தமிழர்களாகிய நாம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது .

 குவைத்தில் வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணி அளவில் நடைப்பெற்ற கலவரம் .சில தமிழர்களுக்கும் வங்காள தேசத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது .

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனையில் முன் விரோதம் காரணமாக குவைத் மிர்காப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக நடு வீதில் போட்டு வெள்ளிக்கிழமைகளில் திரைப்படம் விற்கும் தமிழர்களுக்கும் , இவர்களுடன் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கும் வங்காள தேச நாட்டினருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு மோதல்வெடித்துள்ளது.

இதனிடையில் வங்காள தேச நாட்டவரால் தமிழக திரைப்பட காணொளி விற்பனையாளர்கள்  தாக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அவர் அங்கு நின்றுள்ள தமிழர்களை கண்டு ஒரு அந்நிய நாட்டவர் தாக்குகையில் நின்று வேடிக்கை பார்க்கிறீர்களே ஓலமிட கும்பல் கூடியதால் அடித்துவிட்டு ஓடிவிட்ட அண்டை  நாட்டவரில் இருவர் மீண்டும் திரும்பி வர அடையாளம் தெரியாத காணொளி விற்பனையாளர் சில  தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த நாட்டினர் இருவரை தாக்கி உள்ளனர் .

இதை அறிந்து வங்காள தேசத்தினர் ஆத்திரமடைந்த ஒருக்கூட்டம் வேகமாக புறப்பட்டு வந்து அந்த்கப்பகுதியில் இருக்கும் தமிழர்கள் அத்துனைப் பேரையும் கட்டைகளாலும் ,இரும்பாலும் தாக்கி உள்ளனர் . இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் அப்பாவிகள் ஆவார் .வெள்ளிக்கிழமைதோரம் ,மாதம் ஒருமுறையும் விடுமுறை கழித்து ,துன்பத்தை போக்கி நட்புறவு பரிமாற்றம் செய்துக்கொள்ள வந்த இரு அப்பாவிகள் இந்த அசம்பாவிதத்திற்கு பலிக்கெடா ஆகியுள்ளது வேதனைக்குரியது . 


அந்த இருவருக்கு பலத்த அடிகள் விழுந்து நாடித் துடிப்புக்கூட செயலாகாமல் தவித்துக்கொண்டிருக்கையில் அந்த பகுதியில் T.N.T.J அமைப்பை சார்ந்த சிலர் கேள்வி அறிந்து அந்த சகோதரர்களை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் .மருத்துவர்கள் சிகிச்சை அளித்தப்பிறகு வீடி திரும்பி இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது .

மேலும் தமிழர் எந்த தீய செயலுக்கும் உடந்தையாக மாட்டான் ஆனால் சில பணப்பேய் பிடித்த காளையர்களின் தவறால் அனைத்து தமிழர் தாக்கப்பட்டதையும் ,தமிழர் பெயருக்கு அவமானம் ஏற்படுத்த தூண்டியரையும் நாம் இனம் கண்டு காவலில் சிக்க வைக்க வேண்டும் .காணொளி விழிப்பை ஏற்படுத்துகின்ற விதத்தால் இருந்தால் அதை வரவேற்கலாம்  ஆனால் இவர்களோ அதற்கு மாறாக தவறான பாதைக்கு ஆபாச திரைப்படங்கள் விற்பதால் இவர்களுக்கு எவரும் உடந்தையாகக் கூடாது . அவர் தவறு செய்தாலும் மற்றவர் தவறு செய்தாலும் ஒன்றே .!

மிருகத்திற்குதான் புத்தி கிடையாது சண்டைகள் போட்டுக்கொள்வார்கள் அதேப்போல இவர்கள் சண்டைகள் போட்டு இவர்களால் பாதிக்கப்பட்டது அப்பாவிகள் இதனால் நாம் அனைவரும் அவர்களிடத்தில் திரைப்படங்கள் வாங்க புறக்கணிக்க வேண்டும் .

மேலும் இதுப்போன்ற செயல்கள் அரங்கேறும் இடங்களில் நல்ல தமிழர்களாகிய நாம் நிற்க கூடாது . அங்கு நிற்பதினால் தமிழனுக்கு மட்டுமில்லை அவ்விடத்தில் எவர் நின்றாலும் அவர்களுக்கும் அவமானமுமே  ,தவறான தீங்கு இழக்கக் கூடிய விசயத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால்  மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது அவசியமும் .!
ஆகவே நாம் இங்கு வந்துள்ளது பிழைக்கவே ....சில அடங்காப்பிடாரிகள் எது நன்மை தீமை என்றுக்கூட அறியாது இந்தியர் மீது  அவப்பெயர் உண்டாக்குவதுடன் இது தன்னுடைய சொந்த ஊர் என கருதி வன்முறை களமாக்கி மோதல்கள் உருவாக்க செய்து தாயகத்தில் நிரந்தரமாக குண்டர்களாக சுற்றி திரியும்  அவர்களிடம் நட்பு வைப்பதும் தப்பாகும் .தவறு என்று அறிந்து இந்த குவைத் சட்டத்திற்கு முரணாக செயல்படும் இவர்களுக்கு கரங்களுக்கு காப்பு நிச்சயம் உண்டு என்பதால் மிகவும் விவேகமாக இருக்க வேண்டியது நமது கடமை .

இதை மறந்து இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டால் சிறையும் காப்பும் எதிர்வீற்றிருக்கிறது , கைரேகையுடன் சுமந்து செல்ல விமானம் காத்திருக்கிறது என்பதை மறவாதீர்கள் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்