கூனிமேட்டில் நேற்று விபத்து .! விபத்தில் சிக்கி சகோதரர் மஸ்தான் அவர்கள் மரணமடைந்தார்.

4:04 புதன் : நேற்று இரவு 8:30 மணிக்கு புதுவையிலிருந்து சென்னையை நோக்கி சென்ற டாட்டா இண்டிகா வாகனம் கூனிமேடு திப்புசுல்தான் வீதி எதிரில் கிழக்கு கடற்கரைச் பிரதான சாலையில் சகோதரர் மஸ்தான் வாகனம் வருவதும் கண்டும் காணாமல் சாலையை கடுக்க முயன்றார் அப்போது எதிர் பாராத விதமாக சகோதரர் மஸ்தானின் மீது வாகனம் மோதியதால் விபத்தில் சிக்கினார் .

இதை அறிந்த கூனிமேடு தலைவர் சகோதரர் ஷாபுதீன் அவர்கள் மற்றும் ஊர் சகோதரர்கள் அருகிலிருக்கும் கனக செட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க எடுத்து விரைந்தனர் அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உடனே எடுத்து விரைந்தனர் .

.அனுமதித்த சில மணிநேரத்திலே அவர் மரணமடைந்தார் . இன்று அதிகாலை 5 மணிக்கு இறந்த அவரின் சடலம் புதுவை அரசு மருத்துவமனையில் இருக்கின்ற நிலையில் அந்த சடலத்தை மீட்டு இன்று மாலை 5 மணிக்குள் அடக்கம் செய்யலாம் என தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றது .

இரங்கல் 

கூனிமேடு திப்பு சுல்தான் வீதியில் வசிக்கும் மஸ்தான் எனும் முட்டக்கார் மஸ்தான் . வயது சுமார் 45 .அவர்கள் இன்று அதிகாலை இறையடி  அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் . அன்னாரின் உடல் இன்று கூனிமேடு கபரஸ்தானில் அடக்கம் செய்யலாம் என தகவல் வந்துக்கொண்டிருக்கிறது .காண விரும்பும் சகோதரர்கள் ,தாய்மார்கள் (சகோதரிகள் )திடீர் நகரில்அவருடைய வீட்டில் காணலாம் .


தகவல் : ஜனாப் :அப்துல் ஹை. தகவல் சேகரிப்பு : சகோதரர் :ஷேக் அஹமது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்