என்னின் நீண்ட நாள் கனவு, ஆசை நிறைவேறுமா?

பலவருடமாய் உள்ளத்தில் இருந்த நெருடல் !ஆதங்கம் !வலி !போன்றவற்றால் அணு அணுவாய் உள்ளத்திலும் சித்திரவாதையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் உள்ளத்தையும் உணர்வையும் மருந்தாக ஆறுதல் வார்த்தைகளால் அலங்கரித்து ,சுமந்துக்கொண்டிருந்த ஏக்கம் !KMJK அமைப்பின் மூலமாவது நிறைவேறுமா ?என்பதினை ஆவலூட்டியுள்ளது .

தனிமையிலே யோசித்து ,எழுத்தால் வாசித்து கிடைக்காத பலன் இவர்களினாளது எட்டுமா ?என்கின்ற மிகுந்த எதிர்ப்பார்ப்பினை எழுப்பியுள்ளது .இவர்களின் எழுச்சி உரை !ஊர் நலம் பெற ,கல்வியிலும்  மற்ற பிற வழிகளிலும் முன்னேற தடையாகிருக்கும் குருட்டு விழியை இருட்டிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் மறுப் பார்வையளிக்க முன்வந்த இந்த அமைப்புக்கு கோடான கோடி நன்றியினை  மனமுவந்து உரித்தாக்குகிறது .

மேலும் ஊர் வளர்ச்சியிலும் மக்கள் மறு மலர்ச்சியிலும் பங்குக் கொண்டு செயலாற்றும் எந்த அமைப்பாகிருந்தாலும் அவர்களுக்கு உடந்தையாகிருந்து ,அதனுள் பங்கு வகிக்கவே இந்த மக்கள் குரல் விரும்புகிறது .அகந்தைக்கொள்ளவும் ,பொறாமைக்கொள்ளவும் இதுப்போன்ற நல்ல விசயத்தில் தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து ஊர் வளர்ச்சிக்காக பாடு பட வேண்டும் எனவும் அனைத்து இயக்கத்திற்கும் இந்த அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்