
குவைத் ஆசியர்கள் பெரும்பாலும் அங்கம் வகிக்கும் பகுதி ஜிலீப் மற்றும் பார்வானிய ,அப்பாசியா போன்ற பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சட்டத்திற்கு முரணான போக்கையும் ,அதற்கு விரோதமான செயல்பாட்டிலும் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளது .மேலும் வீட்டை விட்டு பாய்ந்தவர்கள் ,ஓடிவிட்ட வழக்குகள் ,விபச்சார வழக்குகள் ,குடியுரிமையின்மை ,குடியியல்யின்மை ,போதைப்பொருள் உட்கொண்டிருத்தல் ,வாகனம் ஓட்டுனர் உரிமையின்மை ,கைப்பேசி மூலம் வெளிநாட்டு தொடர்பு அழைப்பு பனி செய்பவர்கள் அதில் ஈடுபட்டவர்கள் {INTERNET CALL CENTER}போன்ற பல்வேறு குற்றசாட்டில் இருந்தவர்களும் வழக்கு பதியப்பட்டு காவலாள் தேடப்பட்டவர்களும் காவலர்களின் அதிரடி வேட்டையால் அகப்பட்டுள்ளனர் .
மேலும் தொடர்ந்து இதுப்போன்ற சோதனைகள் நடைப்பெறும் எனவும் நிறுவனத்தின் சட்டத்திற்கு எதிராகவும் மாறாக அரசு அங்கீகரிக்கப்படாத குடியுரிமை (வீட்டு வேலை )வைத்துக்கொண்டு அந்நிய இடத்தில் தொழில் செய்பவர்களையும் (காதிமில் வேலைப்பார்க்கும் நபர்கள்)சோதனையில் கண்டறிந்து நாடு கடத்தப்படும் எனவும் காவல் துறை ஜெனரல் சுலைமான் அல் பெஹத் தெரிவித்துள்ளார் .
மேலும் இக்கண்காணிப்பில் காவல்துறை மூத்த அதிகாரிகளும் ,பாதுகாப்பு படையினர்களும் ,மேலும் பகுதி காவலர்களும் தீவிரமாக இதில் இரங்கி சோதனை செய்து வருகின்றனர் .