1. மரணத்தைத் தவிர்க்க முடியாது.
மரணம் நிச்சயமான ஒன்று. எனவே, அந்த மரணத்திற்காகவும் அதன் பிறகு வரவிருக்கின்ற மறுமை வாழ்வுக்காகவும் நீங்களும் நானும் தக்க ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் - வுக்கு அஞ்சுங்கள்.மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ் - வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்.(அத்தியாயம் அல்ஹஷர் 59: 18)
இரண்டு. உயிரைக் கொடுப்பவனும் இறைவன்தான். உயிரைப் பறிப்பவனும் அவனே. அவனே மரணத்திற்கான தேதியையும் நேரத்தையும் குறிக்கின்றான். அதனைத் தவிர்க்கவோ, தாமதப்படுத்தவோ, தள்ளிப்போடவோ, முடியாது.மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்ப - தாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர் - களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது. (அத்தியாயம் 16: அந்நஹ்ல்: 61)
மூன்று. ஒருவர் எங்கே எப்படி மரணமடைவார் என்பதை இறைவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டான்.
இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அது பற்றிய தகவல் தெரியாது.தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. (அத்தியாயம் 31: 34ஒருவர் எந்த இடத்தில் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த இடத்திற்கு அல்லாஹ் அவரை அவருடைய இடத்திலிருந்து கிளப்பிக் கொண்டு போகின்றான் என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.நீர் கூறும்: '! நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்'(அத்தியாயம் 3: ஆலுஇம்ரான்: 154)
நான்கு. மரணிக்கும்போது இறைநம்பிக்கை இருக்கின்ற நிலையில் மரணிக்க வேண்டும். இதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.'இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3 அத்தியாயம் ஆலுஇம்ரான்: 102)
இந்த வசனம் நிகாஹ் குத்பாவில் திருமணச் சொற்பொழிவில் ஓதப்படுகின்றது.அதாவது மணமக்களுக்கு மரணம் குறித்து நினைவூட்டப்படுகின்றது. அவர்களுடைய வாழ்வின் மிக மிக சந்தோஷமான வேளையில் மகிழ்ச்சி பொங்குகின்ற தருணத்தில் அவர்களுக்கு மரணத்தைக் குறித்து நினைவூட்டப்படுகின்றது.
இதற்கு என்ன பொருள்?உங்களுடைய இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலையானதன்று.அது போலத்தான் உங்களுடைய வாழ்வும். எனவே நிலையில்லாத இந்த வாழ்வை விட நிலையான மறுமை வாழ்வுக்கு அதிக முன்னுரிமை தாருங்கள்.ஆனால், நீங்கள் இம்மை வாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.(அத்தியாயம் அல் அஃலா 87: 16, 17)ஐந்து. பின்வரும் துஆவை ஜனாஸா தொழுகையில் மட்டுமின்றி அடிக்கடி ஓதுவதை நாம் பழக்கப் - படுத்திக்கொள்ள வேண்டும்.
'இறைவனே! நம்மில் உயிருடன் வாழ்வின் எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் வாழச் செய்வாயாக! நம்மில் மரணிக்கின்ற எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் மரணிக்கச் செய்வாயாக!எனக்கு இன்னொரு துஆவும் மிகவும் பிடிக்கும். யூசுப் நபி செய்த துஆ அது:!
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்கசீலர்களுடன் சேர்ப்பாயாக!(அத்தியாயம் 12: யூசுப்: 101)
அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைநம்பிக்கையின்படி வாழ்கின்ற, அந்த நிலையிலேயே மரணிக்கின்ற நற்பேற்றைத் தந்தருள்வானாக! அதறகான வழிகாட்டுதலையும் நல்லருளையும் தந்தருள்வானாக!
மரணம் நிச்சயமான ஒன்று. எனவே, அந்த மரணத்திற்காகவும் அதன் பிறகு வரவிருக்கின்ற மறுமை வாழ்வுக்காகவும் நீங்களும் நானும் தக்க ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் - வுக்கு அஞ்சுங்கள்.மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ் - வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்.(அத்தியாயம் அல்ஹஷர் 59: 18)
இரண்டு. உயிரைக் கொடுப்பவனும் இறைவன்தான். உயிரைப் பறிப்பவனும் அவனே. அவனே மரணத்திற்கான தேதியையும் நேரத்தையும் குறிக்கின்றான். அதனைத் தவிர்க்கவோ, தாமதப்படுத்தவோ, தள்ளிப்போடவோ, முடியாது.மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்ப - தாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர் - களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது. (அத்தியாயம் 16: அந்நஹ்ல்: 61)
மூன்று. ஒருவர் எங்கே எப்படி மரணமடைவார் என்பதை இறைவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டான்.
இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அது பற்றிய தகவல் தெரியாது.தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. (அத்தியாயம் 31: 34ஒருவர் எந்த இடத்தில் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த இடத்திற்கு அல்லாஹ் அவரை அவருடைய இடத்திலிருந்து கிளப்பிக் கொண்டு போகின்றான் என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.நீர் கூறும்: '! நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்'(அத்தியாயம் 3: ஆலுஇம்ரான்: 154)
நான்கு. மரணிக்கும்போது இறைநம்பிக்கை இருக்கின்ற நிலையில் மரணிக்க வேண்டும். இதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.'இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3 அத்தியாயம் ஆலுஇம்ரான்: 102)
இந்த வசனம் நிகாஹ் குத்பாவில் திருமணச் சொற்பொழிவில் ஓதப்படுகின்றது.அதாவது மணமக்களுக்கு மரணம் குறித்து நினைவூட்டப்படுகின்றது. அவர்களுடைய வாழ்வின் மிக மிக சந்தோஷமான வேளையில் மகிழ்ச்சி பொங்குகின்ற தருணத்தில் அவர்களுக்கு மரணத்தைக் குறித்து நினைவூட்டப்படுகின்றது.
இதற்கு என்ன பொருள்?உங்களுடைய இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலையானதன்று.அது போலத்தான் உங்களுடைய வாழ்வும். எனவே நிலையில்லாத இந்த வாழ்வை விட நிலையான மறுமை வாழ்வுக்கு அதிக முன்னுரிமை தாருங்கள்.ஆனால், நீங்கள் இம்மை வாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.(அத்தியாயம் அல் அஃலா 87: 16, 17)ஐந்து. பின்வரும் துஆவை ஜனாஸா தொழுகையில் மட்டுமின்றி அடிக்கடி ஓதுவதை நாம் பழக்கப் - படுத்திக்கொள்ள வேண்டும்.
'இறைவனே! நம்மில் உயிருடன் வாழ்வின் எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் வாழச் செய்வாயாக! நம்மில் மரணிக்கின்ற எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் மரணிக்கச் செய்வாயாக!எனக்கு இன்னொரு துஆவும் மிகவும் பிடிக்கும். யூசுப் நபி செய்த துஆ அது:!
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்கசீலர்களுடன் சேர்ப்பாயாக!(அத்தியாயம் 12: யூசுப்: 101)
அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைநம்பிக்கையின்படி வாழ்கின்ற, அந்த நிலையிலேயே மரணிக்கின்ற நற்பேற்றைத் தந்தருள்வானாக! அதறகான வழிகாட்டுதலையும் நல்லருளையும் தந்தருள்வானாக!