினருக்கும் ஏழைக்கும் நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான் - திருக்குர்ஆன் 17:26,27

நன்றி: உணர்வு வாரப்பத்திரிக்கை
எம். ஷர்புதீன் கூனிமேடு
அல் நாஸ் ஹெல்ப் லைன் தலைவர் சகோதரர் சாதிக் அவர்கள் தாயகப்பயணம் .

அல் நாஸ் ஹெல்ப் லைன் தலைவர் சகோதரர் சாதிக் அவர்கள் விடுமுறைக்காக தாயகம் சென்றுள்ளார் .
ஐம்பது நாட்களின் சிறப்பு பார்வை சிறியத் தொகுப்பு !

31 / 12 /2011 அன்று அதிகாலை சரியாக 5 : 30 மணி அளவில் அதி வேக புயல் காற்றால் நம் ஊரில் இருந்த மரங்கள் குடிசைகள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தது இதனால் எப்போதும் வெளிச்சத்தோடு காணப்படும் கூனிமேடு இரண்டு நாட்கள் இருட்டில் மூழ்கியது .

அந்த வேக புயல் காற்றிற்கு தாநேப்புயல் பெயர் சூட்டப்பட்டது .

அழ நிஸ்வான் பெண்கள் பாட சாலை மேலே அமைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தின் விளம்பர பலகை முறிந்து அந்த பாட சாலை கோபரத்தில் சாய்ந்தது . அது சாய்ந்ததால் விளம்பரபலகை சேதமடைந்தது இல்லாமல் கோபரமும் கட்டிடமும் சேதமடைந்தது . இதனால் பள்ளிவாசல் நிர்வாகம் இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் .இன்னும் அப்புறப் படுத்தாமல் சாய்ந்த நிலையில் இருப்பது வேதனைக்குரியது .

அந்த பலகை சாய்ந்ததில் ஒன்றரை இலட்சம் ரூபாய் சேதம் கூடும் நினைத்து பொதுமக்கள் வருத்தம் . பல இலட்சம் ரூபாய் கொட்டி கட்டிய கட்டிடம் சேதம் அடைந்தது சிறு துளியும் கவலைக்கொள்ளவில்லை நடவடிக்கை எடுக்காமல் அப்படியே இருக்கிறது .

செயளிழுந்து பழுதடைந்திருந்த இருந்த கூனிமேடு ஊராட்சி தற்போது தேர்தலுக்கு பிறகு சிறப்பான பனிச் செயல் .

பல ஊர்களுக்கு பல நாட்களாக கிடைத்த மின் தட்டுப்பாடு தலைவரின் முயற்ச்சியால் முதன் முதலாக கூனிமேடிற்கு கிடைத்தது  புதுவைக்கு நிகராகும் . புதுவையைத் தவிர மற்ற ஊர்களில் ஒரு மாதம் கடந்து மின்சாரம் வராதது குறிப்பிடத்தக்கது .

கூனிமேடு கிராமத்தின் உட்பட்ட கிராமத்திற்கு மின்சாரம் இல்லாததால் மின்சாரம் கிடைக்கும் வரையில் தண்ணீர் வசதி கிடைக்க நம்முடைய தலைவர் ராட்சத ஜெநெரேட்டருக்காக விழுப்புரம் மட்டும் திண்டிவனம் போன்ற ஊர்களில் அலைந்து உடனே தண்ணீர் வசதி ஏற்படுத்தி தந்தது வரவேற்க்கதக்கது .

கூனிமேடு காலனி வளைவில் நடந்த சாலை விபத்தில் செய்யான்குப்பத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக இறந்து கடந்தார் .ஆகவே அவரை ஒப்படைக்க அந்த ஊர் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தெரிவிக்கப்பட்டும் வராததால் நம்முடைய தலைவர் அதை அவசர ஊர்தியை வரவழைத்து தன்னுடைய சார்பாக ஒரு சிறியத் தொகையை  தந்து அதை மருத்தவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார் .அனுப்பினால் மட்டுமே அந்த குடும்பத்திற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கும் கருதி அனுப்பியது மனித நேய அடிப்படையில் வியக்கத்தக்கதாகும் .

முதன் முதலாக புயலால் பாதிக்கப்பட்டோருக்காக நிவாரணம் தொகையை வழங்கப்பட்டது ,இதில் சிறிது தொய்வும் சங்கடமும் ஏற்ப்பட முதலில் அரசு கூனிமேட்டிர்க்காக வழங்கியது 432 வீடுகளுக்கு மட்டும் இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் அரசு பிரதிநிதியை தலைவர் கண்டு மேலும் நம்முடைய ஊருக்கு நிதி உதவி கிடைக்க ஏற்ப்பாடு செய்தார் .

கூனிமேடு மக்கள் குரல் சார்பாக தமிழ் நாடு தவ்ஹித் மற்றும் k .i .s .k சகோதரர்கள் இணைந்து அஞ்சல் நிலையத் தெருவில் வசிக்கும் வித்யா என்கின்ற சகோதரிக்கு கல்வி உதவி வழங்கியது . அதை தலைவர் முன்னிலையிலும் விழுப்புர மாவட்ட ஒன்றிய செயலர் சகோதரர் ஜலில் அவர்களின் முன்னிலையிலும் வழங்கப்பட்டது .

சகோதரர் அசரத் சாதிக் அவர்களின் தலைமையில் இளைய சகோதரர்களுடன் பிரமாண்ட பையான் ஒன்றை ஏற்ப்பாடு செய்தனர் .அந்த பையானை சொர்ப்போழிவை ஆற்ற வேலூர் மற்றும் வேறு ஊர்களில் நல்ல பேச்சாளர்களை வரவழைத்து பையான் நடத்தியது மிகவும் அருமை .அந்த பையான் சொற்ப்பொழிவு மதியம் இரண்டு முதல் இரவு ஒன்பது வரை நீண்டது அருமை . இந்த பையானை கேட்டறிய நம்மூர் தாய்மார்கள் அலை அலையாய் திரண்டது வியப்புக்குரியது .

அந்த பையானை ஆண்களுக்கு படம் பிடிக்க சென்ற ஆசிரியருக்கும் சில வாலிபருக்கும் ஏற்பட்ட தகராறில் .ஆசிரியருக்கு கை கால் துண்டித்து விடுவதாக அச்சுரத்தல் அதையும் மீறி புகைப்படம் எடுத்து விடியும் முன் செய்திகள் வெளியிட்டது குவைத்திற்கு கிடைத்த பெருமை .

கபர்ஸ்தான் விரைந்து விரிவாக்கம் செய்துமுடிக்க வேண்டும் சகோதரர் ஜலில் அவர்கள் வலியுறுத்தல் அந்த சுவர் அமைக்கும் திறமை குவைத்தை சார்ந்த இளம் வாலிபர்களால் மட்டுமே ஊழலற்று செய்ய முடியும் என தகவல் .

கூனிமேடு பஞ்சாயத் போர்டு பிர்தௌஸ் நகர் செல்லும் வழியில் அரசு போக்கு வரத்தும் சிறிய நான்கு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்தில் ஒருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மற்றொருவரும் பரிதாபமாக உயிர் இழுன்தனர் .

பேருந்தில் செல்லும் நம்மூர் பெண்கள் நடத்துநரிடமும் அவரின் உதவியாலரிடமும் சகசமாக பழகுவது வேதனைக்குரிய விழையமாகும் .அதுவும் புர்கா உடை அணிந்து முஸ்லிம்கள் என்று காண்பித்து இஸ்லாம் சமுதாயத்தை கேவலப்படுத்துவது அரவருப்புக்குரியதாகும் .

பஞ்சாயத் போர்டு ஆசிரியர் வீட்டு எதிரில் வாடகை வீட்டில் வசிக்கும் சகோதரர் இப்ராகிம் (எ ) இப்பு அவரின் தந்தையார் உடல் நலம் குறைவாக காலமானார் .

கூனிமேடு பள்ளிவாசல் நிர்வாக முத்தவல்லி அப்துல் சத்தார் அவரின் பேத்தியும் சகோதரி உஜாளி சகோதரர் அலி அவரின் மகளின் திருமணம் மிகவும் உற்சாகமாக நடைப்பெற்றது .அத் திருமணத்தில் பேண்டு முழங்க பையான் நடிப்பெற்றது வேடிக்கையாக இருந்தது .
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹம......)

"'அல்ஹம்துலில்லாஹ்""" ..!

அன்புடையீர் , கடந்த ஐம்பது நாட்களுக்கு மேலாக இந்த வலைப்பதிவு தோய்வு அடைந்த நிலையில் மீண்டும் அதை சீர்படுத்தி மேன்மேலும் சிறப்பாக தங்களுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன் இது நாள் வரையில் தங்களுடைய ஆதரவினால் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வலைப்பதிவு திடீர் தாயகப்பயணம் மேற்கொள்ளப்பட்டதினால் இந்த தோய்வுக்கு காரணம் மேலும் என்னைத் தவிர இந்த வலைப்பதிவில் என்னுடன் எழுத்துப்பணியில் கைக்கோர்த்துக்கொள்ள எவரும் இல்லாததினால் ஒருவருக்கு தோய்வு ஏற்பட்டால் மற்றொருவர் சிறப்பாக செய்து முடிக்க ஆள் இல்லாத இக்கட்டான நிலையில் சில தருணம் கைவிட வேண்டியதாகிருந்தது.இருப்பினும் தாயகத்தில் எனக்குள் ஏற்பட்ட சில சில பிரச்சனைகள் வருத்தங்கள் நிலவிக் கொண்டிருக்கின்ற நிலையில் என்னால் சிறப்பாக தொடர முடியவில்லை என்பதுதான் உண்மை இருப்பினும் அல்லாஹ்வின் துணையால் முயற்சியோடு இனி மேலும் விடாது தர எண்ணங்கள் வைத்துள்ளேன் என்னுடன் நீங்கள் வாசகராக இருந்து படிப்பதைவிட என்னுடன் சேர்ந்து பணியாற்றிடவேண்டும் இதுவே என்னுடைய எண்ணம் இந்த வலைப்பதிவில் நான் மட்டும் ஆசிரியராக பணியாற்ற நினைக்கவில்லை நீங்கள் இதில் ஒத்துழைப்புதந்து உடனிருந்து ஓர் எழுத்தாளராகவும் ,ஆசிரியராகவும் இருந்து பணியாற்றவேண்டும் .இந்த வலைப்பதிவு முயற்சி என்னுடியதாகிருப்பினும் பலன் நம்மனைவருடைய தாக இருக்க வேண்டும் வீண்காலம் என்னுடையதாகிருப்பினும் இதில் ஏற்படும் பலன்கள் மக்களுடையதாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆர்வம் . மீண்டும் ஒருமுறை தங்களுக்கு நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன் ""இது ஒட்டு மொத்த கூனிமேடியர்களின் ஒருமைக்குரல் இது தங்கள் உரிமைக்குரல்"" - இவன் ஆசிரியர் இலக்கியன்@முபாரக்   

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்