பிறவி ஒன்றே...இருப்போம் இருக்கையில்
அன்போடுதாயை அரவணைப்போம்
ஒத்தச் சொல்லால்அழைத்தாலும்
மொத்தச் சொல்லால்இணைத்தாலும்
முத்தச் சொல்லேயாகும்அம்மா !
உதடுகள் உச்சரிக்கமறுத்தாலும்
உள்ளத்தில் அகற்றிவெறுத்தாலும்
நிறைக்கானும் உன்னதவுறவேஅம்மா !
கோபங்கொண்டு வெறுத்தாலும்பேசத்தான்
மறுத்தாலும் உள்ளக்குடியிலே நிரந்தரமாய்
குடி அமர்த்துபவளே அம்மா !
முள்தைத்துமுனகும் முன்னே
வலிகனத்துதுடிப்பாள் !-வேதனையால்
வருந்திகண்கலங்கியே முறைப்பாள் !
பசியறிந்து வாடுமுன்னே பசிப்பிணியைப்
போக்க நினைப்பாள் !-பட்டுடையுடத்த
நினைக்காவிட்டாலும்கந்தாடையு டித்திருப்பாள் !
காணும் கனவினைசிறக்கப்பிள்ளையின்
வாழ்க்கைச்சொலிக்க !-உறங்காமல் விழிபபாள்!
தன் ஆயுளையும் அவனக்காக.. கொடுப்பாள் !
பெற்று, சுமந்து, வளர்த்து கட்டியப்பின்பு
கட்டியக்கூட்டை கலைக்க தவிர்ப்போம் !
இருக்கும்முதல் இறக்கும்வரை பாசத்தை அள்ளிக்கொடுப்போம் !
ஆதரவற்றவர்களாய் இருக்கையிலே அனாதைகளுக்கு
ஆதரவுத்தரும்அன்னையின்ஆலையம்! - முதுமையோடிருப்பின்
அரவணைக்கும் ஒருமுதியோர் இல்லம்!- அம்மா!
பொருள் மதிப்பற்றச்செல்வம்சொத்து
இழந்தாலும் உலகில் பெறலாம் !
தாயை இழந்தால் பெறுவது கடினம் !
சிந்திப்போம் செயல்படுவோம் !