கூனிமேடு அருகே கடந்த ஞாயிறன்று அதிகாலை நடைப்பெற்ற விபத்து !


கூனிமேடிற்கும் அனுமந்தைக்கும் இடைப்பட்ட இடைவேளியில் நடைப்பெற்ற விபத்தில் ஐந்து நபர் சம்பவ இடத்திலையே பலியாகினர் மேலும் இருபத்தி ஆறு நபர்கள் புதுவை காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .புதுவையிலிருந்து சென்னையை நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து ,மரக்காணத்திலிருந்து புதுவையை நோக்கி சென்ற லாரி சம்பவத்தன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது .இந்த சம்பவம் அதிகாலை ஐந்து மணிக்கு 12-08-2012 அன்று நடந்ததால் மீட்பு பணி தோய்வுப்பாட்டாலும் மரக்காணம் காவல் துறை விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையை ஈடு பட்டதுடன் விபத்தில் சிக்கியவர்களையும் ,உயிர் இழந்தவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்தனர் .

அன்றைக்கு மேலும் ஒரு விபத்து !
கூனிமேடு ரங்கநாதபுரம் அருகில் நடந்த மற்றொரு விபத்தில் ரங்கநாதபுரத்தை சார்ந்த ஒருவரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது .அவருக்கு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ,இது வரை எவ்வித மாற்றமின்றி கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

விபத்தில் சிக்கியவர் தலைவர் ஏழுமலை அவர்களின் மைத்துனர் என்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்