சகோ.அப்துல் சமத் கோமா நிலையில் மீட்கப்பட்டு பார்வானியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவர் இருக்கும் காணுகையில் உள்ளம் உருக வைக்கிறது .
சகோ .அப்துல் சமத் ஜிலீப் ஓட்டலில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் சம்பவத்தன்று குளியலறைக்கு குளிக்க செல்லுகையில் அப்போது மயங்கி விழுந்துள்ளார் .நேரம் கடந்தும் வராத காரணத்தால் அவருடன் இருந்த சகாக்கள் குளியலறை கதவை உடைத்து பார்த்ததில் சகோ . அவர்கள் வாயிலிருந்து ரத்தம்வெளி வந்த நிலையில் மயங்கி கெடந்தார் .
![]() |
நன்றி :புகைப்படம் மற்றும் தகவல் இந்தியன்ஸ் இன் குவைத் இணையதளம் . |
அதை கண்ட அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர் .மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மூளை நறும்பு பாதிக்கப்பட்டு ரத்தம் வெளிவருவதாக மருத்துவர் தகவல் அளித்ததுடன் அவருக்கு மூளை நறும்பியல் அறுவை சிகிச்சையும் செய்துள்ளதாக வும் தெரிவித்தார்கள் .சகோ .அப்துல் சமத் நாடு திரும்பி சில நாட்களான நிலையில் இந்த அவல சம்பவம் நடைபெற்று இருக்கிறது .அவர் ஊருக்கு சென்று புதிய கட்டிடம் வீட்டை கட்டிவந்த நிலையிலும் அந்த வீட்டிற்காக எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பது தாயக தகவல் வந்துள்ள நிலையில் ,அவருக்கு திருமணமாகி பதினான்கு வருடம் ஆகியுள்ளது அவரின் துணையாரின் பெயர் நஜிமா இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளன ,மூத்தவள் எட்டாவதும் ,நடுப்பெண் ஆறாவதும் ,இளையவள் முதலாம் வகுப்பில் படித்து வருகிறார்கள் .
இதுவரையில் கோமாவில் மோசமான நிலையில் இருக்கும் சமயத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதினால் அவர் பெற்ற கடனை ஏற்க வேண்டிய நிபந்தனையில் சகோதரி நஜிமா தள்ளப்பட்டுள்ளார் .