கூனிமேடு பல்வேறு பகுதியை சார்ந்த மாணவர்கள் அரசு உயர்நிலைப் பள்ளி ,எ.எல் .எம் உயர்நிலைப்பள்ளி மற்றும் புதுவையில் தனியார் பள்ளியில் படித்து வருகின்ற நிலையில் !இவர்கள் சமீபத்தில் தேர்வுகள் எழுதி வெளியாகி இருக்கின்ற தருணத்தில் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவ ,மாணவிகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முன்னேறி உள்ளனர் .
கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் 82 %சதவிகிதம் .ஆகும் ஆனால் இவ்வாண்டு அதிகரித்து 92 %சதவிகிதத்திற்கும் கூடுதலாக இம்முறை தேர்ச்சிப்பெற்றுள்ளனர் .அதேப்போல பனிரெண்டாம் வகுப்பில் கடந்த ஆண்டு 81 % சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்று இருந்தனர் .தற்போது அதைவிட முன்னேறி தற்போது 94 %சதவிகிதம் தேர்ச்சிபெற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
கடந்த ஆண்டைப்போல தற்போதும் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் .