வரலாற்று சாதனையாளர் வீரத்திற்கு எடுத்துகாட்டார் மாவீரர் திப்பு சுல்தான் அவர்களின் வீர வரலாறு .
தொகுத்தவர் சகோதரர் ஷர்புதீன் கூனிமேடு மக்கள் குரல் .


மைசூர் வீரப்புலியின் வரலாறு – தொடக்கம்

மைசூர் விஜயநகர சாம்ராஜ்ஜிய வீழ்ச்சிக்கு பிறகு ஆட்சி செய்த ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தானை “மைசூர் புலி” என்று அறியப்படுவது, நம்மூர் அரசியல்வாதிகளுக்கு சொல்லப்படுகிற வழக்கமான புகழ்ச்சி வார்த்தையல்ல. மாறாக, மெய்யாக கனகச்சிதமாக இவருக்கு பொருத்தும் மதிப்பீடு \ புகழாரம். மரபுவழி வந்த மாண்பும், வீரமும் திப்புவின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டுள்ளன. நாட்டுப்பற்றில் திப்புவுக்கு இணையான ஒருவரை, நடுநிலையான வரலாற்றாசிரியர்களால் குறிப்பிட்டு சொல்லமுடியாது. சுதந்திர காற்றுவீசும் தன்மான இந்தியாவிற்கு அவர்தான் தந்தை, சுதந்திர வேட்கைக்கு வித்திட்டவர் திப்புவே என்று சொன்னால் – அது மிகையாகாது.

திப்பு சுல்தானிற்கு அஞ்சியது போல் ஆங்கிலேயர்கள் வேறெவருக்கும் அஞ்சியதில்லை, அவரிடம் தோற்றது போல் வெள்ளைகார கூட்டம் வேறெவரிடமும் தோற்றதில்லை. 1799 ஆம் ஆண்டு திப்புவை கொன்று கொக்கரித்தது கூட ‘ஐந்தாம் படை’ உதவியுடன் கொல்லைப்புற வழியாக தான்.

49 வயதில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வீரப்போரில் மாண்ட திப்பு, தனது 12 வயதிலேயே அரசவையில் பங்கெடுத்ததோடு, தந்தை ஹைதர் அலிக்கு ஆலோசனைகளும் வழங்கத்தொடங்கி இருக்கிறார். தந்தையின் மறைவிற்கு பிறகு, தனது 32 ஆம் வயதில் மைசூர் சாம்ராஜ்யத்தில் மாமன்னராக பொறுப்பேற்ற மாவீரன் திப்பு, அன்றைய காலத்தில் ‘மலபார்’ என்றறியப்பட்ட கேரளத்தையும் 9 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளார்.

‘ஒரு ஆட்சியாளன் என்பவன் மக்களுக்கு தொண்டு செய்ய வந்தவனேயன்றி அதிகாரம் செலுத்தவந்தவன் அல்ல’ என்பதை சொல்லாலும், செயலாலும் காட்டியவர். இஸ்லாமிய கொள்கையில் அசைக்கமுடியா நம்பிக்கை கொண்டிருந்த அவர், தன்
ஆளுமைக்கு உட்பட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் நல்லிணக்கத்தோடு நடந்துக்கொண்டார்.

இந்தியா நவீன அறிவியலில் வளர்ச்சிக்கு வித்திட்டவர் திப்புவே என்பதை வரலாறு சான்றளிக்கிறது. நவீன உலகின் போர் என்றாலே நினைவுக்கு வரும் “ஏவுகணை’களை உருவாக்கி, ஆங்கிலேய படைகளுக்கு எதிராக ஏவி, சூழ்ச்சிமிகுந்த ஆங்கிலேயர்களை வியப்படைய செய்தார். இதுபோல் அவர் வித்திட்ட பலதுறைகள் உலகளவில் விண்முட்ட வளர்ந்து தழைத்து நிற்பதை காண முடியும்.

பெண்ணுரிமைக்கு இவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பெரியவை. பெண்களை மிக இழிவாக கருதி நடத்திய காலத்தில், அவர்களும் தன்மானத்தோடு வாழ வழிவகை செய்தார். 18 நூற்றாண்டின் இறுதியில் அன்றைய மலபார் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்களை அடக்கிவைத்து, பாலியல் வன்கொடுமைக்கும், சாதிய கொடுமைகளுக்கும் உள்ளடக்கிய நம்பூதிரிமார்களுக்கு (உயர்சாதி பிராமணர்கள்) எதிராக திப்பு செய்த பிரகடனம், அவர் பெண்ணுரிமைக்கு ஆற்றிய தொண்டிற்கு ஓர் உண்ணத உதாரணம்.

நாட்டின் நலனுக்காக, நாடு தழுவிய அளவில் ஒரு ‘ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணி’ ஒன்றை உருவாக்க முயன்று, திருவிதாங்கூர் சமஸ்தானம், ஐதராபாத் நிஜாம், மைசூர் பழைய பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான், மராத்தியர்கள் ஆகியோரிடம் மன்னனென்றும் பாராமல் மன்றாடி கெஞ்சி இருக்கிறார். அனைவரும் ஆங்கிலேயர்களுக்கு அஞ்சவே, தனியாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டிருக்கிறார். உலகளவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு முடிவுகட்ட, பிரஞ்ச் மாவீரன் நெப்போலியனுடன் தொடர்பு கொள்ளுமளவிற்கு நெஞ்சுரம் கொண்டார். அக்காலத்தில் உலகையே உலுக்கிய மாவீரன் நெப்போலியனே திப்புவுக்கு கடிதங்கள் பல தீட்டியுள்ளான்.

சமீபத்திய என் மைசூர் பிரயாணத்தின் போது, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள மாவீரன் திப்புவின் கோட்டைக்கு செல்லமுயன்ற போது, கோட்டையில் மராமத்து பணிகள் நடைபெறுவதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டேன். அங்குள்ளவர்களை விசாரித்தபோது, கடந்த சில ஆண்டுகளாக இதேநிலை நீடிப்பதாக சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். காரணம், மைசூர் மாநகரிலேயே உள்ள உடையார் ராஜ கோட்டையில் பெரியளவிலான மராமத்து பணிகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த போதும், பார்வையிட அனுமதிக்கப்பட்டேன்.

இந்த தேசத்தின் விடுதலைக்கு, இந்த தேசத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு, பெண்ணுரிமைக்கு, மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு அயராது உழைத்த ஒப்பற்ற ஓர் அரசன், சுதந்திர இந்தியாவின் தந்தை பற்றிய வரலாற்று பதிவுகளையும், சுவடுகளையும் ‘ஐந்தாம் படை’ கூட்டத்தினர் திட்டமிட்டு அழித்தொழிகிறார்களோ? என்ற சந்தேகம் கொள்ளவைக்கிறது. மைசூர் உடையார் ராஜகோட்டையின் புத்தக/பொருட்காட்சி நிலையத்தில் Dr. R. Gopal எழுதிய “Tipu Sulthan – The Tiger of Mysore’ புத்தகத்தை படித்தபோது, நானும், என்னை போன்ற இளைய சமுதாயமும், மாவீரன் திப்புவை பற்றிய உண்மை வரலாற்றினை தெரிந்து கொள்வதிலிருந்து திட்டமிட்டு தடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன் .

நான் மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தின் அடிப்படையிலும், மேலும் நான் கிடைக்கபெற்றுள்ள இன்னபிற புத்தகத்தின் அடிப்படையிலும் எம்மொழியில், எளிய நடையில் திரிப்பற்ற வரலாற்று தொடரை எழுதி மாவீரன் திப்புவின் வரலாற்றை பகிர்ந்துகொள்ள விளைகிறேன்…

தொடர்வோம்…!!!

வேண்டுகோள்: தவறுகளை/குறைகளை சுட்டிக்காட்டினால் நிறைவோடு என்னையும், எழுத்தையும் திருத்திக்கொள்வேன்!

M.ஷர்புதீன் கூனிமேடு 


சிறுபான்மையினருக்கு  4.5% இட  ஒதிக்கீடு அரசு அறிவிப்பு . 

இச் செய்தியை சேகரித்தவர் சகோதரர் ஷர்புதீன் கூனிமேடு மக்கள் குரல் நிர்வாகி .


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும்

 20 சதவீத ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு

 ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


Tuesday, December 27, 2011 1:11 PM

Message body

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால் இந்த சதவீதம் மிக மிக குறைவு என்று பல சிறுபான்மை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளது!!



மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட இந்த ஒப்புதலை அடுத்து, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அதற்கான அரசாணையையும் வெளியிட்டுவிட்டது. அதன்படி, 2012, ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் உட்பட தேசிய சிறுபான்மையின ஆணையம் வரையறுத்துள்ள மதம் மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மையினராகக் கருதப்படும் அனைத்து மாணவர்களும் பயன் பெறலாம்.

இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம், ஐஐஎம், ஐஐடி, ஏஐஐஎம்எஸ், என்ஐடி, என்ஐஎப்டி, என்ஐடீ, 44 மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் சேர்க்கையில் சிறுபான்மையின மாணவர்கள் பயன்பெறலாம்.

மத்திய கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கைகள் வெளியாகிவிட்டதால், மாணவ சேர்க்கையில் வரும் கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீட்டு மாற்றத்தை அனைத்து கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும்.

மத்திய அரசின் இந்த முயற்சி எந்த அளவிற்கு சாத்தியம் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!
  ஷர்புதீன் கூனிமேடு 

இந்த வலைப்பதிவில் கருத்துரை வழங்குவது எப்படி ? ஆசிரியரின் ஆலோசனை மற்றும் விளக்கம் .

இந்த வலைப்பதிவில் கருத்துரை வழங்குவது மிகவும் எளிது இருப்பினும் பலருக்கு எப்படி கருத்துரை வழங்குவது அறியாமல் தடுமாற்றம் கொண்டிருக்கிறார்கள் ஆகவே அந்த வருத்தத்தை கலைக்கும் வகையில் ஆசிரியரால்  அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது .

இதில் கருத்துரை வழங்க நினைத்தால் ...
  1. முதலில் தங்களுக்கு மின் அஞ்சல் இருக்க வேண்டும் .
  2. இரண்டாவது கருத்துரை என்று ஒவ்வொரு வாசகத்தின் கீழே இடம் பெற்றிருக்கும்.
  3. மூன்றாவது அதை கிளிக் செய்து தங்களுடைய வாசகத்தை நிரப்ப வேண்டும் .
  4. அதன் நிரப்பிய பின்பு இவ்வாறு கருத்துரை இடுக என வாசகம் இடம் பெற்றிருக்கும் 
  5. அதன் கீழே ஒரு சிறியப்பெட்டியில் அநாமதேயர் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை தேர்வு செய்து அதன் பின்பு தங்களுடைய மின் அஞ்சல் முகவரியை நிரப்பி வெளியிடு எழுதியிருக்கும் வாசகத்தை கிளிக் செய்தால் அதில் பதிவாகிவிடும் .
அதற்கு மேல் அந்த கருத்துரை நிர்வாக ஆய்வுக்கு உட்பட்டு அதை ஆய்வு செய்து பின்னால் வெளியிடப்படும்.

மருத்துவம்


கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ



மின் அஞ்சலில் சேகரித்த தொகுப்பு ! சேகரித்தவர் முபாரக் .ஆசிரியர் .
முழு அளவு படத்தைப் பார்

முழு அளவு படத்தைப் பார்


கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.
பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர். உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமீன் தெரிவித்தார்.



            ரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். 


நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. 

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo


English - Saffron

Malayalam - Kunguma Poo

Telugu - Kumkuma poova

Sanskrit - kumkuma

Botanical Name - Crocus sativus

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.


இரத்தம் சுத்தமடைய

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.

ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .


குங்குமப்பூ மகத்துவம் 

சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.


குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:-Posted Image

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். 

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

Posted Image

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.மேலும் கர்ப்பிணிகள் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்.
நன்றி சுல்தான் நீங்கள் எனக்கு அனுப்பிய இந்த தொகுப்பு நம்முடைய சமுதாயம் நலமுடன் இருக்கு நீகள் எடுத்துக்கொண்ட அக்கறை இன்ஷா அல்லா தங்களை மேலும் மேலும் இறைவன் தங்கள் புத்தியை கூர்மைப்பட்சுத்துவான் .

இணையத்திலிருந்து அள்ளித் தருபவர்

Engr.Sulthan
24 /12 வெள்ளிக்கிழமை இஸ்டிக்லாளில் நடைப்பெற்ற மார்க்க பையான் கலாச்சார சீரழிவும் அறிய பல சாதனங்கள் தவறான முறையில் பயன்பாடும் .முரணான கிறிஸ்த்மசும் ஈசா நபி இறைத் தூதுவரும் நற்போதனையை தவறாய் கடைப்பிடித்த வழிகெட்டோறும் என்கின்ற தலைப்பில் சிறப்பான பையான் .

தொடர்ந்துவாரம் தோறும் நடைபெறம் மார்க்க பையான் இம்முறை சகோதரர் அஹமது ராஜா ஷெரிப் தலைமைப்பொறுப்பேற்று மார்க்க பையான் சொற்பொழிவை செய்தார் அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு விஞ்ஞானம் வளர்ச்சியில் சாதனங்கள் பல  உருவாகும் சாதனை ! நல் வழியை மறந்து தவறான பாதை செல்வதால் பல உள்ளங்கள் படும் வேதனை . அன்பாக வாங்கி கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அதனால் வருகின்ற ஏற்படுகின்ற இன்னல்கள் . ஆண்டுதோறும் வரும் வருடம் . ஆண்ட ஈசா நபி  போதிக்காதது கற்றுக்கொண்ட முரணான கொள்கை ! குர்-ஆன்  அவர்களுக்கு
செய்யும் போதனை ஆண்டுதோறும்   செய்யும் கிறிஸ்த்மஸ் விழாக்கோல ஆராதனை அதனால் ஏற்படுகின்ற கலாச்சார சீரழிவு வரையற்ற இளைஞர்களின் போக்கு சாக்காய் முறையற்ற கொள்கைகளை ஏற்ப்பு ! கிறிஸ்த்துவர் சொல்லாத  அறவழி இவரை தவறாய் பின்பற்றி போதித்துபுதிதாய்ஏற்றுக்கொண்டமரபுமொழி .இஸ்லாம் வன்மையோடு கண்டிக்கும் கேடு விளைவிக்கும் அவ்வழி  உண்மையை விளக்கும் புது மொழி பொன்மொழி ஹதீஸ் மற்றும் சங்கை மிகு குர் ஆன் விளக்கத்தை மிகத் தெளிவாக மக்கள் சிந்திக்க செயல்பட வைக்கக்கூடிய வகையில் சகோதரரின் சொற்ப்பொழிவு அமைந்தது .இன்றைய நிலைவையில் உள்ள கலாச்சாரம் மிக மோசமானதாக உள்ளதை விளக்கி வரும் காலத்தை நம் பிள்ளைகளை காக்க என்ன செய்ய வேண்டும் அதற்கு இஸ்லாம் கூறும் அரும் மருந்தும் , இன்றைய பெற்றோர்களுக்கு அது  பொருந்தும் .
இவ்வலைப்பதிவு ஆசிரியரை வரும் வெள்ளிக்கிழமை விஸ்வக்குடியினர் புதிய அமைப்பு துவக்க விழாவுக்கு சிறப்பு பேச்சாளராக அழைப்பு .!

பெரும்பலூர் அருகே உள்ள ஒரு கிராமமான விஸ்வக்குடி அக்கிராமத்திலிருந்து வெளிநாடுகளில் பலர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் அவ்வூருக்கு நன்மை செய்யும் விதத்தில் ஏழை எளியோர் பயன் பெறுகின்ற வகையில் அவ்வூர் இளைய சமுதாயம் ஒரு அமைப்பை பகுதி வாரியாக அவர்கள் வாழும் அந்த நாட்டில் கிளைகளாக உருவாக்கி செயல்பட திட்டமிட்டுள்ளனர் .மேலும் அந்த அமைப்பு இந்த குவைத் நாட்டில் மக்கள் பணியில் மும்முரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற  நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அந்த இளைய சகோதரர்கள் அமைப்பை உருவாக்க முடிவு செய்து துவக்க நாளாக அன்று மாலை திட்டமிட்டுள்ளனர் .ஆகவே சமீப நாட்களாக இவ்வலைப்பதிவு ஆசிரியரிடம் மேற்கொண்ட ஆலோசனைகள் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் அமைந்ததால் அவர்கள் இந்த அமைப்பை உருவாகும் தருணத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்துக்கொண்டு வழி நடத்துமாறு கேட்டுக்கொண்டதால் ஆசிரியர் கலந்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் .

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் – கல்விகடன் பெற இணைக்க வேண்டிய இணைப்புகள் விவரம்:


முழுமையாக நிரப்பப்பட்ட கல்விகடனுக்கான விண்ணப்ப படிவத்துடன் கீழ்காணும் இணைப்புகளை முறையாக இணைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

1.    பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5 காப்பி மாணவருக்கும் பெற்றோர்க்கும்.

2.    அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி ரேசன் கார்டு ஜெராக்ஸ்.

3.    அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி அடையாள அட்டை மாணவருக்கும் பெற்றோர்க்கும்.

4.    பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஒரிஜினல்

5.    அட்டர்ஸ்டட் பெற்ற இருப்பிடச் சான்றிதழ்


6.    கடைசியாக செலுத்திய வீட்டு வரி ரசீது அல்லது வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம் வீட்டு உரிமையாளரிடம் இருந்து.

7.    அட்டர்ஸ்டட் பெற்ற பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது பட்டம் படிப்பு மதிப்பெண் பட்டியல்.

8.    கல்லூரியில் இருந்து பெற்ற போனாபிட் சான்றிதழ் ஒரிஜினல்

9.    கல்லூரியில் இருந்து பெறப்பட்ட வருட வாரியான கட்டண விபரங்கள் ஒரிஜினல்.

10.    பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட கவுன்சிலிங் கடிதம் ஒரிஜினல்.

11.    அட்டர்ஸ்டட் பெற்ற பெற்றோரின் பிறந்த தேதிக்கான சான்று.

12.    அட்டர்ஸ்டட் பெற்ற சாதி சான்றிதழ்

13.    அட்டர்ஸ்டட் பெற்ற கடைசியாக பெற்ற மாற்றுச்சான்றிதழ்

14.    கல்லூரியில் கட்டணம் செலுத்திய ரசீது ஒரிஜினல் (ஜெராக்ஸ் எடுத்த பின் கொடுக்கவும்)

15.    அட்டர்ஸ்டட் பெற்ற முதல் பட்டதாரி சான்றிதழ்  (பொருந்துமானால் மட்டும்)

(அட்டர்ஸ்டட் : பச்சை மையினால் கையொப்பம் இடும் அரசு அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள். அரசு மருத்துவர்கள் என யாராவது ஒருவரிடம் அசல் சான்றுகளை காண்பித்து நகல்களில் சான்றொப்பமும், முத்திரையும் பெற வேண்டும் )
தகவல்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கோபத்தை  அடக்க இஸ்லாம் கூறும் கூற்று !

தொகுத்து சேகரித்து வழங்கியவர் .சகோதரர் .ஷர்புதீன் ,கூனிமேடு மக்கள் குரல் ,குவைத் 

அன்பு சகோதர, சகோதரிகளே .    அஸ்ஸலாமு அலைக்கும்...
  நமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன.. பல தவறுகளை நாம் செய்கிறோம்.. பல தவறுகள் செய்து பல இன்னல்களுக்கு உள்ளாகிறோம் . அதனால் நாம் பொருள் இழப்பு, மனக்கஷ்டங்கள் இன்னும் பல கஷ்டங்களுக்கு தள்ளப்படுகிறோம் .இதன் காரணத்தால் சில உறவுகளும்  முறிந்திருக்கிறது . இது அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள். இதை எந்த முறையில் நம்மை அனுகவேண்டும் என குர்ஆன் மற்றும் அண்ணல் நபி அவர்கள் கூறிய வழிமுறைகள் கற்றுக்கொடுத்தார்கள் என்று சற்று ஆராய்வோம் இன்ஷா அல்லாஹ்...

    மனிதன் நண்பர்கள், மனைவி, உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் சில எதிர்பார்புகளை வைத்திருக்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் பொய் ஆகும் போது கோபப்படுகிறான். அதன் காரணத்தினால் சில வார்த்தைகளை அவதூறாக கொட்டி விடுகிறோம்  இதனால் வார்த்தைகள் மூலமாக தொடருமிந்த சிறு பிளவு அதன் பிறகு அதுவே பெரிய அளவில் கடந்து   உறவே முறிந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவசரத்தில் நாவை பேணாமல் சில வார்த்தைகளை கொட்டுவதினால்  அதனாலும் பிளவுகல் ஏற்படுகிறது. சற்று ஆராய்ந்து பார்கும் போது மனிதனுக்கு சட்டென்று வரும் கோபம் தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

    அண்ணல் நபி அவர்கள் ஒரு முறை விளக்கினார்கள் : குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) அறிவிப்பாளர்: அத்தியா அஸ் ஸஅதி (ரலி) நூல்: புகாரி .

    சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.. கோபத்தை கட்டுபடுத்தினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்;. இன்னும்
    அண்ணல் நபி அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர்” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்!” என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்!” என்றே பதில் தந்தார்கள். நூல்;: புகாரி .

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமைநாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: மிஷ்காத்

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறைநம்பிக்கையாளாரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
    1. ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது.
    2. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
    3. அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது.” அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: மிஷ்காத்

    நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அந்த நேரத்தில் எப்படிங்க கட்டுப்படுத்துகிறது என்று தாங்கள் கூறும் கேள்விக்கு ... பதில்கள் ! கோபம் வருவது மனித இயற்க்கை அதை கட்டுப்படுத்த வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தால் அல்ஹம்துலில்லாஹ், அருமையான வழிமுறைகளை அண்ணல் நபி அவர்கள் காட்டிதந்திருக்கிறார்கள்

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். நூல்: அபூதாவூத்

    அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்.” அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: மிஷ்காத்

    இந்த நபிமொழியிலும் இதற்கு முந்திய நபிமொழியிலும் கோபத்தை ஒழித்திட அண்ணலார் காட்டிய வழிமுறைகள் எவ்வளவு சரியானவை, பொருத்தமானவை என்பதற்கு அனுபவமே சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.

    சரி கோபப்பட்டாகிவிட்டது. உறவும் முறிந்து விட்டது இப்போது என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?
இஸ்லாம் கூறும் பதில் உடனே மன்னித்து விடுங்கள்.
அதெப்படி அவர்கள் எங்களுக்கு இந்த துரோகம் செய்து விட்டார்கள் எப்படி எங்களை மன்னிக்க சொல்கிறீர்கள் என்று கூறுகிறீர்களா? சிந்தித்து பாருங்கள் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே...

    மன்னிப்பவர்கள் பற்றி திருமறை என்ன கூறுகிறது என்று பார்ப்போம்
    (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)
    திருமறை எவ்வளவு அழகாக கூறுகிறது பார்த்தீர்களா.. பிறரின் பிழைகளை மன்னிப்போர்களை அல்லாஹ் நேசிக்கின்றானாம் இதை விட ஒரு மூமினுக்கு வேறு என்ன வேண்டும் சகோதரர்களே.. அதுமட்டுமல்ல

    நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான (4:149)

    ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும். (42:37)
    அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)
    மூமினுகளைப்பற்றி அல்லாஹ் திருமறையில் அழகாக கூறுகிறான், அவர்கள் தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள் என்று. அவன் கூறிய மூமினாக நாம் ஆக வேண்டாமா? சரி என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட வேண்டுமா? என்று கேட்பது காதில் விழுகிறது.
    இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய  நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (42:40)
    பார்த்தீர்களா திருமறை கூறுவதை. ஒருவன் செய்த தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், அதனை மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. அளவற்ற அருளாளன், அவன் கொடுக்கும் கூலி எப்படி இருக்கும் சிந்தியுங்கள் சகோதரர்களே...
    சரி அடுத்து என்ன கூறுகிறார்கள் என்றால் ‘தவறு செய்தாலும் பொறுத்துக்கொண்டால் என்னை கோழை என்று நினைக்க மாட்டார்களா?’
    அல்லாஹ் கூறுகிறான்
    ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும் (42:43)

    எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சான்றிதல் கொடுக்கும் போது வேறு யாருடைய சான்றிதலும் அதற்கு ஈடாகாது என்று சொல்லித்தெரிவதில்லை. இதுவரை திருமறை கூறியதைப்பற்றி பார்த்தோம், இனி அண்ணல் நபி கூறியதை பார்ப்போம்.

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: இரு நண்பர்களில் ஒருவரின் தவறு அவ்விருவருக்குமிடையே பிரிவினை ஏற்படுத்திவிட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள். அல் அதபுல் முஃப்ரத்

    இதில் எவர் மீது தவறு என்று பார்க்கவில்லை இருவருமே அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள் என்று அண்ணல் நபி அவர்கள் கூறுகிறார்கள்

    இன்னும் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார் என்று
    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள் : “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்?” இறைவன் கூறினான்: “எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: மிஷ்காத்

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேலாக பேசாமல் மவுனம் காப்பதும் அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்யக்கூடாது), ஸலாமை முந்தி சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்” நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டால் அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலுருந்து நீங்கி விட்டார்” அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: அல் அதபுல் முஃப்ரத்

    மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை என்று நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். எத்தனை குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பிறிந்து இருக்கிறது. அல்லாஹ் இது பற்றி நம்மிடம் கேட்க மாட்டானா?

    அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அல்லாஹ்விற்காகப் பணிந்து நடந்தால் அல்லாஹ் அவரை உயர்த்தியே தீருவான் நூல்கள்: முஸ்லிம்

    சிந்தித்து பாருங்கள்.. அண்ணல் நபி அவர்கள் உத்தரவாதம் தருகிறார்கள். அல்லாஹ்விற்காகப் பணிந்தால் அல்லாஹ் நம்மை உயர்த்தியே தீருவான் என்று. சிந்தியுங்கள் சகோதரர்களே..

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மட்டும் மன்னிக்கப்பட மாட்டான். அப்போது சொல்லப்படும், ‘இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். நூல்கள்: முஸ்லிம்

    இப்படி மன்னிப்பு அளிக்கும் கூட்டத்தில் நாமும் இருக்க வேண்டாமா?
    அது மட்டுமல்ல இருவரிடையே சமரசம் செய்வது நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்ததொறு செயல் என்றும் கீழே கூறப்பட்டுள்ள ஹதீஸ் மூலம் விளங்கப்படுகிறது.

அபு தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்தவொறு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை ஏற்ப்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக்கூடியதாகும் நூல்: அல் அதபுல் முஃப்ரத்

    ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியாகிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (64:14)

    இதை முஹம்மத்(ஸல்) அவர்கள் தான் வாழ்நாளில் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். தாயிப் நகரத்தில்; கல்லடி பட்ட போதும் அவர்களை மன்னித்தார்கள். மக்கா வெற்றியிலும் அவர் நினைத்திருந்தால் அனைவரையும் கொன்று குவித்திருக்கலாம். முஹம்மத்(ஸல்) அவர்கள் எதிாியைப் போர்க்களத்தில் தோற்கடிப்பதை ஒருபோதும் தம் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பதற்கு மக்காவின் வெற்றி ஓர் எடுத்துக்காட்டாகும்.

    இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவை அமைதியாகக் கைப்பற்றியதும் குறைஷிகள் தங்கள் முந்தையச் செயல்களுக்காக வருத்தம் தெரிவிக்கும் அளவிலே இருந்தனர். இக்காரிமா இப்னு அபூ ஜஹல் என்பவர் மட்டும் சிறு குழப்பம் விளைவித்தார். முஸ்லிம்களுக்குக் கடுமையான எதிர்ப்பு தொிவிக்கும் சில பகுதிகளில் மட்டுமே பதற்ற நிலை இருந்தது. பொதுவாக அமைதியே நிலவியது. கஃபாவுக்கு அழைக்கப்பட்டபோது மதீனாவில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தோரும்கூட புறப்பட்டுச் சென்றனர். பழமைமிக்க இந்தப் புகலிடத்தில் பாதுகாப் பினைத் தேடி வருவோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதால் கணிசமான மக்கள் அங்கே கூடினார்கள்.
    இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கஃபாவின் மேற்கூரையில் ஏறி 'அதான்' எனும் தொழுகைக்கான அழைப்பொலி எழுப்பும்படி பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். கொடூரமான எஜமானனிடம் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட நீக்ரோதான் இந்த பிலால்(ரலி) அவர்கள். பிலால்(ரலி) அவர்கள் 'அதான்' கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஃபாவின் வாசலில் நின்றார்கள். பல்லாண்டு காலமாக இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் துன்புறுத்தி அவர்களை நிம்மதியாக மதீனாவுக்குச் செல்லவிடாமல் கொலை செய்யத் திட்டம் போட்ட அதே குறைஷிகளிடம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வெளிப்படையாகப் பேசினார்கள்.
    வணங்கத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவனுக்கு யாதொரு துணையும் கிடையாது. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றித் தன் அடியார் முஹம்மதுக்கு உதவினான். சதிகாரர்களை அவன் ஓடச்செய்தான். பிறப்பினாலோ, பந்தங்களாலோ, சொத்துக்களாலோ கோரப்படும் தனியுரிமைகள் மற்றும் அந்தஸ்துகள் என்னால் ஒழிக்கப்படுகின்றன. கஃபாவை மேற்பார்வையிடுவது மற்றும் ஹஜ் பயணிகளுக்கு நீர் விநியோகிப்பது ஆகிய இரண்டைத் தவிர!
    குறைஷிகளே! அறியாமைக் காலத்தில் உங்களோடிருந்த கர்வத்தை அல்லாஹ் போக்கிவிட்டான்; முன்னோர்களிடம் நீங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அல்லாஹ் நீக்கி விட்டான். ''மனிதன் ஆதமிலிருந்து தோன்றினான். ஆதம் மண்ணிலிருந்து தோன்றினார்'' அதற்குப்பின்,

    ''மனிதர்களே! உங்களை ஒரே ஆண் மற்றும் ஒரே பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம். நீங்கள் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை (பல) கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியுள்ளோம். உங்களில் இறைவனிடத்தில் சிறந்தவர் இறையச்சம் மிகுந்தவரே.'' (49:13)

என்ற வசனத்தை முஹம்மத்(ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
கூடியிருந்த குறைஞகளிடம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்,
''நான் உங்களோடு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?”
என்று கேட்டார்கள். அதற்கு குறைஷிகள்
''நல்லது. நீங்கள் சிறந்ததொரு சகோதரர்; மரியாதைக்குரிய சகோதராின் மகன்''
என பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்,
''இன்று நீங்கள் பதிலளிக்க வேண்டியது எதுவுமில்லை; நீங்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள்'' என்று கூறினார்கள்.

    சகோதரர்களே... குர்ஆன் மற்றும் அண்ணல் நபி அவர்கள் கூறிய வழிமுறைகள் மூலம் பகைகையை பற்றி ஆராய்ந்தோம். அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்
    இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (25:73)

    மேலே கூறப்பட்ட திருவசனப்படி மன்னிக்கப் போகிறீர்களா? இல்லை இன்னும் அவர் அது செய்தார் இது செய்தார் என்று கூறப்போகிறீர்களா?

    தினமும் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே... நாம் ஒருவரை மன்னிக்காமல் நம்மை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா?

    ஆகவே சகோதரார்களே அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான். நாம் அனைவரும் பகைமையை மறந்து அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்வோமாக.

கவிஞர் இ. முபாரக் முக புத்தகத்திலிருந்து விலக முடிவு .!

ஆபாசம் நிர்வாணம் அருகதையற்ற படங்கள் அவ்வப்போது வந்திருப்பதால் வெறுத்து  அந்த முகபுத்தகத்திலிருந்து விலக முடிவு 
இதனால் கவிஞர் தகாத எழுத்துக்களால் பலரை திட்டியும் எழதி உள்ளார் இருப்பினும் தொடர்ந்து நீடித்து வருவது மட்டுமில்லாமல் .தன்னுடைய சுவர்பக்கத்திளிருந்து பல நண்பர்களுக்கு தான் அனுப்பியதாக அந்த ஆபாசபடங்கள் சேர்ந்துள்ளது . அதனை வருத்தம் தெர்வித்து முக புத்தகத்தில் எழுதியும் மீண்டும் மீண்டும் தானாகவே அவருடைய பெயருடன் தானாக அமைந்து விடுவதால் . இந்த அவப்பெயர் வராமலிருக்க இந்த முகப்புத்தகத்திளிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இன்று உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் முகப்புத்தகம்
பலருக்கு அவப்பெயர் பெற்று தந்திருப்பதால் அதிலிருந்து விலக திட்டவட்ட அறிவிப்பு . 
சமீபத்தில் சுவர்பக்கத்தில் ஏகப்பட்ட ஆபாச நிர்வாண படங்கள் வந்திருந்தது அதனால் அனுப்பிய பலரை  தகாத வார்த்தைகளை உபயோகித்து திட்டி உள்ளதால் அவர்களிடம் மன்னிப்பு கோரி வருந்தியுள்ளார் . சமீபத்தில் முக புத்தகத்தில் நண்பர்களுக்கு அவர் எழுதிய கடிதம் கீழே படிக்கவும் .
அளவற்ற அருளாளனின் திருப்பெயரால் !
சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம் அனைவர் மீது ஏக வல்லோன் பொழிபவனாய்!
அன்பார்ந்த சகோதரர்களே , சகோதிரிகளே ,அருமைத்தோழர்களே ,என்னை உயர்வை கருதும் நண்பர்களே வாசகர்களே !நான் ஒரு ஆசிரியன் ,எழுத்தாளன் ,கவிஞன். அறிந்த பண்பாளர்களே ...
தங்களுக்கு இந்த இனியவனின் அன்பான வேண்டுகோள் ! இந்த வலைப்பதிவில் முறையற்று தவறாக ஆபாச படங்கள் , நிர்வாண படங்கள் அவ்வப்போது சுவர் பக்கத்த
ில் அனுப்பிவிடுவதால் இதனை தவிர்க்கும் நோக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன் இத்தருணத்தில் சிலரால் எனக்கும் சில ஆபாச படம் மீண்டும் அனுப்பி இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது மேலும் நான் அனுப்பாமல் என்னுடைய சுவர் பக்கத்திலிருந்து எப்படி நழுவி என்னுடை நண்பர்களுக்கு சென்றடைந்தது என்பதனை ஆராய்ந்துக் கொண்டுள்ளேன் இருப்பினும் தவறுதலாக , இதை என் சுவர் பக்கத்திலிருந்து துண்டிக்க நினைக்கையில் முயற்சிகள் மேற்கொண்டப்போது தவறுதலாக சென்றடைந்ததா? இல்லை நான் ப்ரொவ்சிங் சென்டர் அவர்களால் திட்டமிட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதா கண்டறிய முகப் புத்தக நிறுவனத்தில் புகார் தெரிவித்த நிலையில் ,தங்களுக்கு என் மூலியமாக தவறுதலாக ஏதாவது வந்திருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் . இதுப்போன்ற தீய செயல்களில் ஈடுபடுபவன் நானல்ல என்பதையும் ஒழுக்கம் விழுப்பம் தரும் நன்கறிந்தவன் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன் . தங்களைப்போன்று என்னிடத்தில் இதுப்போன்ற படங்கள் வந்திருந்ததால் அவர்களை தகாத வார்த்தைகளால் அவர்கள் உள்ளத்தை நோகடித்திறுக்கிறேன் தற்போது இந்த அவல செயலால் இந்த தவறு எவரும் உணர்ந்து செய்வதில்லை அது வோர் விழ கிருமி தவறுதலாக அதுவாக பரவிகொண்டிருப்பதையும் பனிரெண்டு வயசு சிறுமி மூலம் நான் அறிந்தேன் . ஆங்கிலம் எனக்கு துல்லியமாக அறியாத பட்சத்தில் . பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் இருப்பினும் நான் வேண்டுமென்று திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை . இதனை இறைவன் அறிவான் .மேலும் இதுப்போன்ற செயல்களால் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேறு எவராவது முயற்சிக்கிறார்களா கடவுச்சொல் வேறு எவருக்காவது தெரிந்திருக்கிறதா ?தெரியவில்லை . இருப்பினும் இதனை வருந்தி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் . இருப்பினும் இது சில அன்பர்களால் விநியோகம் செய்ய முனைபவர்கள் அனைவருக்கும் அனுப்பாமல் தங்களுடைய நபருக்கு மட்டும் அனுப்பினால் நன்றாகிருக்கும் . இதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் தயவு செய்து இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளவும் .

இணைய இணைப்பு(INTERNET) எப்படி இயங்குகிறது ?


தொகுப்பு :இதனை சேகரித்து வழங்கியவர் : சகோதரர் .அமானுல்லா 



எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும் அதிவேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.
நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.
இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

அதென்ன தகவல் பாக்கெட்?
இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப் படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப் பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன. ஒவ்வொரு ஹெடரிலும் "செக்சம்' (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது.
இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், "டொமைன் நேம் சர்வர்' (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.

வாசகருக்கு ஆசிரியரின் வேண்டுகோள்!

எல்லாப்புகழும் ஏகவல்லோன் ஒருவனுக்கே...!
அஸ்ஸலாமு அலைக்கும் !

அன்பார்ந்த வாசகப்பெருமக்களே...சகோதரர்களே... சகோதரிகளே...தங்கள் அனைவருக்கும்
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவுட்டமாக!(ஆமின்).

இந்த வளைப்பதிவு தவறாக முரணான விமர்சனத்தை எழுதி எதாவது முரையற்ற ஒன்றை எழுதியிருந்தால் அதை இந்த வளைப்பதிவு ஆசிரியரிடம் தொடர்புக்கொண்டு தெரிவித்தால் அதனை ஏற்று பிழை இருப்பினும் தவறாக முறையற்ற கருத்துக்கள் வெளியிட்டிருந்தால் அதனை ஏற்று உடனே தவறை ஏற்று திருத்தப்படுவது மட்டுமின்றி தொடர்புடைய நபர் வசம் மண்ணிப்பையும் வருத்தத்தையும் சொல்லப்படும் கேட்கப்படும். ஆகையால் எவராவது சொல்லும் தவறான வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த வலைப்பதிவு சமுதாய நன்னோக்கில் உங்களில் ஒருவராக இருந்து செயல்பட்டுவருவதையும் தங்களின் ஒட்டு மொத்த நபர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு என்பதையும் மீண்டு ஒரு முறை நினைவுபடுத்திக்கொள்ள பதிவு செய்கிறேன் . இந்த வலைப்பதிவை கேடு விளைவிக்க கருதும் கேடு கெட்டவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கட்டும். இந்த வலைப்பதிவை அழிக்க நினைத்தால் தன்னை அழித்துக் கொள்பவனாகிருப்பான். மேலும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம். தவறாக எழுதியிருந்தால் அந்த சான்றுவை கொண்டு எதுவேண்டுமானாலும் ஆசிரியரிடம் கேட்கலாம்.ஆகவே.. இப்படி எழுதி இருக்கிறது , அப்படி எழுதி இருக்கிறது செவி மூலம் அறிந்து கேள்விகளை கேட்பதைவிட அவர்கள் சொல்வது உண்மையானதா? உண்மைக்கு புறமானதா? நன்கறிந்து மற்றவர்களிடம் தெரிவிப்பதும் நல்லதாகும். தீய நோக்கத்துடன் தவறான சிந்தனை கொள்கையை வைத்துக்கொண்டிருப்பவர் அந்த எண்ணத்தில் மாற்றிக்கொள்ளவேண்டும். மேலும் தங்களுடைய ஆலோசனைகளை இந்த ஆசிரியருக்கு வழங்கி இந்த வளைப்பதிவு வளர்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்வதுடன். நீங்களும் இதில் ஒருவராக பங்களிப்பு தந்து மக்கள் சேவைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். ஊர் ,நம்முடைய சமுதாயம் வளமாகிருக்க நம்முடைய தோள் மக்களை தாங்கட்டும் ஒருங்கிணைந்து செயல்பட ஒற்றுமை கரத்தை உயர்த்தட்டும்.ஊர் வளம்பெற என்றென்றும் இறைவனிடம் பிரார்திப்போம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிப்போம்.
"அல்ஹம்துலிலாஹ்" எல்லாவற்றையும் நிர்வகிப்பவனும் ஆட்டிப்படைப்பவனும் அவனே...!இன்பத்தை தந்து இரசிப்பவனும் துன்பத்திலும் துயர்வை தந்து சோதிப்பவனும் பலமிக்கவனைவிட பலமானவனும் பலகீனமான நம்மை நேர்வழி அளிப்பவனும் அவனே.. ஆகவே ! நீங்கள் நலமாக வாழ நான் வேண்டிக்கொள்கிறேன். நான் வளமாக வாழ பிரார்த்தனை செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவன். ஆசிரியர் மக்கள் குரல்.

கூனிமேடு மக்கள் குரல்!: புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் வீடு விற்பனைக்...

கூனிமேடு மக்கள் குரல்!:

புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் வீடு விற்பனைக்...
: புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் வீடு விற்பனைக்கு உள்ளது . புதுவை முத்தியால் பேட்டை சோலை நகர் பகுதியில் நல்ல நிலையில் அமைந்திருக்கும் ஓ...

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்