பிரபல எழுத்தாளரும் ,கவிஞருமாகிய அட்லஸ் அன்சாரி இன்று காலமானார் !


குவைத்தில் அட்லஸ் எனும் காகித,எழுதுப்பொருள் நிறுவனத்தில் முக்கிய பதவியாலராக பதவி வகுத்து வரும் இவர் !குவைத் வாழ் மக்களிடேயே தமிழின் தன்னார்வத்  தொண்டினால் ,மக்களால் மிகவும் பிரபலமானார். மேலும்,தமிழோசை கவிஞர் குடும்பத்தில் ஒருவராக அங்கம் வகித்து வந்த அவர் !சமீபத்தில் அந்த குடும்பத்திற்கு ஆலோசகராகவும் பொறுப்பேற்றார் .

இவருடையப் பணிகளை குறிப்பிட்டு கூறுமேயானால் தமிழ் வளர உரமாக இருந்து ,சிறுக் கொடிகளை வழங்கி வளர்த்து வந்தார் மேலும் இவருக்கு தெரியாத அமைப்புகளே அல்லர் !அந்த அளவில் பிரபலமான அவர் பழகுவதிலும் ,குணத்திலும் ,ஒழுக்கத்திலும் நல்ல பண்பாளராக இருப்பார் ..

எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இவரின்  பாவனை சிறுக் குழந்தை உள்ளத்தால் அனைத்து உள்ளத்தையும் வெல்லும் அன்பாளர் .தான் விலகி நின்றாலும் ,நெருங்கி வந்து பேசும் குணம் படைத்தவர் .ஆகவே நல்லோரை போற்ற வேண்டும் ,பொல்லாரை வீழ்த்தப் படவேண்டும் .

நல்லவராகவே ,வாழ்ந்து ,நல்லவாரகவே இயற்கை ஏய்திருக்கும் இவருக்கு இறைவனின் சொர்க்கத்தையடைய நாம் பிரார்த்திப்போம் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்