அமீரகத்தில் ரகசிய கேமரா பொருத்தி பெண் குளிப்பதை படம் எடுத்த வாலிபர்.

நவம்பர்15: அமீரகத்தில் பிலிப்பைன்சை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். அதில் ஒரு வாலிபர் பெண்கள் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் எடுத்தார். மேற்கூரை பகுதியல் பட்டன் போல மர்ம பொருள் இருப்பதை பார்த்த பெண் அதை எடுத்து பார்த்த போது அது கேமரா என்பது தெரிய வந்தது.

அதில் பெண்கள் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போது, அந்த வாலிபர் பெண்கள் குளிக்கும் போது அதிக அளவு தண்ணீர் செலவழித்தார்கள், இதை கண்காணிக்கவே கேமராவை பொருத்தினேன் என்று கூறினார்.

ஆனால் கோர்ட்டு இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. அவருக்கு நீதிபதி 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்