வறுமையை உருக்கும் உணர்வு!

உணர்வரியா வறுமை
வருந்தும்-பிறிந்த
உறவு !

நினைவுகள்   உலுக்கி
விழிக்க எழுப்பும்
எண்ணம்!

உருக்கி இருகி...
 போடும் தடை
மனது.!

 திருப்பி தந்திட
பணமில்லை வாங்கிய
கடன்!

உள்ளத்தில் நிறைந்த
ஆசை ததும்பி
வழியும்!

கடன் காரனின் தொந்தரவு
எல்லளவு.!-கொள்ளாளவு
சஞ்சலங்கள்!

நெருடலின் வருடல்
அடங்காது தீண்டும்
தேகம்!

இரணத்து சல்லடையாக்கும்
மோகம் ! தடம்புரளும்
பொறுமை!


முடிவு எட்டாவரை ...
வலம் வரும்
தேடல்!

நோக்குகின்ற அந்நாள்
கிட்டாவரை உடலாகும் 
ஜடம் !
 இலக்கியன் .


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்