வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் ,நிறுவனத்தில் இருந்து மறைமுகமாகவும் காணாமல் போனவர்களை தேடிட உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி நாளுக்கு நாள் வழக்குகள் குவிந்த வண்ணம் இருக்கையில் அதை முற்று புள்ளி வைக்கும் விதமாக உள்துறை அமைச்சக உயர் அதிகாரி சுலைமான் அல் பாஹாத் மற்றும் மற்றொரு அதிகாரியான முஹம்மத் அல் தோசரி எடுத்துக்கொண்ட மேற் முறையீடு காரணத்தால் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் காவலர்களும் பாதுகாப்பு படையினரும் களத்தில் இறங்கினார்கள் . பாஹாஹீல் பகுதியிலும் மற்றும் சிக்கராப் பகுதியிலும் சோதனையில் ஈடுப்பட்டப்போது சட்ட விரோதமாக செயல்பட்ட தொழிலாளர்களை 520 நபர்களை கைது செய்தனர் .
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் குவைத் அரசுக்கு எதிராகவும் சட்ட விரோதமாக மறைந்து இருந்தவர்களையும் உரிமையாளர்கள் எதிராக மீரப்பட்டவர்களையும் வீட்டில் இருந்து பாயிந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 520 ௦ நபர்களை குற்றவியல் பிரிவில் கைது செய்து உள்ளதையும் மேலும் ,பல பகுதிகளில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட இருப்பதையும் தெரிவித்ததுடன் .
மேலும் இந்த சோதனை விரிவாக்கப்பட்டு அனைத்துப் பகுதியிலும் பாதுகாப்பு படையினரும் ,காவல்துறையினரும் இணைந்து செயல்பட்ட இருப்பதாகவும் தேவைப்பட்டால் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் கூடுதல் துப்பு துளைக்கும் குழுவையும் ஈடு படுத்திட முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது( M .O .I ).