கூனிமேட்டின் சகோதரரின் குழந்தை இறந்த பரிதாபம் !


கூனிமேடு நபிகள் நகரில் வசிக்கும் அமனி அவர்களின் மூத்த மகனான அலாம் அவர் புதுவை மாநிலம் காலாப்பட்டில் குடியேறி வசித்து வருகிறார் .சம்பவத்தன்று இரவு அவரின் சுமார் ஐந்து வயதான பெண் குழந்தை இரவு உணவு முடித்தப் பிறகு நல்ல முறையில் உறங்கி இருக்கிறாள் மறு நாள் அவளின் தாயார் எழுப்பி பார்த்ததில் அசைவு இல்லாமல் ஜடமாய் கடந்ததை கண்டு அதிர்ச்சியுற்று உடனே அருகிலிருக்கும் பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் .

அப்போது அந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர் கூற அலறி கதறி அழுததில் அந்த பரிதாபத்தை கண்டவர்களின் உள்ளத்தை உருக வைத்தது .இந்த சம்பவம் புதன் காலையில் நடைப்பெற்றது அதன் பிறகு மருத்துவ பிரேத பரிசோதனை முடிந்து பெறப்பட்ட அக்குழந்தையின் சடலம் அன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது .குழந்தையின் தந்தை அலாம் குவைத்தில் டி.வி .எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்