குவைத்தில் தமிழர் ஒருவர் மாரடைப்பால் மரணம் !


"""INNA LILLAAHI VAA INNA ILAHI RAAJIHOON """

குவைத் அவுகாப் வளாகத்தில் கடந்த இருபது நாட்களாக பணிப் புரிந்த வந்த சகோதரர் பகுருதீன் வயது 37 . சம்பவத்தன்று மதிய உணவு இடைவேளையில் வீடு திரும்பி இருக்கிறார் நெஞ்சில் எரிச்சல் உள்ளதாக தெரிவித்த சகோதரரை வீட்டுக்கு வரும்படி சகோதரர் பணிக்கவே வாகனத்தில் வந்து இறங்கி கைக்குலக்கிய  சற்று நேரத்தில் அவரின் மடியிளையே உயிர் பிரிந்தததாக சகோதரர் நவுஷாத் தெரிவித்தார் .

மேலும் சமீபத்தில்தான் குவைத் வந்ததாகவும் அதாவது ஏழுமாதங்கள் கடந்த நிலையில் ஐந்து மாதங்கள் டைல்ஸ் நிறுவனத்திலும் அங்கு கடும் வேலை காரணமாக நின்று இரண்டு மாதங்கள் வேலை இல்லாமல் இருபது நாட்கள் முன்புதான் வேலையில் அமர்ந்துள்ளார் .இதற்கு முன்பு சவுதியில் பத்து வருடங்கள் இருந்துள்ளார் .அவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர் .

விருதாச்சலம் அருகே ஸ்ரிமுஷ்ணத்தை சார்ந்தவரான இவர் தந்தை இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தாயார் நலமுடன் இருக்கிறார் .நான்கு சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இவர் மூன்றாவதாவார் .

இதனை பூர்வீக முகவரியை அறிந்துக் கொள்ள ! இறந்த சகோதரர் பகுருதீன் அவர்களின் கைப்பேசி  இணைப்பு தகவல் !
55084482,97914162 .

மேலும் இன்று  அனைத்து வேலைபாடுகளும் முடிந்த நிலையில் நாளை இந்திய தூதரகத்தின் கண்காணிப்பு வேலைப்பாடுகள் முடிந்து சடலம் தாயகம் செல்லும் என அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்