வெளிநாடு மோகம் பணம் இழந்து வாடும் பரிதாபம் .


அரபு நாடுகளில் பணிப்புரிந்து சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக கை ரேகையுடன் தாயகம் திரும்பிய சகோதரர்கள் மற்ற அரபு நாட்டிற்கு தாவும்போது கவனத்தில் கொள்ளவும் . அந்த நாட்டைவிட்டு மற்ற நாட்டிற்கு போனாலோ அல்லது அதே நாட்டில் மீண்டும் விசா பெற்று அந்த நாட்டிற்குள் நுழைய நினைத்தாலோ மறுப்படியும் அரபு நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் ஆகவே அதற்காக மிகவும் கவனமாக இருக்கவும் .

இன்று பலர் நாட்டை விட்டு நாடு கடுக்கும்போது தங்களுக்கு கைரேகை எடுக்கப்பட்டது அறிந்தும் வெளிநாட்டில் சம்பாரிக்க வேண்டும் மோகத்தால் மீண்டும் அதே நாட்டிற்கு அல்லது மற்ற துணை அரபு நாட்டிற்கு செல்ல வேண்டும் நினைக்கின்றனர் அனால் அதற்காக முயற்சிகளை கையாண்டு விசாபெற்று விமான நிலையத்தில் நுழையும் தருணத்தில் விமான நிலைய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் நாட்டிற்கு திருப்பி விடுகின்றனர் ஆகையால் கைரேகை சம்பந்தப்பட்ட சகோதரர்கள் தாயகத்திலே பிழைப்பை தேடிக்கொள்ளும் படியும் இதன் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது .

அப்படிஇருந்தும் சிலர் ஏஜெண்டுகளை பிடித்து தான் கைரேகை பதிவு செய்யப்பட்டிருப்பது தகவல் கொடுத்து அதை எடுக்க கூடுதல் பணம் செலவழித்து வருகின்றனர் ஆனால் அப்படிசெளவு செய்தேன் கூறுவதும் அப்பட்டமான பொய்யாகும் இன்றை வளைகுடா நிலையில் இதுப்போன்ற செயல்கள் நடைப்பெறாமல் இருக்க பாவு ஆடை{ பைல் }முறையை அப்புறப்படுத்தி குறுந்தகடாக சேமித்து அதை பல்வேறு அரசு துறையினருக்கு விநியோகம் செய்யப்படுகிறது .ஆகையால் இதுப்போன்ற செயல்கள் என்னால் முடியும் எனக்கு இவர் தெரியும் ,அவர் தெரியும் கூறும் பொய் பித்தர்களிடம் பணமிழந்து தவிக்க வேண்டாம் .

வர செலவு செய்ய நினைக்கும் அந்த பணத்தை கொண்டு தாயகத்தில் சுய வேலை செய்து பிழைக்க நினைத்தால் பணமும் வீணாகாது . நமக்கு தேவையான பிழைப்பும் கிடைத்துவிடும் ,உறவுகள் துறந்து பிழைக்க வேண்டிய கட்டாயமும் தேவையில்லை அதற்கு முதலில் கவுரவத்தை இழக்க முன் வரவேண்டும் . பிளாட் பார்மில் செருப்பு கடை வைத்து பிழைத்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 500  ௦௦ ரூபாயை ஈட்டலாம் . மக்கள் கவனத்தில் கூனிமேடு குரல் நிர்வாகம் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்