விலைமதிப்பற்ற நிலம் !


பிறவி ஒன்றே...இருப்போம் இருக்கையில் 
அன்போடுதாயை அரவணைப்போம்
உள்ளத்திலே நீங்கா இடம் வகிப்போம் !

ஒத்தச் சொல்லால்அழைத்தாலும்
மொத்தச் சொல்லால்இணைத்தாலும்
முத்தச் சொல்லேயாகும்அம்மா !

உதடுகள் உச்சரிக்கமறுத்தாலும் 
உள்ளத்தில் அகற்றிவெறுத்தாலும் 
நிறைக்கானும் உன்னதவுறவேஅம்மா !

கோபங்கொண்டு வெறுத்தாலும்பேசத்தான்
மறுத்தாலும் உள்ளக்குடியிலே நிரந்தரமாய்
குடி அமர்த்துபவளே அம்மா !

முள்தைத்துமுனகும் முன்னே
வலிகனத்துதுடிப்பாள் !-வேதனையால்
வருந்திகண்கலங்கியே முறைப்பாள் !

பசியறிந்து வாடுமுன்னே பசிப்பிணியைப் 
போக்க நினைப்பாள் !-பட்டுடையுடத்த
நினைக்காவிட்டாலும்கந்தாடையுடித்திருப்பாள் !

காணும் கனவினைசிறக்கப்பிள்ளையின்
வாழ்க்கைச்சொலிக்க !-உறங்காமல் விழிபபாள்! 
தன் ஆயுளையும் அவனக்காக.. கொடுப்பாள் !

பெற்று, சுமந்து, வளர்த்து கட்டியப்பின்பு  
கட்டியக்கூட்டை கலைக்க தவிர்ப்போம் !
இருக்கும்முதல் இறக்கும்வரை பாசத்தை அள்ளிக்கொடுப்போம் !

ஆதரவற்றவர்களாய் இருக்கையிலே அனாதைகளுக்கு 
ஆதரவுத்தரும்அன்னையின்ஆலையம்!- முதுமையோடிருப்பின் 
அரவணைக்கும் ஒருமுதியோர் இல்லம்!- அம்மா!

பொருள் மதிப்பற்றச்செல்வம்சொத்து 
இழந்தாலும் உலகில் பெறலாம் !
தாயை இழந்தால் பெறுவது கடினம் !
சிந்திப்போம் செயல்படுவோம் !

Abdul Ajeeis Nawshat A.Nawshat@sih-kw.com.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்