சிறு சேமிப்பு பெரும் நன்மைக்கு வழி வகுக்கும் .!
சிறு சேமிப்பு ....
வீட்டுக்கு...இல்லறமாகும்! ..
நாட்டுக்கு ....நல்லறமாகும்!
சிறு விதை ...!
வறுமையை போக்கிட
கனியாகி , பழமாகி
சுவைக்க ...நாளை உதவும் !
நிழல் தரும் மரமாகும் .!
அடுப்பேற விறகாகும்
இலட்சியத்திற்கு சிறகாகும்
பலன் தரும் கல்விக்கு
வளர் பிறையாகும் .!
பிறருக்கு செய்யும் உதவி
நிலைத்தரும் நேர்மை .!
ஈருலகத்திலும் ...
சொர்க்கத்தை அடைய
செல்ல வழித்தரும் .!
உதவும் வழி
அறவழி ..!நாயகம்( ஸல் )
இறைவழியை நினை ஊட்டும்
இவ்வழி எளிமை ..!என்றும் தரும்
வலிமை .!
பலரும் பயன் பெறலாம் ...
சிறுக சேர்த்திடும் இருப்பு !
வறுமையை மீட்டிடும் பொறுப்பு
இறைவன் தந்திட்ட செல்வம் !
சில்லறையாக சிறு சொத்தாக.... சேமிப்பு .!
உள்ளதை உதவிடுவோம்
பெரும் கொடை
வள்ளலாக இல்லாவிட்டாலும்
மழைக்கு உதவும்
சிறு குடையாக இருப்போம் .
பலன் அளிப்போம்
பிறரின் கண்ணீரை துடைப்போம்
சிறுக சேமிப்போம் .!.
நெடு பலனை அனுபவிப்போம் ..! கவிஞர் இலக்கியன் .!
சிறு சேமிப்பு ....
வீட்டுக்கு...இல்லறமாகும்! ..
நாட்டுக்கு ....நல்லறமாகும்!
சிறு விதை ...!
வறுமையை போக்கிட
கனியாகி , பழமாகி
சுவைக்க ...நாளை உதவும் !
நிழல் தரும் மரமாகும் .!
அடுப்பேற விறகாகும்
இலட்சியத்திற்கு சிறகாகும்
பலன் தரும் கல்விக்கு
வளர் பிறையாகும் .!
பிறருக்கு செய்யும் உதவி
நிலைத்தரும் நேர்மை .!
ஈருலகத்திலும் ...
சொர்க்கத்தை அடைய
செல்ல வழித்தரும் .!
உதவும் வழி
அறவழி ..!நாயகம்( ஸல் )
இறைவழியை நினை ஊட்டும்
இவ்வழி எளிமை ..!என்றும் தரும்
வலிமை .!
பலரும் பயன் பெறலாம் ...
சிறுக சேர்த்திடும் இருப்பு !
வறுமையை மீட்டிடும் பொறுப்பு
இறைவன் தந்திட்ட செல்வம் !
சில்லறையாக சிறு சொத்தாக.... சேமிப்பு .!
உள்ளதை உதவிடுவோம்
பெரும் கொடை
வள்ளலாக இல்லாவிட்டாலும்
மழைக்கு உதவும்
சிறு குடையாக இருப்போம் .
பலன் அளிப்போம்
பிறரின் கண்ணீரை துடைப்போம்
சிறுக சேமிப்போம் .!.
நெடு பலனை அனுபவிப்போம் ..! கவிஞர் இலக்கியன் .!