சமீபத்தில் இறந்த தமிழகத்தை சார்ந்த சகோதரர் சாதிக் அவர்களுடைய உடல் இன்று மாலை கத்தார் விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறது .

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணித்த சகோதரர் சாதிக் @வெத்தலை சாதிக் அவர்களின் உடல் இன்று காலை முதல் அல் சபாஹ் மருத்துவமனையில் பார்வையாளருக்காக வெளியே வைக்கப்பட்டது பிறகு சுமார் 11 மணி அளவில் இந்திய தூதரகம் சோதனைக்கு பிறகு சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டதாக சகோதரர் அஹமது ராஜா ஷரிப் தகவல் தந்தார் அதற்கு முன்பாக சகோதரர் அல் நாஸ் சாதிக் அவர்கள்{ சரக்கு சேவகர் }ஆசிரியரை தொடர்புக்கொண்டு காண  விரும்புவோர் இன்று காலை 10 மணி வரை காண்பிக்கப்படுவதாக தகவலை தெரிவித்தார் .

இறந்தவருக்கு அனைத்து சேவைகளும் செய்ய முன் வந்தது குவைத் T.N.T.J அமைப்பாகும் இவர்களுடன் சுப்ரீம் கார்கோ இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது .


தொடர்ந்து சரக்கு சேவையில் முன் மாதிரியாக விளங்குபவர் சகோதரர். சாதிக் அவார்,. 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்