தமிழ் நாட்டை சார்ந்த சகோதரருக்கு இருதய அறுவை சிகிச்சை !

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சகோ.தாகிர் அலி 
சில தினங்களுக்கு முன்பு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து வீடு திரும்பிய அன்பர் சகோதரர் தாகிர் அலி மருத்துவ பரிசோதனையின் பிறகு இருதயத்தில் அடைப்பு உள்ளதாக தெரிவிக்க மூன்று மாத காலமாக மருந்துகளை உட்கொண்டிருந்தார் .அண்மையில் மீண்டும் சோதனை செய்துப்பார்த்ததில் இருதைய அறுவை சிகிச்சை செய்யும்படி மருத்துவர் பரிந்துரையினால் சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தநிலையில் குவைத்தில் இரத்தம் பற்றாக் குறையின் காரணத்தினால் நான்கு யூனிட் இரத்தத்தை அவரிடம் கோரவே ....!

அன்பர் கூனிமேடு குரல் இணையத்திற்கு நாடினார் தகவலறிந்து முதன்முதலாக இணைய ஆசிரியர் இரத்தமளித்து மீதம் மூன்று யூனிட்டை எவரிடம் பெற வேண்டும் சிந்தனையோடு வருத்தத்துடன் வீடு திரும்பவே ...சிந்தனையில் குவைத்தில் இன்று உடனடியாக தமிழக மக்களுக்கின்ரி பொதுப்படையாக அனைத்து மக்களுக்கும் உதவி வரும் குவைத் தமிழ்நாடு தவுஹித் ஜமாத்தை அணுகி விபரத்தை கூறவே கவலைவேண்டாம் கூறி சகோதரருடைய நிலையை கேட்டறிந்தார் .மேலும் மறுநாள் அறுவை சிகிச்சை என்பதால் உடனடி தேவைக்காக கேட்டதினால் மறுநாள் அறுவை சிகிச்சை நிறுத்தப்படவே ஐயம் கொண்ட இணையம் மேலும் இருவரைக் கொண்டு இரத்ததான முகாமை அணுகியது அதில் ஒருவர் தேர்சிப்பெற்று இரத்தத்தை அவருக்கு தானம் செய்தார் மற்றொருவர் மாற்று மத சகோதரர் மாதங்கள் கடந்து இரத்தம் தர முனைந்ததால் அவருடைய இரத்தத்தில் காய்ச்சல் உள்ளதாக நிராகரிக்கப்பட்டது .மேலும் அச்சம் அடைந்த இணையம் மீண்டும் அந்த அமைப்பை தொடர்புக்கொண்டு கேட்டப்போது குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைந்து விட்டது கூறவே பெருமகிழியடைந்தது.

அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு பிறகு அதாவது நேற்று 28 /08 /2012 அன்று காலை அறுவை சிகிச்சை நடந்தது சுமார் ஐந்து மணி நேரம் நடைப்பெற்ற இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடைப்பெற்றதாக மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது .சிகிச்சை முடிந்து இதுவரையில் நினைவு திரும்பவில்லை இன்று திரும்பக்கூடும் என்பதாக மருத்துவர்கள் தகவலளித்துள்ளனர் .மேலும் இந்த தகவலை அறிந்து உடன் உதவி செய்துக்கொண்டிருக்கும் தங்கை வீட்டுகாரர் ஹஜ் முஹம்மதை இணைப்புக் கொண்டு அவருடைய தகவலை அறிந்துக்கொண்டு வருகிறது .

மேலும் அவர் இணையத்திற்கும் இரத்த தானம் செய்ய மனமுவந்த சகோதரர்களுக்கும் குவைத் தமிழ் நாடு தவுஹித் ஜமாத்தினருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார் மேலும் அவருடைய குடும்பமும் இதே செய்தியை தெரிவித்துள்ளது .இவர் குணமடைந்து வீடு திரும்பிட ஏகவனை பிரார்த்திப்போம் ."""

விபரம் ":- பெயர் .சகோதரர் தாகிர் அலி ,தந்தைப்பெயர் அப்துல் கரீம் ,மயிலாடுதுறை அவருக்கு வயது 38 ஆக இருக்கும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்