கூனிமேடு குரலின் ஆதரவு எவருக்கு ?

எதைப்பற்றி எழுதினாலும் எதிரானவருக்கு சாதகமாகவும் தங்களுக்கு பாதகமாகவும் செய்தி உள்ளதாக கருதும் சிலப்பேருக்கு இந்த தொகுப்பின் வாயிலாக சொல்லிக்கொள்ள விருப்பத்துடன்தான் இக்கட்டுரையுடன் முணை ந்திருக்கிறேன் .நான் இந்த இணையம் நடத்துவது ஒரு சேவை நோக்கமே எவரிடமும் பணத்தை எதிர்பார்த்தோ ?பதவியை ஆசைப்பட்டோ ,புகழுக்கோ,பெயருக்கோ நோக்கமின்றி பொதுப்படையாக நேர்மையாக உண்மையாக மக்களின் கருத்தும் அவர்களின் நோக்கமும் எவ்வித பாரபட்சமின்றி எந்த அமைப்புக்கும் ஆதரவாக செயல்படாமல் உண்மைக்காக பாடுபட்டு வருகிறேன் .ஊன்று ஒன்றுபட வேண்டும் மக்களின் நிலை உணர்த்த வேண்டும் என்பதற்காக !


எவராவது தவறு செய்வது அறிந்திட்டால் அதை உடனே சுட்டிக்காண்பித்து உணர்த்த வேண்டும் மாற்றவரும் அதை உணர வேண்டும்  கருதிதான் செயல்பட்டு  வருகிறேன் .ஆனால் சிலருக்கோ இதை தவறாக தோணலாம் எனக்கு பொறுத்தவரை அது நேர்மையாகத்தான் நடந்துக் கொண்டு வருகிறேன் .
இது பிறர் விழிக்கு குற்றச்சாட்டாக தெரிந்தால் பொறுப்பு நானல்ல !

 உண்மையை சொல்ல வேண்டும் ,மக்களுக்கு நன்மையை செய்ய வேண்டும் , இதில் இடம்பெறுகிற கருத்தினால் மக்கள் பயன்பெற வேண்டும் உண்மை உணர வேண்டும் .வேற்றுமை களைய வேண்டும் .ஒன்றுப்பட்டு நடக்க வேண்டும் ஊர் முன்னேற வேண்டும் .மாநிலத்திளையே ஊரின் பெயர் சிறந்து விளங்க வேண்டும் .அனைவராலும் திரும்பிப் பார்க்ககூடிய நிலையில் மாற்றத்தை அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் ஊர் வளர்ச்சியில் சிறிய வித்தாக இந்த இணையம் திகழ வேண்டும் .பயனை உலகில் எதிர் பார்த்து செய்வதல்ல மறுமை நாளில்  கிடைக்கும் நோக்கத்துடன் .

இந்தப் பணியில் எவ்வளவு தொய்வு ஏற்பட்டும் விடாது பின்தொடர காரணம் நான் வளர்ச்சியடை வேண்டியல்ல !ஊர் வளர்ச்சியடைய வேண்டும் நோக்கமே ..!ஆகவே இந்த இணையம் எவருக்கும் கட்டுப்பட்டு நடக்காது !எவருடைய அச்சுரத்துளக்கும் அடிப்பணியாது .உடலில் இறுதி மூச்சு உள்ளவரை ஊருக்காகவே உயிரை மாய்க்கவும் தயாராக உள்ளேன் .கட்டங்கள் வருகின்றன கருதி விட்டுவிடும் நோக்கமும்  எனக்கல்ல !குறைகள் கூறுகிறார்கள் என்பதற்காக ....

ஒட்டிக்கொள்ளும் நோக்கமும் எனக்கல்ல !நேர்மையாகவும்  நான் செய்யும் பணியில் உண்மையாகவும் எவருக்கும் பாதகமாகவும் எவருக்கும் சாதகமாக செயல்படும் எண்ணம் எனக்கில்லை தவறென்றால் என்னைப் பொறுத்த வரையில் தவரே ...!அது எவராக இருந்தாலும் அற,நெறிக்கு உட்பட்டு உண்மைக்கு உண்மையாகவும் நேர்மைக்கு நேர்மையாகவும் பதிவு செய்திட கடமைப் பட்டுள்ளேன் .இதற்காக எனக்கு எவ்வளவு தொய்வு கிடைத்தாலும் சகித்தே சிறிய சேவையாக கருதி செயல்பட்டு வருகின்றேன் .

இந்த இணையத்தின் மீது குற்ற சாட்டை பொய் என்று நிரூபணம் செய்தால் மன்னிப்பு கேட்கவும் ,தவறை உணர்ந்து திருந்தவும் பேருதவியாக இருக்கும் .மக்கள் நலனில் பொதுவாக அக்கறைக்கொண்டு! அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடு படும் எனக்கு ஆதரவுத் தாருங்கள் !அழித்திட முயலாதீர்கள் மறுமையில் கைசேதம் உடையவர்களாக எழுப்ப படுவீர்கள்



மேலும் எழுத்து பிழைகள் எதார்த்தமாகவே தட்டச்சு செய்கையில் ஏற்பட்டு விடுகிறது .எனக்கு வேலைப் பளு காரணமாக மறு பரிசீலனை செய்து பார்க்க இயலவில்லை .ஆகவே என்னுடன் சமுதாய சேவை நோக்கத்துடன் செயல்பட கருதும் நல்ல எண்ணம் படைத்தோர் இணையத்தில் இணைந்து பணி செய்யமாரும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .இந்த இணையம் முபாரக்கின் தனிப்பட்ட கருத்தில்லை மக்களின் கருத்தே அவர்களின் அங்கீகாரம் பொருட்டே செய்திகள் வெளியாகும் .மேலும் தவறு நடப்பது இயல்பு .அப்படி தவறு !எதிராக செயபடுகிறார் .இவர் அமைப்பிலிருந்து முன்னுக்கு முரணாக செயல்படுகிறார் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது .தனிநபர் கருத்துக்கு இந்த இணையத்தில் அங்கீகரிக்கப் படாது.:- இவன் இணையம் கூனிமேடு குரல் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்