அண்மையில் திடீரென்று அமைப்பை அமைத்தவர்களாகவும் ,சமீப காலமாக சேவைப் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் களத்திலிருந்த இந்த அமைப்பினுடைய முக்கிய நிர்வாக சகோதரர்கள் சிறிய கருத்து வேறுபாடின்பால் இன்னொரு அமைப்பிளிருந்து நீக்கப்பட்டது .ஆகவே அவர்கள் தாங்கள் செய்துக்கொண்டிருந்த பணிகளை கைவிடாது தொடர்ந்து செய்தவாறு இருந்தனர் .அப்படி இருக்கும் பட்சத்தில் ஒதுக்கப்பட்ட அந்த சகோதரர்கள் அமைப்புக்கு எதிராக செயல்படுவதாக குற்றசாற்றுக்கள் கிளம்பின ..!
இப்படியே நால்வரோடு தொடர்ந்த இந்த அமைப்பு இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்து மக்கள் சேவைப்பனியில் முழு ஈடுபாட்டுடன் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள் அப்படி இருக்கையில் அண்மையில் மக்களால் மீண்டும் இவர்கள்மீது குற்ற சாற்று எழும்பிடவே கூனிமேடுகுரல் இணையம் அவர்களுக்கு எதிராக ஒரு செய்தியை இந்த இணையத்தில் பதிவு செய்திருந்தது அதில் குறிப்பிட்டிருந்தாவது இஸ்லாம் சட்டத்திற்கு முரணாக அமைப்பு நடத்துவதாகவும் தலையும் இல்லை வாலும் இல்லை குறிப்பிட்டிருந்தது அதற்கு முக்கிய காரணம் அப்போது அந்த அமைப்பு நால்வரோடு தனிமையாக களத்தில்போராடிக்கொண்டிருந்தது .
அதை உணர வைக்கும் நோக்கத்துடனும் அமைப்பு என்பது இஸ்லாத்தில் சேவைப் பங்கில் தலைமையை அமைத்து நிர்வாகப் பொறுப்பை கொண்டு செல்வது அவசியமே , நால்வரோடு நால்வரும் தலைவர்கள் நிர்வாகிகள் கூறிக்கொண்டிருந்தால் நேர்மையற்றதாகும் அது மற்ற அமைப்புக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டியது .
செய்தி வெளியிட்டு சில நாட்களிலேயே அந்த அமைப்பு இப்தார் நிகழ்ச்சியோடு நிர்வாக தேர்வு நிகழ்சியை இணைத்து ஏற்பாடு செய்து தக்க மரியாதையுடன் கூனிமேடு குரலை வரவேற்பளித்தது .அந்த கூட்டத்தில் கூனிமேடு குரல் அந்த அமைப்புக்கு சேவை நோக்கத்தோடு மட்டும் செயல்பட வேண்டும் எனவும் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்திற்கு எதிராக செயல்படக்கூடாது கருத்து பதிவு செய்வதற்கு முன்பு அவர்கள் எதிராக நடக்கவில்லை கூறி கருத்தினை பதிவு செய்தனர் .
இருந்தாலும் அப்போது இணையம் ஒன்றுக்கூடி ஊரை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் கேட்டுக்கொண்டதுடன் அந்த ஜமாத்திற்கு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் கேட்டுக்கொண்டது .அதே சமயம் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தாவது மூத்த ஜமாஅத்தினருக்கு நாங்கள் எதிராக எக்காரியமும் செய்வதில்லை கூறவே பித்ரா வசூலைப்பற்றி கருத்தினை பதிய வைக்கும் போது அவர்கள் தெரிவித்தது நாங்கள் அந்த ஜமாத்தில் இருக்கின்றப்போது அதன் பின்பும் பித்ரா வசூலை பணமாக தரக்கூடாது பொருளாகவே தர வேண்டும் என்பதாக கோரிக்கை வைத்தோம் ,அந்த கோரிக்கை கெடுப்பில் போட்டிருப்பதுதான் எங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை மார்க்கம் சட்டத்திற்கும் மக்களின் நிலைக் கருதி பொருள் தந்திருந்தால் அவர்களுக்கு எதிராக செயல்பட அவசியமில்லை தெரிவித்தனர் .
அதன் பிறகு வட்டியில்லா கடன் திட்டத்தை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகாலமாக செயல்படுத்திட எதிர்கால செயல் திட்டத்தில்முடிவு எட்டபட்டிருந்தும் அதை நிராகரித்ததால் அதை நாங்கள் பொறுப்பேற்று செய்ய வேண்டியாதாக அமைந்து விட்டது தற்போது அந்த திட்டத்தால் மூன்று நபர்கள் பயன் பெற்றுள்ளனர் .தற்போது எதிராக செயல்படுகிறார்கள் சொல்வது நியாயமற்ற கருத்தாகும் .
மூத்த ஜமாஅத் கூறிக்கொள்ளும் இவர்கள் நாங்கள் செய்வதற்கு முன்பாக இந்த காரியங்கள் நிறைவேற்றிருந்தால் நாங்கள் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை அவர்கள் செய்யவில்லை என்பதால் நாங்கள் முழு வீச்சுடன் செயல்படுகிறப்போது எதிராக செயல்படுகிறார்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது கூறுவதுடன் அவர்களுக்கு நாங்கள் ஒத்துப் போகவே நினைக்கிறோம் மாறாக அவர்கள்தான் எங்களுக்கு பகையாளியாக நினைக்கிறார்கள் .
அண்மையில் அதாவது சென்ற ஆண்டு ஜமாஅத் பிளவுப்பட்டப்போது பித்ரா வசூல் செய்து அவர்களிடம் ஒப்படைத்தோம் ஒரே ஒருக் கோரிக்கை வைத்தோம் பணமாக இல்லை பொருளாக தரவேண்டும் என்பதற்காக பணத்தையும் ஒப்படைத்தோம் பணம் பெற்றுக்கொண்டு ஊரிலே பொருள் தராமல் பணமாக தந்துள்ளனர் .ஆகவே நாங்கள் இவர்களுக்கு போட்டிபோடுகிறோமா இல்லை அவர்கள் எங்களிடம் போட்டிபோடுகிறா ர்களா?
மேலும் அதன் பிறகு பித்ரா வசூல் செய்தவர்களை ஜமாத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நீக்கியுள்ளனர் அச்சமயம் சிலர் தாயகத்திலிருந்ததால் அவர்கள் இல்லாதப்போது நடவடிக்கை எடுத்துள்ளனர் .அவர்களிடத்தில் என்ன தவறு இருந்தது ?செய்த தவறுக்கு விளக்கம் கேட்டு இருக்க வேண்டும் முரணான கருத்திருந்தால் அவர்களை நீக்கி இருக்கலாம் ஆனால் இவர்களோ உடனடியாக நீக்கப்பட்டது எந்த விதத்தில் நியாயமானது ?
நாங்கள் அவர்களிடம் பணத்தை பொருளாக தர வேண்டும் கோரிய பட்சத்தில் ஆனால் பொருளாக தருகிறேன் கூறி பணமாக தந்ததால் இந்த பித்ராவுக்குபொறுப் பெடுத்து உள்ளோம் .இந்த முறை இவர்களிடத்தில் பணம் தந்து ஏமாறமாட்டோம் இவ்வாறு கூறினார்.-இந்த தொகுப்பு இப்தார் நிகழ்ச்சியின் போது கலந்துரையாடல் நடத்தியதை அக்கருத்தை பதிவு செய்துள்ளேன் .இங்கனம் கூனிமேடு குரல் .