கூனிமேட்டில் கார் விபத்தால் பள்ளிவாசல் சுவர் சேதம் !




நேற்று அதிகாலை காலை சுப்ஹு தொழுகைக்கு பிறகு நடைப்பெற்ற விபத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைப்பெற வில்லைஎனத்தகவல் வந்தாலும் தற்போதுதான்
பள்ளிவாசலுக்கு வண்ணமடித்து பல்லாயிரம் ரூபாய் செலவழித்து புதுப்பித்திருக்கும் வேலையில் இந்த கோர சம்பவம் நடைப்பெற்றிருப்பது நினைத்தால் வருத்தமளிக்கிறது .

அண்மையில் ,அதாவது ஒரு வாரத்திற்கு முன்புதான் ரமதான் மாதத்தை முன்னிட்டு அனைத்து வேலைப்பாடுகளும் முடித்து தயார் படுத்திய நிலையில் ...
நடைப்பெற்ற விபத்தால் பள்ளிவாசலின் தடுப்பு சுவர் பக்கத்தில் வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் இடித்ததில் சுவர் சேதமடைந்துள்ளது .

மேலும் ,பாதிப்பிற்குள்ளாகிய சேவரை சேதப்படுத்திய வாகனிடம் வசூல் செய்துள்ளார்களா? பொடு ,போக்காக விட்டு விட்டார்களா?செய்திகள் இன்னும் வராத காரணத்தால் இதைப்பற்றி முழுமையான தகவல் கிடைக்கவில்லை .

இந்த சம்பவத்தினால் கவலையடைந்துள்ள குவைத் கூனிமேடு வாழ் சகோதரர்கள் ,சரியான ஊரில் தலைமை இருந்திருந்தால் எதையாவது வாதாடியாவது தொகைப் பெற்று இருக்கலாம் .ஆனால் யார் எவரிடம் கேட்பார்கள் என்கின்ற முன்முனுப்பும் இருக்கிறது .முழு விபரம் அறிந்து வெளியிட கூனிமேடு குரல் கடமைப்பட்டிருக்கிறது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்