இன்று நடக்கவிருந்த தமிழோசையின் பவள விழா இரத்து !

குவைத்தில் பல அமைப்புகள் இருந்தாலும் தமிழனுக்கென்றே தனித்து சொல்லிடும் தமிழோசை கவிஞர் மன்றம்போற்றுதலுக்குரியது . இங்கு வாழும் மக்கள் மத்தியில் தனித்து  விளங்கி மக்கள் மனதில் அங்கம் வகிக்கும் ,இந்த அமைப்பை குவைத் வாழ் தமிழர்களின் குடும்பம் என அழைப்பது வழக்கம் .

இந்த அமைப்பில் பல்லாண்டு காலமாக செயற்குழு உறுப்பினராகவும் ,அண்மை காலமாக ஆலோசகராகவும் அங்கம் வகித்து வந்த திரு .அட்லஸ் அன்சாரி அவர்களின் மறைவின் காரணத்தால் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடக்கவிருந்த பவள விழா இரத்து செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர். பிரான்சிஸ்   தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவிக்கையில் சகோதரரின் இழப்பு எங்களுக்கு ஈடு  செய்திட  முடியா பேரிழப்பாகும் .எங்கள் குடும்பத்தில்{கவிஞர் } உறுப்பினராக இருந்து செயல்வீரராகிருந்து செயல்பட்டு இன்று நம்மைவிட்டு பிரிந்திருக்கும் இவரின் செயல் எல்லையற்றது  கூறி அடக்கிக் கொண்டேப்போனாலும் நல்ல உள்ளம் படைத்தவர் ,பழகுவதிலே நல்ல பண்பாளர் . இவரை பிரிந்து தவிக்கும் இவர்களுடைய குடும்பத்திற்குஇத்தருணத்திலே ஆறுதலை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். 

மேலும் இவர் மறைவை ஓட்டி இன்று நடக்கவிருக்கும் பவள விழா கூட்டமும் இரத்து செய்கிறென் எனவும் கூறினார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்