இரங்கல் செய்தி !

இன்ன லில்லாஹி வாஇன்ன இளைஹி ராஜிஹூன் !
""""INNA LILLAAHI VAAINNA ILAHI RAAJIHOON ""!
கூனிமேடு பஞ்சாயத்போர்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மர்ஹூம் .அப்துல் கப்பூர் அவர்களின் மூத்த மகனான ஜனாப் .சையத் ஹுசைன் சுனாபா(இமாம் வீடு ) அவர்கள் இன்று அதிகாலை மரணம் .அவருக்கு வயது சுமார் 67 ஆக இருக்கும் !

அன்னார் அண்மையில் மலேசியாவில் வாழ்ந்து தற்போது கூனிமேட்டில் வசித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .அன்னாரின் இறுதிச் சடங்கு அசர் தொழுகைக்கு பிறகு கூனிமேடு கடற்கரையில் அமைந்திருக்கும் கபரஸ்தானில் (மயானத்தில் )அடக்கலம் செய்யப்படும் .

மேலும் அன்னார் செய்த அத்துணை பாவங்களையும் மன்னித்து சுவனத்தில் நுழைய ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம் !
பொதுவான வாசகம் மனிதருக்கு !
இவரை பிரிந்து வாடும் குடம்பத்தாரை அவரை விட ஈடுகட்ட எதையும் முடியாது என்பதும் திண்ணம்., இருப்பினும் ஒவ்வொருவருக்கும் மரணம் அடைவது நிச்சயம் இன்று அவர் நாளை நாம் அனைவரும் மரணப்பாதையில் பயணிப்பது உறுதி அந்த நாளுக்காக நம்மை தயார் படுத்திக்கொள்வோம் . இருக்கும் வரை நல்லதை செய்து அதில் உள்ளதை நன்மை பயக்கும் விசயத்தில் விட்டு செல்வோம் .மறுமையில் நரகத்தை வெல்லும் பெரும் பொக்கிஷம் அதுவாகும் .!

அகங்காரம் ,தற்பெருமை ,புகழ் ,செல்வம் ,அனைத்தும் மண்ணில் இருக்கும் வரை நிலைக்கும் ,இறந்துவிட்டால் நல்ல செயல் மட்டுமே இருக்கும் !சொர்கத்தை செல்ல வழி வகுக்கும் !குடிசையாகிருந்தாலும் ,குட்டி குடாரமாகிருந்தாலும் ,மன்னனாகிருந்தாலும் ஆண்டியாகிருந்தாலும் ,மரணம் சந்திப்பது உறுதி !

படை க்கும்போது சந்தோசம் அளிக்கும் ,பிரியும்போது வருத்தும் அத்துனையும் இறைவனின் நாட்டம் .ஆகவே அந்த இறைவனின் நாட்டம் எப்போது வேண்டுமானாலும் நேரக்கூடும் .

ஒவ்வொரு நொடியும் மரணத்தை நினைத்து வாழ்வோம் !

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்