ம.ம.க கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் குவைத்திற்கு வருகை !!

குவைத் மிர்காப் பகுதியில் தமிழ் குத்பா பள்ளிவாசலில் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொள்ள வருகைத்தரும் ம.ம.க ,தா.மு.மு.க ,கட்சி பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர்கள்பேராசிரியர்,  ஜனாப்  .ஜவாஹிருல்லாஹ் அவர்களும் சகோ அசலம் பாஷா அவர்களும் வருகைப்புரிந்து சமூக மேம்பாடு விழிப்புணர்வுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேருரையை வழங்க உள்ளார்கள்  .

இந்த நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 06.07.2012 மிர்காப் ஜும்மா பள்ளிவாசலில் ஜூம்மா குத்பாவுக்கு பின்னால் பேரா .சகோ .ஜவாஹிருல்லாஹ் அவர்கள்  பேருரை வழங்க இருப்பதும் அதற்கு பின் பொது நிகழ்ச்சியாக மாலை 4.00 மணிக்கு தொடங்க இருக்கும் நிகழ்சியில் கலந்துக்கொள்ள இருப்பதாக ஹவள்ளிப் பகுதி பொறுப்பாளராக நியமனம் செய்திருக்கும் சகோ.ஜகரியா தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் மறுநாள் 07.07 2012 சனியன்று மங்காப் பகுதியில் உதயம் உணவகம் கீழ் தளத்தில் சிறப்புரை வழங்க உள்ளதாகவும் தகவலை தெரிவித்திருக்கிறார் .மேலும் குவைத்தில் அனைத்துப்பகுதிகளுக்கும் வாகன வசதிகளை தயார் செய்து கொடுக்க தயாராக இருப்பதாகவும் ,தேவை எனும் பட்சத்தில் அலைப்பேசியில் அழைப்பு விடுத்தால் வீட்டில் வந்து அழைத்து செல்ல காத்திருப்பதாகவும் .

நிகழ்வு நடைப்பெறும் அரங்கில் பெண்களுக்கென்றே தனி இட வசதி ஏற்படுத்தி இருப்பதாகவும் கூடுதல் தகவலை தெரிவித்துள்ளனர் .

மேலும் கூடுதல் ஆலோசனைகள் பெற ...!

சகோ.சர்புதீன்  :+965 99861359
சகோ.ஜகரியா :+965 55816590

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்