கூனிமேட்டில் நடந்த கண்டன எதிர்ப்பு போராட்டம் !

கூனிமேட்டில் நடந்த கண்டன எதிர்ப்பு போராட்டம் !
ஒரு பகுதி மக்கள் கூட்டம் 

கண்மணி நாயகத்தை அவதூறு பேசிடவே நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் ஆபாசப் படத்தையா எடுத்திடவா நின்று கூடி வேடிக்கை பார்ப்போம் .
கொடியை எரித்து கண்டனம் 
படம் பார்ப்பதே ஹராம் கூறிட்ட நாயகத்திற்கு அவர் படத்தையே எடுத்து ஆபாசமாய் எடுத்து  இருக்கிறாயே அமெரிக்கா நாயே ...அதை எப்படி பொறுத்துக் கொண்டு இருப்போம் ....!நாங்களாக ஏற்படுத்திய வளர்ச்சி இல்லை இது மக்கள்  உணர்ந்து  வளர்கின்ற எழுச்சி ! ஒருப் படம் இல்லை ஆயிரம் படங்கள் எடுத்தாலும் கெடுவது இசுலாம் இல்லை !உயர்ந்து வளர்ந்துக் கொண்டுதான் இருக்கும் இசுலாம் .

எப்படி முட்டுக் கட்டை போட நினைத்தாலும் உங்களால் எதையும்  இயலாது வளர்வது வளர்ந்துக் கொண்டுதான் இருக்கும் !இதுப்போன்ற எண்ணற்ற ஆவேசப் பேச்சிகள்   நாய் நாய் ...என்கின்ற கோழம் ...நிறுத்திவிடு ,நிறுத்துவிடு !எரித்து விடு எரித்து விடு   இடி முழுங்கும் சப்தம் இதனால் முதன் முறையாக கூனிமேடு மக்கள்  போராட்ட களத்தில் இறங்கி இருப்பது வியக்கத்தக்கது .

இந்த போராட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தியவர் சகோ .பாஜி அப்துல் மஜீத் ஆவார் கண்டன உரையை இந்திய முஸ்லிம் லீக் சார்பாக வருகைத் தந்து பேசியவர்கள் சகோ.சங்கை ஷர்புதீன் , இடி முரசு இக்பால் ,இஸ்மாயில் போன்றவர்களுடன் செட்டிகுப்பம் இமாம் அவர்களும் கூனிமேடு இமாம் சாதிக் அவர்களும் மேலும் சிறப்பாக கலந்து பேசினர் .இதில் ஏராளமானோர் ,ஆண்களும் ,பெண்களும் கலந்துக் கொண்டனர் .இறுதியாக பாதுகாப்பிற்கு வந்த  காவல் துறையும்  நன்றியும்  சமர்பிக்கப்பட்டது .

இந்த கண்டனகூட்டத்தை ஒருங்கிணைத்தவர் சகோ.பாஜி மஜீத் இவர்களுக்கு உதவிப்புரிந்தவர் இமாம் சாதிக் பாஷா காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு கூனிமேடு தவுஹித் ஜமாஅத் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்