தமிழகத்தில் தனி இட ஓதிக்கிடு கோரி முஸ்லிம்கள் ஆர்பாட்டம் .


இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 14.02.12 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலீ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் செய்யது அலீ முன்னிலை வகித்தார். மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:
"நாட்டின் விடுதலைக்காக கல்வியையும், வேலை வாய்ப்புக்களையும் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம் சமுதாயத்தினர். அத்ததைய முஸ்லிம் சமுதாயம் தற்போது கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கி, கூலித் தொழிலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப்பட்டறையில் கடின வேலை செய்வோராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடைகள் நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருக்கிறார்கள்.

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல் படுகின்றனர். ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்க்கின்றனர்.
இந்த அவல நிலைகளை நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தங்களது விரிவான அறிக்கைகள் மூலம் மத்திய அரசிடம் விளக்கியிருக்கின்றனர்.
* 88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்க வேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் மட்டும் தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிது.

* பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மூன்று சதவிகிதம் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையை விட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறது.
* முஸ்லிம்களின் கல்வி அரசியல் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்:
* முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம். அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 35 பேர் ஐந்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை.

* ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்பு வரை படிக்கவில்லை.
* ஷி பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 10.96% என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11 பேர் தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரண்டு வரை படித்தவர்கள் 4.53% என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் ஐந்து பேர் தான் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் .பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் மூன்று பேர் தான் பட்டப்படிப்பு படித்தவர்கள்.

* முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் இருபது காசுகளும் தான் என்கிறது அந்த அறிக்கை.அது மட்டுமின்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

முஸ்லிம்களின் அவல நிலையை மாற்றிட முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு 50 ஆண்டுகளாக முஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகின்றது. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையையும், சச்சார் கமிட்டி அறிக்கையையும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகும் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீட்டைச் சட்டமாக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது.

இதே போன்று தமிழகத்தில் தற்போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகமாக்கித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சியமைத்த பிறகு இதுவரை சட்டமன்றத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள அதிமுக அரசு முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.

மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம்களின் இந்த வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெறுகின்றது."

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி உரையாற்றினார்.
"இந்தப் போராட்டத்திற்குப் பிறகும் மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு விஷயத்தில் அலட்சியம் காட்டினால், உலகமே திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழகத்தின் தலைநகரத்தில் மாபெரும் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் சந்திக்க நேரிடும்" என அவர் எச்சரித்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்ட துணைத் தலைவர் அஹ்மது, துணைச் செயலாளர்கள் அப்துல்காதர், அபுபக்கர், சுலைமான், தொண்டரணிச் செயலாளர் சுபைர், வர்த்தக அணிச் செயலாளர் மைதீன், மருத்துவ அணிச் செயலாளர் ஏ.சி. மைதீன், மாணவரணிச் செயலாளர் அன்சாரி மாவட்டத்தின் அனைத்துக் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நன்றி :இந்நேரம் இணையதளம் .

ரமதான் மாதத்தில் வருகை விசா அனுமதி கண்டிப்பு அதிகரிக்கப்படும் உள்துறை அமைச்சகம் தகவல் .


வரவிருக்கின்ற ரமதான் மாதத்தில் சட்ட விரோதமாக உரிமையாளர்களை பிடித்து ஆவணங்கள்  சரியில்லாமல் வருகை விசா அனுமதிகோருவோருக்கு அனுமதி மறுப்பதுமட்டுமின்றி போலி ஆவணம் தயாரித்து வருகை விசாவுக்கு அனுமதி கோருவோருக்கு இந்த அரசு தண்டனையும் விதித்துள்ளது .மேலும் உருமையாளர்கள் அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு ஆவணத்தை தயார் செய்து போலி ஆவணத்தை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கும் ,உரிமையாளர் மீதும் சட்ட விரோத நடவடிக்கையின் பேரில் கைது செய்து நாடு கடத்தவும் முடிவு செய்துள்ளது .

குவைத் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வரும் ஜூலை முதல் விசா மாற்றிக்கொள்ள புதிய வாய்ப்பு !


கடந்த சில மாதங்களாக எதிர் பார்த்திருக்கும்  காதிம்  சூன் ஆகும் சட்டம் வரும் ஜூலை முதல் அமலுக்கு வரயிருக்கிறது இதை அதிகாரப் பூர்வமாக உள் நாட்டு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது .சிறிது நாட்களாக வருமென்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த சட்டம் சில நிபந்தனையின் பேரில் வெளி வர இருக்கிறது உள்நாட்டு தொழிலாளர் மாற்றம் செய்ய விரும்புவோர் தங்களுடைய உரிமையாளருக்கு நிறுவனத்தின் அங்கீகாரம் அரசில் பெற்று அந்த ஆவணங்கள் அரசு சரிப்பார்த்து அனுமதி வழங்கினால் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் . அதேப்போல தங்களுடைய உரிமையாளலிருந்து மற்றொரு உரிமையாளரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்ட லைசென்சில் ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே மாற்ற முடியும் மேலும் .

இதை கவனத்தில் கொண்டு நிறுவனம் வைத்திருக்கும் உரிமையாளரிடம் தங்களுடைய உள்நாட்டு வீட்டு விசாக்களை மாற்றிக்கொண்டு பலன் அடையவும் .அவர்களால் மட்டுமே மாற்ற முடியும் நிபந்தனை அரசு விதித்துள்ளது . மேலும் தகுந்த உரிமையாளருக்கு ஆவணம் சரியாக உள்ளதா அறிய வேண்டியது கட்டாயம் ஆகவே அதற்கு முன்பு பணம் கொடுத்து இழந்து விடாதீர்கள் அனைத்து வேலைபாடுகள் முடித்தப்பிறகு பணம் தரவும் ஆவணத்திற்கு முன் பணம் கோரினால் கவனத்துடனும் எச்சிரிக்கையுடன் தரவும் .

மொத்த பணத்தை தந்து ஏமாற்றம் அடையாதீர்கள் .

மறுமை / கியாமத் நாள் குறித்த (K-T-I -C)சங்கம் நடத்திய சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி



குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-T-I -C), குவைத் வாழ் தமிழ் மக்களுக்காக வாரந்தோறும் தமிழ் மொழியில் வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பேருரையுடன் மாதந்தோறும் பல பகுதிகளிலும் பல்வேறு தலைப்புகளில் மார்க்க, சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இம்மாத (மே) நிகழ்ச்சியாக மறுமை / கியாமத் நாள் குறித்த சிந்தனை மக்களிடம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 17.05.2012 வியாழக்கிழமை இரவு 8:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃபஹாஹீல், மிஜ்யத் அல் ஹிலால் உதைபீ (உருதூ ஃகுத்பா) பள்ளிவாசலில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, இளைஞர் அணி செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா எம்.எஸ். அப்துல் குத்தூஸ் ஹஸனீ மற்றும் ஜமாஅத்துல் உலமா / மார்க்க அறிஞர் குழுவின் மூத்த உறுப்பினர் மவ்லவீ எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி ஆகியோர் மண்ணறை வாழ்க்கை, மறுமை நாளின் நிகழ்வுகள், சுவனம், நரகம் போன்ற தலைப்புகளில் அவையோர் உள்ளங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தலைவரின் துஆ/பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் தேநீரும், இறுதியில் இரவு உணவும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

{லாட்ஜ் }விடுதியில் தங்குவோரின் கவனத்திற்கும்! மற்றும் காம பசியால் வாழ்க்கை வசீகரம் இழுந்து தவிக்கும் பெண்களின் நிலையும் ஆணின் தூண்டுதலும் ,தவறுகளும் .!




சிலப் பெண்கள் ஆண்களின் முன்னிலையில் நடமாடுவதுமில்லாமல் ஆடையை குறைத்து அவர்களின் முன்னிலையில் அதை இறக்கி,மானத்தை நான்கு செவறுக் குள்ளேயும் அறைகுறை ஆடைகளோடு ஆராவாரத்தோடு இயற்கை முன்னிலையிலும் ஆண்களிடத்தில் மானத்தை பறிக்கொடுக்கிறார்கள்.ஆனால் ஆண்களோ !அதை மன இச்சைக்கு பயன்படுத்துவது மட்டுமில்லாமல் தான் அனுபவித்தும் மற்றவர்களை அனுபவிக்க செய்கின்றனர். தான் ரசித்தவற்றை பிறரை ரசிக்கவைப்பது மட்டுமின்றி தற்போது வியாபாரம் நோக்கத்துடன் கைப்பேசிகளிலும் ,கேமிராக்கள் மூலம் படம் பிடித்து பிறருக்கு விநியோகம் செய்து விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர் .ஆண்களின் தேகத்திற்கு பெண்களும் ,பெண்களின் மோகத்திற்கு ஆண்களும் அவ்வப்போது ஊடல் பரிவர்த்தனை செய்துக் கொள்கின்றனர்.

ஒரு நேரத்தில் ஆண்கள் பெண்கள் பின் சுற்றினாலும் திரும்பி பார்க்கவே தயங்குவார்கள் அந்த அளவுக்கு வெட்கம் சுபாவம் கொண்டவர்களாக இந்தியப்பெண்கள் திகழ்ந்தார்கள் ஆனால் இப்போது இந்த நிலை மாறி ஆண்களுக்கு நிகர் பெண்களும் அவகாசம் கிடைத்தால் அதை தவறாக பயன்படுத்திட தூண்டுதலாக இருக்கிறார்கள்.ஆணும் ஒரு அவகாசம் கிடைத்தால் போதும் அதை பயன் படுத்தி அனுபவத்திக் கொள்ளுகின்ற நிலை இன்று உள்ளது .அது காலப்போக்கில் தான் கெட்டுபோவது மட்டுமில்லாமல் உடனிருக்கும் சகோதர ,சகோதரிகளையும் இந்த தவறுதலுக்கு உடந்தையாக்கிட நாம் முயன்று பலனை தவறான விதத்தில் எட்ட நினைத்து தீங்கிழந்து மானத்தை துறந்து தனிமைபடுத்தி கேவல அவல காம பசிக்காக வாழ்க்கையே 
சின்னாபின்னாமாக்கி கொள்கிறோம் .

அறியாத தவறுக்கும் ,அறிந்த தவறுக்கும் தண்டனை என்னத்தெரியுமா?
 

இன்று பலப்பேர் தான் செய்வது என்னவென்றுக் கூட தெரியாமல் தன்னுடைய போக்கில் நடந்து 
சீரழித்துக் கொள்வதை அறிய மறுக்கின்றனர் .தாங்கள் ஒருவனுக்காக ஆசைப்பட்டு ஊடலில் இறங்கி வேட்கையை மீட்டுக்கொள்ளும் பலர் இருக்கையில் இந்த செயல் தற்போது விரிந்து உலக அளவில் கணினியிலும் ,குறுந்தகடுகளிலும் ஆபாச படமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் .அதை மறைமுகமாக செய்வது உண்மையென்றாலும் எப்படி வியாபாரம் செய்கின்றனர் சொல்லப்போனால் .பிடித்த புகைப்படத்தையும் ,காணொளி காட்சிகளையும் நண்பர்களுக்கு விநியோகம் செய்ய பல செல்போன்களுக்கு பயணிக்கும் ஆபாச காட்சிகள் உலக வர்த்தகத்திற்கு சிலரால் வியாபாரம் ஆக்கப்பட்டு விற்பனையாக்கி வருவது நாடறிந்த உண்மையாகிருக்கிறது .

பெரும்பாலும் நாம் சொல்வது காதல் !

இன்று உலக அளவில் கலாச்சாரம் சீரழிவுக்கு பேருதவியாக இருப்பது புனித காதலாகும் இந்த காதல் மூலம்தான் பல்வேறு தவறுகள் அரங்கேரிவிடுகிறது . வீட்டிலிருந்து விடுதி வரையில் கொண்டு செல்கிறது .கூடுவிட்டு கூடுப்பாயவும் பெரும் ஊன்றுகோலாக இருக்கிறது .ஒரு பெண்ணுக்கு துணிவும் ,திமிரும் கொண்டு வருவதும் சொல் பேச்சை கேட்காமல் காமத்தினால் மானத்தையும் மான 
பங்கத்தையும் ஏற்படுத்திட ,துறந்திட அடிப்படை காரணமாக அமைகிறது .ஆனால் ஆண்களுக்கோ அது விளையாட்டு சாதனமாகி அவர்களின் வாழ்க்கையில் விளையாடி வருவதுதான் வேடிக்கை .ஒவ்வொரு ஆண்களிடம் கேளுங்கள் என்னடா ஒருப் பெண்ணை காதலிக்கிற ... ஆனால் இன்னொரு பெண்ணை கரக்ட் பண்ணனும் சொலிறீயே அது எப்படி ? அவன் சொல்வான் டைம் பாசுக்குதான் காதலிக்கிறன்

ஒழிய வேறு எதுவுமே இல்லை சொல்லிக் கொள்வார்கள் .இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுகின்ற ஆண்கள் பல்வேறு பெண்கள் பின் சுற்றுவார்கள் ஆதாரமாக அனைவரையும் காதலிப்பதாக மாய தோற்றத்தை வெளிப்படுத்திக் கொள்வார்கள் கடைசியி
ல்அனைவரையும் ஆண்டு அனுபவித்து ஏமாற்றிவிடுவார்கள் .அதன் பிறகு வாழ்க்கையை சீறடிக்க வேண்டிய நிலை பெண்களுக்கு மட்டுமே ..!

இன்று இளைய சமுதாயம் காதலிப்பதாக சொல்லி பெண்கள் பின் சுற்றிவருவார்கள் அதை பொருட் படுத்தாமல் சில நாட்கள் இருந்தாலும் தொடர் வற்புறுத்தல் தொல்லையின் காரணத்தால் ஒரு விதமாக அவனின் காதலை ஏற்க்க நேரிடுகிறது . அந்த காதல் ஊடல் இல்லாமல் உண்மை எனும் பட்சத்தில் இறுதியாக திருமணத்தோடு வெற்றிக்கொல்வார்கள் ஆனால் தற்போதோ எல்லாம் மாறி ஏமாற்று கிறவர்கள் அதிகரித்து சமுதாயத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றுகிறவர்களே
உயர்ந்து உள்ளனர் .அதை பொருட் படுத்தாத பெண்களின் இளைய சமுதாயம் காதல் கேட்டில் விழுந்து தத்தளித்து தன்னை மாய்த்து தவித்து வருவதை தங்கள் கவனத்தில் கொண்டு வருகிறோம் .

இன்றைய சமுதாயம் காதல் என்ற கூட்டிற்கு இன்னும் அடைய வில்லை என்றே சொல்ல வேண்டும் காதல் என்பது மல்லிகை கடையில் மலிவு விலையில் வாங்கும் 
சிரியப் பொருளாக கருதுகிறார்கள் .
காதல் என்ற புனித வாக்கியத்தை இழிவுப்படுத்திக்கொண்டுள்ளனர் காதல் சாம்ப்ராஜ்யத்தில் பெரும் போராளியாய் திகழ்ந்த ரோமியோ-ஜூலியட் தம்பதியினர் மற்றும் ஷாஜஹான் -மும்தாஜ் ஜோடி உலக வரலாற்றில் உண்மை காதலை வெளிப்படுத்தி வரலாற்று சரித்திரத்திலும் ,உலக காதலர் மத்தி
யில் பெரும் வர வேற்ப்பையும் ,அவர்கள் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளனர் .அது மட்டுமில்லாமல் காதல் என்பது இதுதான் என்று பதிவு செய்து சென்ற நிலையில்!

அதற்கு மாறாக இன்றை காதல் ஜோடிகள் பெரும் வர லாற்று புத்தகத்தில் என்னைப்போன்ற ஊடகம் செய்திகள் வாயிலாக பெரும் கேட்டினை விளைவித்துக்கொண்டு அகப்பட்டு சிலர் உயிரை துறக்கப்பட்ட நிலையில் இன்று பெரும்பாலும் ஊடக செய்திகளாக வெளி வந்த நிலையில் இதற்கு காரணங்களை கண்டறிய நேரிடம்போது உண்மை அத்தாட்சிகளாய் நிலைத்து சொல்வது காதல் வயப்பட்டு 
அதிலிருந்து மீள முடியாமல் கேவலப்பட்டு கடைசியில் உயிரை பலிக்கொடுத்தவர்கள் .


அன்றைய ஜோடிகள் புனித காதலென்று நிலை நிறுத்தினர் இன்றைய காதல் வழிகேட்டினால் பயணித்து புனிதம் சொல்லை 
அநீதத்தை ஏற்படுத்தி கெடுத்து வருகின்றனர் உண்மையான காதல் காண்பது அறிது! அது திருமணத்திற்கு பிறகே அது நிலைக்க சொல்லும் அளவில் வந்துக்கொண்டிருக்கிற நிலையில் அதுவும் தற்போது தடு மாற்றத்தை கண்டு வருகிறது காரணம் அங்கேயும் உருவான காதல் .

கள்ள காதலின் தோற்றம் .!

ஒருவர் வெளி நாட்டுக்கு சென்று இருக்கிறார் அவர் தன்னுடைய மனைவியை பிரிந்து குறைந்தது ஒரு வருடமாவது பிரிய வேண்டிய கட்டாயம் . அதற்காக தன்னுடைய உள்ளத்தையும் உணர்வையும் அடைக்க ஆள வேண்டிய சூழல் உருவாக அதை சரியாக தவறாக பயன் படுத்த என்னும் கருத்த 
ஆடுகளின் விளையாட்டு பிறர் வீட்டில் நுழைய முற்பட்டு நட்பு என்ற ரீதியில் தொடரும் உறவு !கால போக்கில் தனிமை நேரம் பார்த்து தன்னுடைய கை வரிசையை பெண்ணிடம் காண்பிக்க அதை வெளியில் சொல்ல இயலாமல் திக்கி தினறிக்கொண்டு வாழும் பெண்கள் மத்தியில் இயல்பாக போக அது வாடிக்கையாக போகிறது.

வேறு வழியின்றி பசிக்கு உட்கொள்ள வேண்டிய சாதமாக அமைந்து விடுகிறது அவளும் துணைக்கு ஆட்கொள்கிறாள் தவறும் நடந்து விடுகிறது .மானத்தை இழந்து அவமானம் பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும் ,இறுதியாக கசாப் கடைக்கு வாழ்க்கையை பலியாக்கி கொள்ள நேரிடுகிறது இதற்கு காரணம் பெண் மீது பெரும் தவறுகள் இருந்தாலும் நேரம் பார்த்து கழுத்தை அறுக்க நினைக்கும் நட்பு வட்டாரங்களே ..! 

நண்பன் என்று சொல்லி நண்பகலில் வந்து நட்பை இழிவுப்படுத்தி புனிதகாதலை கள்ள காதல் என்ற முறையை அவலப்பெயர் உண்டாக்க நினைக்கும் மனிதரே ...!
ஊசி இருக்கிறது நூல் கொஞ்சம் இடம் தந்தாள் போதும் என்னும் நாம் அந்த ஊசி நம்முடையதா அல்லது பிறருடையதா எண்ணுவது அவசியம் தன் தங்கையை எவ்வளவு கட்சிதமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்னும் மனிதர்கள் மத்தியில் பிறர் மனைவியையும் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு நண்பரின் கடமையே ,
நண்பன் பார்த்துக்கொள் சொல்லிவிட்டான் ஆகவே அந்தரங்கத்தையும் நுழைந்து பார்த்துவிடலாம்  கருதுவது நட்புக்கு நாம் செய்யும் துரோகம் .

மற்றவர் வீட்டுக்கு சென்றாலோ ,அல்லது பிறர் தங்கையை கண்டாலோ அவளிடத்தில் க
ணிவையும் பணியையும் பேன கடமை பட்டிருக்க வேண்டும் .ஒவ்வொரு பெண்ணும் தாய் ஆவாள் .ஆனால் ஒவ்வொரு ஆணும் சேயை உண்டாக்க முடியாது .ஆனால் ஒழுக்கத்தை பாது காக்க முடியும் குழந்தையை பெற இயலாவிட்டாலும் குழந்தையை தர முடியும் .ஆகவே குழந்தை பெற நினைக்கும் ஒவ்வொருவரும் திருமணம் முடித்து பெற்றுக்கொண்டால் மட்டுமே அது முகவரி அளிக்கக் கூடிய குழந்தையாகிறது .

தவறான முறையில் பிள்ளைகளை ஈன்றெடுக்க நினைத்தால் அவலம் இந்த சமுதாயத்தால் மித்திப்பட வேண்டிய சூழுலக்கு தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது .கற்பு இருப்பது பெண்களுக்கு மட்டும் கருதும் நாம் நமக்கு க
 ற்பிர்ப்பதை மறந்து விட்டு மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடி வருவதை முற்றிலும் முற்று வைக்க முன் வர வேண்டும் .

தவறுகள் யார் யார் செய்கிறார்கள் அதனால் எவருக்கு சேதம் !

ஒரு ஆண் காதல்  சொல்லிக்கொண்டு திரிவதினால் பெண் 
வாழ்க்கை  பாடாவதாக நாம் நினைப்பதுண்டு ஆனால அதற்கும் மேலாக தன் வாழ்க்கையை விளையாட்டாக ஆக்கி கொண்டு படிக்கிற வயதில் படிப்பை கோட்டை விட நேரிடுகிறது. சம்பாதிக்கிற வயதில் தொழிலில் ஈடுபடாமல் இளைமையை வீனத்தி காலத்தை போக்கிகொல்வதுண்டு இதனால் விளையாட்டாய் ஆரம்பித்த காதல் உருப்படாதவன் மொள்ள மாறி கேப்மாரி என்ற அந்தஸ்தை காதலினால் ஏற்படுத்தப்படுகிறது .

நான் ஒழுக்க உள்ளவன் உண்மையான காதல் இருக்கிறது சொல்பவர்கள் ஏராளம் அவர்களுக்கு நான் கேட்கும் ஒரே கேள்வி .சிலர் கூறுவார் அவள் இல்லாமல் என்னால் வாழமுடியாது சொல்லிக்கொள்ளும் பெருமையை பீத்திக்கொள்ளும் அவர்கள் இத்துனை ஆண்டுகாலமாக எப்படி வாழ்ந்தான் பிறக்கையிலே காதலியை பார்த்து வாழ்ந்தானா ?இல்லை தாயை பார்த்து வளர்ந்தான காதல் பெரிது காதல் பெரிது சொல்லிக்கொள்ளும் வாலிபர்கள் எவராவது எனக்கு என் அம்மாதான் உன்னைவிட ஒசத்தி சொல்லியிருக்கிறான?

இனிமேலாவது சொல்வான..?சொல்ல முடியாது ஏன் என்றால் காமத்தினால் பிறப்பு காதலாகும் உள்ளப் பாசத்தினால் பிறக்கும் காதல் தாயுடைய நேசமாகும் .அதுவும் தாலி கட்டும்வரை கட்டிலுக்கு போகாத வரை ...!இது ஒரு வேறு தலையங்கம் இதை இன்னொரு நாள் பார்க்கலாம் .

பெண்ணுக்கு பாதிப்பு !

ஒருத்தன் பின்னாடியே சுற்றிவருவதை பார்த்தா கண்டும் காணாம போவது! ரெண்டாவது செருப்ப காண்பிப்பது !
மூன்றாவது திருந்த மாட்டான்னு முடிவெடுத்து தனை அதில் ஈடுபடுத்திட முடிவுக்கொள்வதுண்டு.கடைசியில ,,முடிவு பண்ணி கிறுக்கன் நினைச்சி இந்த கேன சிறுக்கிகள் ஓரப்பார்வையால காதல் வலை போட்டு அதில்ல இவங்க வீழ்ந்துருது கடையிசியிலே வீட்லயும் அவானம் போகிற இடத்திலையும் அவமானம் .படிப்ப நிறுத்து ,வீட்டு வாசப்படி தாண்ட கட்டு ! 

என ஏகப்பட்ட பிரச்சனை உண்டாக காதலித்தவன் கிறுக்கன் ஆச்சே அவன் சொல்வான் நீ வருலன்னா !கிடைக்கலேன்ன செத்துடுவேன்னு சொல்ல உடனே வீட்டை புறக்கணிச்சுட்டு படியை தாண்டிடுவாங்க அவங்களுக்கு தெரியாது சுத்திவந்த கிறுக்க மத்தவனுக்கு புருசனா இவளைப்போல பல பெண்களுக்கு அரசனா இருப்பதை கண்டுக்கொள்ளாம வீட்ட விட்டு வெளியேறி அவனுடன் செல்வதுண்டு .

அதுவே திருமண ஆனவன் என்ன செய்வான் சில நாள் விடுதியில வைச்சு ஜோசு பிசைஞ்சா மாதரி பிசைஞ்சி உருச்சி குடித்து  சக்கையாக்கி கடைசிய்டிலே தூக்கி நடத் தெருவுல வீசிடுவான் .அதற்கு அப்பறம் வேறு வழியில்லாம மீறிய வீட்டுக்கு நாரியப்படி கண்ணீரிட்டு .கதறி அழுது வீட்ல நுழநிது விடுவது என்ன செய்ய முடியும் பெத்த பொண்ணு தப்பு பண்ணிட்ட இந்த தருனத்தில ஆதரவில்லாம் போன நாளைக்கு விபச்சாரி ஆகிடுவா! நினைத்து வீட்ல சேர்த்துக்குவாங்க அதுவே ஜாதி அடிப்படையிலே பார்க்கப் போன அந்நிய ஜாதி பையன் கூட ஓடிப்போனவளுக்கு இடமில்லை கூறி ஒதுக்க அவன் வேறு வழியில்லாமல் கொஞ்சம் நாள் தொழில்ல ஈடுபடுவா நோய உற்பத்தி பண்ற நிறுவனமா மாறி சீக்கிரத்தில நாடு வீதியில நாதப்பினமா இறந்துவிடுவா . அதுவே காதல் சொல்லிவேலை வெட்டி இல்லாம சுத்தும் பையன் இழுத்துகிட்டு ஓடி ஆண்டு அனுபவிச்சு கையிலையும்காசிலாம கழுத்துல இருக்கிறது அடமான வச்சி மானத்த வித்து கடைசியில  வைத்துள்ள புள்ள பூச்சியோடு திரும்பி வருவாங்க....!

அப்போதும் திரும்பி வந்தவர்களை அரவணைக்கிறது  பெற்றோர்கள்தான் .
ஆகவே சுற்றி திரிபவனையும் ,கள்ளக் காம பேதனையும் காதலித்தால் என்னவாகும் நடுத்தெருவில் நிற்க வேண்டிய அவலம் உண்டாகிறது .இதனால் கற்பிழந்து ,குட்டியை பெற்று வலுவான வாழ்க்கை நிலையை அமைக்க முடியாமல் தடுமாற்றம் தரும் நிலையை நாமே உருவாக்கி கொள்கிறோம் .

இதுப்போன்ற செயல்கள் இன்று அதிகரித்துள்ளதுதான் வேதனைக்குரிய விசயமாகும் ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்காமல் சீரழிந்துக் கொண்டுள்ளதை தெளிவுப்படுத்தினாலும் தெளிவடையாமல் சாக்கடையில் சென்று விழவே நினைக்கின்றனர் .அது சகதி என்று எவரும் நினைப்பதில்லை உப தேசம் கூறினாலும் அந்த உபதேசத்தை பொருட் வதில்லை தான் செய்வது சரி நினைத்து சறுக்கி பாழாங்கிணற்றில் வீழுந்தப் பிறகு நடந்தவற்றை நினைத்து வேதனைப்படுவதே வாடிக்கையாகுள்ளது .




தமிழனின் கலாச்சாரம் இன்று எப்படி இருக்கிறது நாகரீகம் பேரில் அநாகரீகமான ஆடை உடுத்துவதால் ,சில காளையர்களின் அனாச்சாரத்தினாலும் ,விபச்சாரிகளின் கை வரிசையாலும் அதிகரித்து விரிவடைந்து நிலையில் தற்போது வேறு விதமாக மாற்றம் செய்ய முடிவுக்கொண்டு பல கோடி ரூபாய்களை சம்பாதிக்கும் இவர்கள் நிர்வாண நிறுவனத்தை மேலும் விரிவாக்கிட புதிய உக்திகளை கையாண்டு வருகின்றனர் . அப்போதெல்லாம் வணிக ஸ்தலத்தில் நின்று குனியும்போதும் ,மொட்டை மாடியில் நின்று அட்டைப்படம் எடுப்பதுப்போல சிறு அங்கத்தை எடுத்து ரசித்து பார்த்து பல கைப்பேசிகளுக்கும் ,மின் அஞ்சலிலும் பகிர்ந்துக்கொண்டு ரசித்து வந்தனர் அது காலப்போக்கில் படம் பிடித்து மலிவு விலையில் மறைமுகமாக பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் படமாகவும் ,புத்தகமாகவும் விநியோகம் செய்து வந்தவர்கள் .

தற்போது வேறு விதமாக சிந்தித்து விபச்சாரிகளை படம் பிடித்து வியாபாரம் செய்து வந்ததால் அதில் கொள்ளை லாபம் சம்பாதித்த காளையர்கள் அந்த வியாபாரத்தை லாபத்தை பெருக்கிக்கொள்ளவும் ,வித,விதமான மங்கைகளையும் ,இளங் குமருகளையும் அழைத்து வந்து அவர்களுக்கு தெரியாமல் அவ்வப்போது ஊடலில் ஈடுபட்டு மறைமுகமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ,காணொளி காட்சியாகவும் எடுத்து சம்மந்தப் பட்ட பெண்ணிடம் பிளாக் மெயில் செய்து தேவையெனும் போதெல்லாம் பணம் வசூலித்து வந்தனர் .

மேலும் அதுப்போக சின்னச் சிறுசுகளை காதல் வலையில் மயக்கி சிக்க வைத்து அவர்களை விடுதிக்கு கொண்டு சென்று ஊடலில் ஈடுபடும்போது ஆபாசமாக படம் எடுத்து அவ்வப்போது அவர்களை மிரட்டி பல்வேறு தரப்பட்ட நபர்களால் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து படம்பிடித்து வியாபாரத்தை பெருக்கி வரும்பலர் இருக்கிறார்கள் அதற்கு முக்கிய நிறுவனமும் ,வணிகதலமாக திகழ்வது விடுதிதான் .பெரும்பாலும் விடுதிகளில் அதன் அறையில் அதி நவீன பொருத்திய கேமராக்களால் இன்று உலகமே ஸ்தம்பிக்க மற்றும் வியக்கும் அளவில் ஆபாச வியாபார தலமாக மாறி இருப்பது சொன்னால் நம்ப மாட்டீர்கள் . முதலில் நானும் நம்ப வில்லை அவர்கள் சொன்ன சிலத்தகவல் பேரில்தான் உண்மையை உணர்ந்து இந்த கட்டுரையை தங்கள் முன் சமர்பிக்கிறேன்.

இன்று சொல்லும் அளவில் யார் பாதிக்கிறார்கள் ?இந்த இணையதளம் சொல்வது உண்மையா? அல்லது சினிமா கதா நாயகிகள் சொல்வதுப்போல கிராபிக்ஸ் மேம்பாடு முறை மாற்றமா பார்க்கப்போனால் அப்போதெல்லாம் அது கிராபிக்ஸ் காட்சிகளாக துண்டித்து படத்தில் இணைத்து புகைப்படத்தை வெளியிடுவார்கள் அது நம்பகதக்கதல்ல என நம்பினோம் .ஆனால் தற்போதோ அதி நவீன கேமராக்கள் பொருந்திய கைப்பேசிகள் (செல்லுலார்கள் ) சி.சி.கேமிராக்கள் மூலம் மறைமுக காட்சிகளை பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர் .

அது எப்படி ?

இன்று சிலர் ஆண்களும் சரி ,பெண்களும் சரி காதல் எனும் பேரில் தங்கள் காமத்தை மீட்டுக்கொள்ள மறைமுக ஊடலில் ஈடுபட செல்லும் இடம் லாட்ஜாகும் ,அதேப்போல சுற்றுலா சென்று சுற்றிப்பார்த்தப்பிறகு தங்க எண்ணுவதும் விடுதியே ,அதுமட்டுமின்றி தேனிலவு கொண்டாட குளிர் பிரதேசத்திற்கு செல்கிறோம் இல்லையனில் பிரபலமான பகுதிக்கு செல்கிறோம் அப்போது தங்க நினைப்பது அந்த விடுதியே ஆகவே இன்று பல விடுதிகளில் மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட்டு படம் பதிவு செய்து சந்தையில் விற்கிறார்கள் இன்று அப்படம் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்றாலும் அதை  கண்டு ரசிக்கும் இவர்கள் தனக்கு ஒரு தங்கை இருப்பதும்அவளைப்போல  ஒருப் பெண் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

அப்படத்தை மொபைல் போன் (கைப்பேசி )கடைக்கு சென்று பெரும் வியாபாரம் ஆகிறது .அதனால் மறைமுக தாம்பத்ய வாழ்க்கைக்கு கேடாகிறது. .அதுமட்டுமில்லாமல் காதல் செய்கிறேன் கூறி இதுப்போன்ற ஊடலில் ஈடுபட்டவர்கள் அவர்களுக்கு தெரியாமல் காணொளியாக சந்தைக்கு வர சற்றும் எதிர்ப்பார்க்காத  இவர்கள் தங்கள் உடலை மாய்த்துக் கொள்வதுண்டு . எதனால் இறந்துவிட்டார்கள் என்று எதிரும் புதிருமாய் கேள்விகள் எழ பிறகு அவர்கள் குடும்பத்திற்கு தெரிய வரும் நடந்தது இதுதான் உண்மையென்று . 

ஆகவே சகோதரிகளே இன்று காதல் என்பது மள்ளிகைக் கடையில் மலிவில் கிடைக்கும் சாதனமாகிவிட்ட நிலையில் எது உண்மை ? எதுப் பொய் என அறியாமல் காம பசிக்காகவும் மன இச்சைக்காக ஐந்து நிமிட சுகத்திற்கு வாழ்க்கையை தொலைக்க நேரிடுகிறது இன்ப பசிக்கு ஆசைப்பட்டு வெளியே தெரிந்தப்பிறகு வெட்கத்தை தொலைத்து வேசி என்ற பட்டத்தை பெருவதுமட்டுமில்லாமல் தனிமையாகி ,விபச்சாரிகளாக மாறி உருவாகுவதுண்டு . இறுதியில் கொடிய நோய்களில் சிக்கி தன்னை மாய்த்துக்கொள்வது இன்று வாடிக்கையாகிறது என்பதை தினமும் பத்திரிகை வாயிலாக தினம் செவி ஏற்கிறோம் .ஆகவே இளைய சமுதாயத்தினர்களே ...!தாங்கள் கவனத்திற்கு! பொழுது போக்கிக்கொள்ள காதலொரு விளையாட்டு சாதனமில்லை விளையாடுவதற்கு .மணந்து இறுதிவரை ஒன்று இணைந்து வாழ்ந்து சாதனையாக்குவதுதான் இலட்சியம்கொள்ள வேண்டும் .ஆகவே லட்சியம் கொள்ளுங்கள் தங்கள் துணைவிகளை இறுதிவரை ஒன்றிணைந்து வாழ்ந்து வெற்றிக்கொல்லுங்கள் ஆனால் பிறர் மனைவியை தன மன இச்சைக்கு பலியாக்கி வாழ்க்கையை கெடுத்திட முயற்சிக் கொள்ளாதீர்கள் .

இன்று பெண்கள் நூறு விழிக்காடு தவறு செய்கிறார்கள் என்றால் அதற்கு அதே நூறு விழிக்காடு தவறு செய்ய உடந்தையாகவும் தூண்டுதலாக இருப்பது ஆணும்தான் ஆகவே இருப்பக்கமும் தவறுகள் இருக்கவே செய்கிறது .அதை விட்டு பெண்மட்டும் தவறு செய்கிறாள் என்று அவதூறு சொல்லிவருகிறோம் .காதல் செய்வது தவறென்று ஒருப்போதும் நான் சொல்ல வரவில்லை அதை உண்மையாக ஊடல் இல்லாத உள்ளத்தோடு விரும்புங்கள் .அவளின் அழகிற்காகவும் ,பணத்திற்காகவும் அவளுடைய அங்கத்திற்காக மோகம் கொள்ள நினைத்தால் அதேப்போல பிறர் தங்கள் குடும்பத்தில் தங்களைப்போல நடக்க விரும்புவர் தான் செய்தால் தவறில்லை அதுவே பிறர் செய்தால் தவறென்று கருதாதீர்கள் உண்மையை உணருங்கள் .

இன்று தவறு நடக்க முக்கிய காரணம் பெண்களின் ஆடைக்குறைப்பு அனாச்சாரம் .ஒருப்பேன் மற்றொரு ஆணுக்கு தன்னுடைய மறைக்க வேண்டிய இடத்தை மறைக்காமல் வெட்ட வெளியாக காற்றோட்டமாய் இருக்க வெளிப்படையாக காண்பிப்பதால் .அது பிறர் ரசனைக்கு இழுத்து சென்று விழிகளுக்கு இன்ப ரசமாக அமைவதில்லாமல் அவர்கள் தங்களின் மீது காதலென சொல்லி
கள்ள காதலை தங்களின் அங்கம் மீது மோகம் கொண்டு அதை உபயோகிக்கும் வரை சீரடித்துவிட்டு பிறகு விலகிக் கொள்பவர்கள் ஏராளம் இருக்கவே செய்கிறார்கள் ஆகவே ஒவ்வொரு பெண்களுக்கு ஒழுங்கு ஆடை என்பது ஒழுக்கத்தின் ஒருப்பகுதியாகவே  இருக்கிறது அந்த ஒழுக்கத்தை உணர்ந்து பேணி நடந்தால் பெண்களின் அவலப் பெயரிலிருந்து விலகிட சிறிய யுக்தியாகும் .



மேலும் நாம் வெளி ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் ,தேன் நிலவுக்கும் சென்றால் முதலில் விடுதியில் தாம்பத்திய உறவை வைத்துக்கொள்ள தவிர்க்கவும் முடிந்த அளவில் கழிவறை மற்றும் குளியலறையில் சென்று குளிக்க முற்படாதீர்கள் .பொருந்திய கேமிரா தங்களின் அங்கத்தை ரசிக்க ருசிக்கும் தீணியாகிவிடும்.நம் உடையில் அக்கறை கொள்ள நினைத்தால் விடுதிக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் தாங்கள் அனுபவித்த அதிவிருப்தியை மற்றவர்கள் கண்டு ரசிக்க ரசனையாகிவிடும் .

இதுப்போன்ற இடத்தில் பதிவு செய்த காணொளி உலக அளவில் தற்போது விற்பனை செய்து வருகின்றனர் சிறிய விடுதியானாலும் சரிஅது பெரும்  நட்சத்திர விடுதியானாலும் சரி தவறுகள் தலைவிரித்து நடந்துக் கொண்டு வருகிறது அதை தடுக்க எந்த அரசும் முயற்சிகள் மேற்கொள்ளாத பட்சத்தில் .இதுப்போன்ற இழிவிடத்தில் செல்ல மறுப்பது நல்லதாகும் .


இந்த கட்டுரையை எழுத தூண்டிய என் நண்பர்களுக்கும் ,வாசர்களுக்கும் மனமார நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .  


நாம் அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள் !!!!


நாம் அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள் !!!!

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "ரெட் சொசைட்டி  "யின் கைப்பேசி 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது  http://www.bharatbloodbank.com/ / பார்க்கவும்.

மாணவர்களே! சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!






கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.



தமிழக அரசின் இலவசமான வேலைவாய்ப்பு பயிற்சி.



பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான தகுதி மதிப் பெண்களைக் குறைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் மதிப்பெண்கள் இப்போது குறைக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவில் வரும் மாணவர்கள் இதுவரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான 55 சதவிகித தகுதி மதிப்பெண்கள், இப்போது 50-தாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50-ல் இருந்து 45 ஆகவும், மிகவும் பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கு 45-ல் இருந்து 40 ஆகவும், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு அது 35 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் காலியாகக்கிடந்தன. அதையட்டி, மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் என்று பொறியியல் கல்லூரிகளின் உரிமையாளர்கள், அரசை வலியுறுத்தினர். அதை ஏற்றுத்தான் இப்போது அரசாங்கம் இந்த நடவடிக் கையை எடுத்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், மாணவர்களைவிடவும், பொறியியல் கல்லூரிகள் இந்த அறிவிப்பால் அதிகமாகப் பயனடையும் என்பதுதான் உண்மை!

குவைத் அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக நடந்துக்கொண்ட 526 நபர்களை பாரிய பாதுகாப்பு படையினர் சோதனையின் போது கைது.

 வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் ,நிறுவனத்தில் இருந்து மறைமுகமாகவும் காணாமல் போனவர்களை தேடிட உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி நாளுக்கு நாள் வழக்குகள் குவிந்த வண்ணம் இருக்கையில் அதை முற்று புள்ளி வைக்கும் விதமாக உள்துறை அமைச்சக உயர் அதிகாரி சுலைமான் அல் பாஹாத் மற்றும் மற்றொரு அதிகாரியான முஹம்மத் அல் தோசரி எடுத்துக்கொண்ட மேற் முறையீடு காரணத்தால் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில்  காவலர்களும் பாதுகாப்பு படையினரும் களத்தில் இறங்கினார்கள் . பாஹாஹீல் பகுதியிலும் மற்றும்  சிக்கராப் பகுதியிலும் சோதனையில் ஈடுப்பட்டப்போது சட்ட விரோதமாக செயல்பட்ட தொழிலாளர்களை 520 நபர்களை கைது செய்தனர் .

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் குவைத் அரசுக்கு எதிராகவும் சட்ட விரோதமாக மறைந்து இருந்தவர்களையும் உரிமையாளர்கள் எதிராக  மீரப்பட்டவர்களையும் வீட்டில் இருந்து பாயிந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 520 ௦ நபர்களை குற்றவியல் பிரிவில் கைது செய்து  உள்ளதையும் மேலும் ,பல பகுதிகளில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட இருப்பதையும் தெரிவித்ததுடன் .

மேலும் இந்த சோதனை விரிவாக்கப்பட்டு அனைத்துப் பகுதியிலும் பாதுகாப்பு படையினரும் ,காவல்துறையினரும் இணைந்து செயல்பட்ட இருப்பதாகவும் தேவைப்பட்டால் பாதுகாப்பு மற்றும்   சோதனை பணியில் கூடுதல் துப்பு துளைக்கும்  குழுவையும்   ஈடு படுத்திட முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது( M .O .I ).

முறையான ஆவணம் சோதனைப்பிறகு வருகை விசா அனுமதிக்கப்படுமென குடியேற்றம் விவாகாரத்துறை முடிவு.

குவைத்தில் வருகை (விசிட் ) விசா வேண்டுதலுக்கு முறையான சோதனையின் பிறகு வழங்க குடியேற்றம் விவகாரத்துறை  முடிவு .

அண்மைகாலமாக வருகை விசாவில் பல முறைகேடுகள் நடந்து வருவதினால் இந்த விவாகரத்தை கவனத்தில் கொண்ட குடியேற்றம் துறை விசா வழங்க சில நிபந்தனைகளை விதிக்க முடிவெடுத்துள்ளது .

ஸ்பொன்சர் (உரிமையாளர் )அவர்களின் முறையான ஆவணத்தை சரிப்பார்த்து வழங்கப்போவதாக ஊடகமான அரபு நாளிதழுக்கு செய்தியினை அரசாங்கம் வழங்கியுள்ளது .

வருகை விசாவால் பல முறைகேடுகளை தவிர்க்கவும் சட்ட விரோதமான செயல்களிலிருந்து மீட்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டு இருப்பதாக அந்த நாளிதழுக்கு தகவல் வழங்கியுள்ளது .

குவைத்தில் 60 வாகன எண்கள் தட்டுகள் முடக்கம்.



குவைத் சுவைக் பகுதியில் அரசுடைய வாகன நிறுத்தத்தில் அனுமதியின்றி நிறுத்திய 60 வாகனங்களை நேற்று அப்பகுதி போக்குவரத்துத் துறையினரால் வாகன எண்கள் தட்டுகளை திடீரென்று காவல் துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. 

குவைத் சுவைக் ஆஸ்மா கவர்னரேட்டுக்கு(கவர்னருக்கு ) சொந்தமான இடத்தில் அனுமதியில்லாமல் பல வாகனங்கள் நிறுத்தி வருவதை கவனத்தில் கொண்ட கவர்னருடைய  உயர் அதிகாரி போக்குவரத்துத் துறையினிரிடம் புகார் அளித்ததாலும் .அரசு வாகனம் நிறுத்தத்திற்கு   இடையுறாக இருப்பதாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் காவல்துறையினரால் வாகன எண்கள் தட்டுகளை  கைப்பற்றி நடவடிக்கைகள் எடுத்துவருகிறது இதில் பெரும்பாலும் வெளி நாட்டை சார்ந்தவர்களின் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது .

கவிதை,

மது !

கெடுக்கும் குடி  !
கொடுக்கும் நோய் !
குடிக்கும் ஆயுள் !

மாது !

மானத்தை துறப்பவள் !

மது !

மதியை துறப்பவன் !


சூது !


பொருளில்லா வாக்கியம் ,மதிப்பிழந்த சொல் !


நாணம் !


"மானம்  பார்த்த வானம் "!
"கேலி" செய்யும் "வீதி "
"திரை" இடா "ஆபாசத்தொடு" 
"நாணளற்ற" "மனிதன்" !
"அவமானப்படும்" "ஆடை" !





இந்தியா முழுவதும் பெட்ரோலின் விலை உயர்வு

இந்தியா முழுவதும் பெட்ரோலின் விலை உயர்வு ,.

"பொருளாதார நெருக்கடியில் தினம் வாழ்க்கை பிசைவு !பிநிக்கே திண்டாட்டம் !திசை மாறும் தராதர அரசியல் வாதிகள் விலைகளை உயர்த்தி ஆடும் தாண்டவ ஆட்டம் .நொந்து வேதனையோடு நிற்கும் மக்கள் வேறு வழியின்றி அவதியில்" .கிராமம் முதல் நகரம் வரை தேவை பெட்ரோல் ஆனால் மத்திய மாநில அரசு கன்ட்றோலின்றி செல்வது ஏற்க்கத்தக்கதல்ல "! 

மத்திய அரசின் தவறான போக்கும் ,பொறுளாதார நெருக்கடியின் காரணத்தினாலும் பெட்ரோலின் விலை ரூபாய் 69.55ஆகஇருந்தது 7 .50 காசாக உயர்ந்து தற்போதய விலை 77.55 இருப்பது 


மத்திய மாநில அரசின் அலட்சிய போக்கும் மக்கள் மீதற்ற அக்கறையும் விலை உயர்வுக்கு காரணமாகும் .இந்த பெட்ரோலின் திடீர் விலை உயர்வால் அனைத்து தரப்புபட்ட வர்க்கத்தினருக்கு பீதியடைய வைத்துள்ளது எப்போதுமில்லா திடீர் பெட்ரோலின் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களையும் அதாவது உயர்மட்ட மக்களையும் அவர்களுக்கு மட்டுமின்றி கீழ்மட்ட தரப்பினருக்கும் மிகுந்த பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

+2 படித்தப்பிறகு தேர்வு செய்ய வேண்டிய கல்வி குழுக்களின் வகைகள் !


.விஞ்ஞானம்-Natural Sciences
2 புவி அறிவியல் - Earth Sciences
3 கணிதம்-Mathematics
4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology
5 சமூக விஞ்ஞானம்-Social Sciences
6 கலைத்துறை -Humanities
7 வணிகவியல்-Business
8 கலைகள்-Arts and Crafts

இயற்பியல்/பூதியல் - Physics
அணுவியல் - Atomic/Particle Physics
ஒளியியல் - Optics
ஒலிவியல் - Acoustics
இயக்க விசையியல் - Kinetics
இயக்கவியல் - Mechanics
பாய்ம இயக்கவியல் - Fluid Mechanics
வெப்பஇயக்கவியல்/தெறுமத்தினவியல் - Thermodynamics
மின்காந்தவியல் - Electromagnetics
அணுக் கரு இயல்பியல் - Nuclear Physics
புவி இயல்பியல் - Geophysics
குவாண்டம்/துணுக்கம்/சத்திச் சொட்டு இயல்பியல்- Quantum Physics
வானியல் - Astronomy
அண்டவியல் - Cosmology
விண்வெளி அறிவியல் - Space Science
ஒலிப்பிறப்பியல்
மின்னியல்
உயிரியல்-Biology
உடற்செயலியல்-Physiology
விலங்கியல்-Zoology
விலங்கின நடத்தையியல்
தாவரவியல்-Botany
தொல்லுயிரியல், புதைப்படிமவியல், பழவூற்றியல்-Paleontology
நுண்ணுயிரியல்-Microbiology
உயிர்வேதியியல்/உயிர் இரசாயனவியல் (இ.வ)-Biochemistry
மூலக்கூறு உயிரியல்-Molecular Biology
மரபியல்-Genetics
வேதியியல், இரசாயனவியல்(இ.வ) - Chemistry
கரிம வேதியியல் - Organic Chemistry
கனிம வேதியியல் - Inorganic Chemistry
விகிதவியல் - Stoichimometry
மின்னிரசானவியல் - Electrochemistry
நிறமாலைகாட்டியல் - Spectroscopy
நச்சியல் - Toxicology
பொருளறிவியல் - Material Science
உலோகவியல் - Metallurgy
Reaction Kinetics
Chemical Processes
மருத்துவவியல்-Medical Sciences
உள்ளமைப்பியல், உள்ளுறுப்பியல், உறுப்பமைப்பியல் - Anatomy
செவியியல் - Otology
கண்ணியல் - Ophthalmology
பல்லியல் - Dentistry
தோலியல் - Dermatology
திசுவியல் - Histology
ஏதுவியல், காரண காரிய ஆய்வியல் - Etiology
மிடற்றியல் - Laryngolog
பல் மருத்துவம் - Dentistry
உணர்வகற்றியல் - Anesthesiology
நெவிநாசிமிடற்றியல் - Otorhinolaryngology
அறுவை மருத்துவம் - Surgery
மருந்தியல் - Pharmacology
உணவியல் - Nutrition
நலமீட்பு பணி - Nursing
பிறப்பு இயல், ஈன் இயல், பேறு இயல், பேற்றியல் - Obsterics
நரம்பியல் - Neurology
எலும்பியல்
இரத்தவியல்
தடுப்பாற்றலியல், தடுப்புத்திறனியல் - Immunology
நோய் காரணவியல்-Etiology
நோய் விபரவியல்-Epidemiology
நோய்க்குறியியல் Pathology
பெண் நோயியல்
குழந்தை மருத்துவம்
புறத்தோற்ற உடலளவையியல்
உயர்பாலூட்டியியல்
உடற்றொழிலியல்-Physiology
மனநோயியல் - Psychiatry
நரம்பு வழி உளப்பிணி மருத்துவம் - Neuropsychiatry
உடனலவியல்-Hygiene
குழியவியல்-Cytology
பிறப்புரிமையியல்-Genetics
உயிரிரசாயனவியல்/உயிர் வேதியியல் (த.வ)-Biochemistry
கால்நடை மருத்துவம்-Veterinary Science
இனமுறை மருத்துவம்-Homeopathy
மூலிகை மருத்துவம்-Herbal Medicine
சித்த மருத்துவம்
அளவியல் - Measurement Science
[தொகு]புவி அறிவியல் - Earth Sciences

நிலவியல், புவிச்சரிதவியல், புவிப்பொதியியல்-Geology
பனியாற்றியியல்-Glaciology
நில உருவாக்கவியல்-Geomorphology
தொல்லுயிராய்வியல்-Palaeontology
பூதத்துவ இயல்-Geography
புவியமைப்பியல்-Geophysical
சூழலியல், சூழியல் - Enviornmental Studies
வாழ்சூழ்நிலைவியல் - Ecology
தட்டவெட்பவியல் - Climatology
வானிலைவியல் - Meteorology
காட்டியல் - Forestry
மீன்வள அறிவியல் - Fishery
கனிப்பொருளியல் - Minerology
பெருங்கடல் ஆய்வியல் - Ocenography
வாயு மண்டல அறிவியல் - Atomospheric Sciences
நிலவுலக நீர் ஆய்வியல் - Hydrology
வேளாண்மையியல், விவசாயம்-Agriculture
மண்ணியல்-Soil Science
புல்லியல்- Agrostology
உழவியல், பயிராக்கவியல் - Agronomy
வேளாண் பயரியல் - Agricultural Botany
வேளாண் வேதியியல், விவசாயவிரசாயனவியல்-Agricultural Chemistry
வேளாண் உயிர்வதியியல் - Agricultural Biochemistry
வேளாண் விரிவாக்க இயல்-Agricultural Extension
[தொகு]கணிதம்-Mathematics

கணிப்பியல்-Calculas
தொகையிடல்-Integration
வகைக்கெழு காணல்-Differentiation
வகைப்பு இடவியல் - Differential Topology
வகைப்பு வடிவியல் - Differential Geometry

கேத்திர கணிதம்/வடிவியல்-Geometry
பகுப்புக் கேத்திர கணிதம்-Analytical Geometry
எண் கணிதம்-Arithmetic
அட்சர கணிதம்/குறுக்கணக்கியல்-Algebra
புள்ளியியல்-Statistics
நிகழ்தகவுக் கோட்பாடு-Probability Theory
கணவியல் கோட்பாடு-Set Theory
பகுவியல்-Fractals
தருக்கவியல்-Logic
இடத்தியல்-பரப்புரு-Topology
மடக்கை-Logarithms
உருமாற்றம்-Transforms
வலையமைப்பியல்-Network Analysis
எண்சார்ந்த பகுப்பியல்-Numerical Analysis
இயங்கவியல்-Dynamics
கோணவியல்-Trignometry
[தொகு]பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology

நுட்பியல்
கணினியியல்-Computing
மின் எந்திர மனிதவியல் தொழில்நுட்பம்-robotics
இயற்கை மொழி கணிணியியல்-Natural Language Processing
இயந்திரவியல், சுயம் பொறி இயல்-Robotics
இலத்திரணியல், மின்னணுவியல்-Electronics
நுண் - மின்னுணுவியல்-Micro Electronics
இயந்திர மின் நுட்பவியல்-Mechatronics
நுண் ஒளித்துகளியல்-Microphotonics
நுண் நீர்மவியல்-Microfulidics
ஒப்புமையியல்-Analog Technology
இலக்கமுறை தொழிநுட்பம் / எண்முறைத் தொழிநுட்பம்/இலக்கமியல்-Digital Technology
பதிகணனியியல்-Embedded
மின் திறனியல்-
வானலையியல்-Radio Frequency
தகவல் தொழில்நுட்பவியல்-Information Technology
ஒளித்துகளியல், ஒளியணுவியல்-Photonics
உந்துமவியல் தொழில்நுட்பம்-Propulsion Technology
அமைப்புப் பொறியியல்-Systems Engineering
மரபான தளப் பொறியியல்-Surface Engineering
மின் பொறியியல்-Electrical Engineering
எந்திரவியல்-Mechanical Engineering
கட்டடப் பொறியியல்,குடிசார் பொறியியல்-Civil Engineering
வேதிப்பொறியியல்-Chemical Engineering
துகிலியல்-Textile Engineering
கட்டட கட்டுமானயியல்-Building Construction
அமைப்புப் பொறியியல்
உலோகயியல்-Metallurgy
உருபனியல்
நரம்பணு வலையமைப்பியல்-Neural Networks
மங்கல் ஏரணம்-Fuzzy Logic
உயிரித்தொழில்நுட்பங்கள்-Biotechnology
விமானவியல்-Aeronautics
செயற்கை அறிவாண்மை, நகல் ஞானம்-Artitificial Intelligence
பயண மின்நுட்பவியல்-Avionics
கட்டுபாட்டுவியல்-Control Theory
தானியங்கியல் கட்டுப்பாடு - Automatic Control
தொடர்பியல்- Communications
கப்பல் மற்றும் கடல் பொறியியல் - Ship and Ocean Engineering
அளவுப்பொறியமைப்பு - Instrumentation
[தொகு]சமூக விஞ்ஞானம்-Social Sciences

உளவியல்-Psychology
உடல்கூறு உளவியல் - Physiological Psychology
நடத்தையியல் உளவியல் - Behaviour Psychology
புலணுர்வு உளவியல் - Cognitive Psychology
வளர்ச்சி உளவியல் - Developmental Psychology
சமூக உளவியல் - Social Psychology
பரிணாம உளவியல் - Evolutionary Psychology
ஒப்பீட்டு உளவியல் - Comparative Psychology
ஆளுமை உளவியல் - Personality Psychology
? உளவியல் - Clinical Psychology
? உளவியல் - Cross-Cultural Psychology
எதிர்காலவியல் - Futurology
பொருளியல்-Economics
மூலதனவாதம்-முதலாளித்துவம்/திறந்த சந்தை-Capitalism
பொதுவுடமை-Communism
சம உடமை-சமூகவுடமை-Socialism
நிலபிரபுத்துவம்-Feudalism
பாசிசம்-Fascism
தாராண்மைவாதம்-இடைநிலை/எழுவரல்-Liberalism
சொற்பொருளியல்
சூழ்பொருளியல்
தொல்பொருளியல்-Archaeology
கல்வெட்டியல்-Epigraphy
மானுடவியல்-Anthropology
தொன்மவியல் - Mythology
நூலகவியல்-Library Sciences
சட்டவியல்-Law
தண்டனைவியல்-Penology
குற்றவியல்-Criminology
மொழியியல்-Linguistics
ஒலிப்பியல்-phonetics
ஒலியியல்-phonology
சொல்லியல்-lexicology
சொற்பிறப்பியல்-etymology
சொற்பொருளியல்-semantics
சூழ்பொருளியல்-pragmatics
தொடரமைப்பு-syntax
மொழியியற் குறியீட்டியல்-linguistic typology
குறியியல் (semiotics).
பன் மொழியியல்
இரட்டை மொழியியல்
கிளை மொழியியல்
சொற்றொடரியல்
தொடர்பியல்-Communication Sciences
இனக்குழு அறிவியல்
இனஒப்பாய்வியல்
இனமொழியியல்
இனவரைவியல்

குடியியல்
நகரத் திட்டமிடல்
நகரியல் - Urban Studies
புவியியல்
புவிச்சரிதவியல்
சமூக அறிவியல்
சமூக உயிரியல்
சமூக மொழியியல்
குறியியல்
அரசறிவியல் - Political Science
அரசியல் - Politics
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையியல்

மனையியல்-Home Science
சமுதாயவியல்-Sociology
கல்வியல்-Education
நாட்டாரியல்-Folk
ஊடகவியல்-Media Studies
பெண்ணியம் - Feminism
பெண்ணியல் - Women Studies குடித்தொகையியல் - Demography
இனவரைவியல் - Ethnography
[தொகு]கலைத்துறை -Humanities

இந்திய-ஐரோப்பியம் - Indo - European Studies
தமிழியம் - Tamilogy

மொழிகள்
தமிழ்
ஆங்கிலம்
தமிழ் இலக்கணம்-Tamil Grammer
எழுத்ததிகாரம்
எழுத்தியல்
பதவியல்
புணரியல்
சொல்லதிகாரம்
பெயரியல்
வினையியல்
இடையியல்
உரியியல்
இலக்கியம்
தமிழியல் - Tamilology
இதழியல்
கவிதையியல்
ஒப்பியல்- Comparative Literature
தத்துவம் - Philosophy
மெய்யியல் - Ontology
அறிவாராய்ச்சியியல் - Epistemology
அழகியல் - Asthetics
ஒழுக்கவியல் - Ethics
இருத்தலியல் - Existentialism
இயற்கையியல் - Naturalism
உண்மையியல் - Realism
அனுபவ உண்மையியல் - Empiricism
இன்ப நலக் கோட்பாட்டியல் - Hedonism
இறைமறுப்பியல்-நாத்திகம் - Atheism
கருத்துமுதலியல் - Idealism
உள்ளுணர்வியல் - Intrition
ஐயுறவியல் - Skepticism
நேர்க்காட்சி வாதம் (Positivism)
சமயம்-Religion


Taoism
இறையியல்-Theology
கிறீஸ்தவம்-Christianity
இஸ்லாம்-Islam
இந்து சமயம்-Hinduism
சைவம்-Shaivism
வைணவம்-Vaisnavam
சாக்தம்-Shaktham
ஆசிவகம்
புத்தம்-Buddhism
சமணம்-Jainism
யுடேஸ்சம்-Judaism
சான்ரு-Shinto
ரொவ்-Taoism
கொங்fயூசியஸ்-Confuciaism
சீக்கிசம்-Sikhism
சுரோஅஸ்றியனிசம்-Zoroastrianism
அனிமிசம்-Animism-மிருக வழிபாடு
வரலாறு-History
வரலாறெழுதியல்-Historiography

உடல்சார் மானிடவியல்
பண்பாட்டு மானிடவியல்
தொல்லுயிரியல்சார் மானிடவியல்
[தொகு]வணிகவியல்-Business

நிர்வாகவியல்-Management
மானகை இயல்-Management Science
கணக்கு பதிவியல்-Accountancy
சந்தைப்படுத்தல்-Marketing
வங்கியல்-Banking
நிதியியல்-Finance
[தொகு]கலைகள்-Arts and Crafts

கைப்பணிக்கலை: பெட்டி, பாய், மாலை, தும்பு தடி
தச்சுக்கலை, மரவேலை
மண்பாண்ட கலை
கொல்லர்கலை
தையற்கலை
நெசவுக்கலை, கைத்தறி
சிற்பக்கலை
பின்னல்கலை
கட்டக்கலை
ஓவியக்கலை
இசைக்கலை
நடனக்கலை
தோட்டக்கலை,
விவசாயம்
நாடகக்கலை
மருத்துவக்கலை
போர்கலை
எழுத்துக்கலை
சமயற்கலை
திரைப்படக்கலை
புகைப்படக்கலை
அலங்காரக்கலை
பத்திரிகைக்கலை
மனவளக்கலை

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்