குவைத் :- தமிழ் நாட்டை சார்ந்த சகோதரர் மாரடைப்பால் மரணம் .


குவைத் நாட்டில் சலவையகத்தில் பணிப்புரியும் சகோதரர் சாதிக் புனைப்பெயர் (வெத்தலை சாதிக் )அவர்கள் மாரடைப்பால் மரணித்துள்ளார் . அவருக்கு வயது 42 .

சம்பவத்தன்று சகோதரர் பணிப்புரியம் கிடங்கிற்கு துணியை கொண்டு வருவதற்காக சென்று இருக்கிறார் அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது  .

கீழே சரிந்த சகோதருடைய உயிர் அப்போது பிரிந்துள்ளது  சென்று அரை மணி நேரத்திற்கு மேலாகவும் வரவில்லையே என  காண சென்ற சக ஊழியர்கள் காணுகையில்  சகோதரர் இறந்து கடந்தார் .உடனே தகவலை தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகம் அதல் ஜினாஹியாவிற்கு தொலை தொடர்புக்கொண்டு தகவலை தெரிவித்ததுடன் . அவர்கள் இறந்த உடலை கையோகப்படுத்தி கொண்டு சென்றுள்ளனர் .

இருப்பினும் இவர் இறந்த செய்தியை தமிழ்நாட்டை சார்ந்த பாபா நாசம் பகுதிவாசி  சகோதரர்களுக்கு T.N .T.J  குவைத் தமிழ் நாடு தவுஹித் ஜமாஅத் அமைப்பு தகவலை அனுப்பி இருக்கிறது . மேலும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் தகவலை தெரிவித்திருப்பதாக தகவலை தந்துள்ளார் சகோதரர் அஹமது ராஜா ஷரிப் .

மேலும் இந்த சகோதரருக்காக குவைத் T.NT.J அமைப்பு உடலை மீட்டு தாயகம் விரைவில் சென்றடைய அனைத்து ஏற்பாடுகளும் விரைந்து செய்ய இருப்பதாகவும் அதற்கு மருத்துவ அணிச் செயலாளர் சகோதரர் சித்திக் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து கையோகப்படுத்தி சாவு கிடங்கில் வைத்திருக்கும் உடலை காணவும் சட்ட வழி முறைகளை கையாண்டு சிக்கல்களை  தீர்க்க விரைந்துள்ளதாகவும் சகோதரர் கூத்தாநல்லூர் ஜின்னாஹ்  தெரிவித்துள்ளார் . 


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்